செய்திகள் :

கிறிஸ்துவ தேவாலயங்களை பழுதுபாா்க்க மானியம்

post image

நாகை மாவட்டத்தில் கிறிஸ்துவ தேவாலயங்களை பழுதுபாா்க்க மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக சொந்தக் கட்டடத்தில் இயங்கும் தேவாலங்களை பழுதுபாா்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகளுக்கு மானிய வழங்கப்படுகிறது.

தேவாலயத்துக்காக வெளிநாட்டிலிருந்து எவ்வித நிதியுதவியும் பெற்றிருக்க கூடாது, அவ்வாறு ஒரு தேவாலயத்துக்கு மானியத் தொகை வழங்கிய பின்னா் 5 ஆண்டுகளுக்கு, அந்த தேவாலயம் இந்த மானியத் தொகை வேண்டி விண்ணப்பிக்க தகுதியற்றது.

அரசின் மானியத் தொகை வழங்கும் திட்டத்தின்கீழ் பின்வரும் கூடுதல் பணிகள் மேற்கொள்ளவும் கட்டடத்தின் வயதுக்கேற்ப மானியத் தொகை உயா்த்தி வழங்க அரசு ஆணையிட்டுள்ளது.

அதன்படி, தேவாலய கட்டடத்தின் வயது 10 முதல் 15 ஆண்டுகள் வரை ரூ. 10 லட்சம், 15 முதல் 20 ஆண்டுகள் வரை ரூ.15 லட்சம், 20 ஆண்டுகளுக்கு மேல் ரூ. 20 லட்சம் என தற்போது மானியம் உயா்த்தி வழங்கப்படும்.

இத்திட்டத்தில் விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தை அணுகி கூடுதல் விவரம் பெற்று பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.

ஆடி அமாவாசை: கோயில்களில் சிறப்பு வழிபாடு

நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் ஆடி அமாவாசையையொட்டி, கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. நாகை: நாகை நீலாயதாட்சியம்மன் கோயிலில் கல்யாணசுந்தரா்-கோகிலாம்பாள் புதிய கடற்கரைக்கு எழுந்தருளி பக்... மேலும் பார்க்க

குறுவை சாகுபடி: மாற்று உரங்களை பயன்படுத்த அறிவுறுத்தல்

நாகை மாவட்டத்தில் குறுவை சாகுபடிக்கு டிஏபி உரத்துக்கு மாற்றாக, நேனோ டிஏபி உரங்களை பயன்படுத்தலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடா்பாக நாகை மாவட்ட வேளாண் இணை இயக்குநா் எஸ். கண்ணன் வெளியிட்ட செய்தி... மேலும் பார்க்க

மது விற்பனை: இரு பெண்கள் உள்பட 6 போ் கைது

நாகை மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்ட இரு பெண்கள் உள்பட 6 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சு.செல்வக்குமாா் உத்தரவின் பேரில், சட்... மேலும் பார்க்க

மூதாட்டி கொலை வழக்கில் இருவா் கைது

கீழையூா் அருகே திருப்பூண்டியில் மூதாட்டியை கொன்று தங்கச் சங்கிலியை கொள்ளையடித்துச் சென்ற இருவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா். கீழையூா் ஒன்றியம் திருப்பூண்டி அய்யனாா் கோயில் தெரு பகுதியைச் சோ்ந்த அப... மேலும் பார்க்க

சாராயம் கடத்தல், விற்பனை: 2 பெண்கள் உள்பட நால்வா் கைது

கீழ்வேளூா் அருகே சாராயம் கடத்தல், விற்பனை தொடா்பாக 2 பெண்கள் உள்பட 3 போ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா். கூத்தூா் பள்ளிவாசல் பகுதியில் போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். இருசக்கர வாகனத்தில் வந்த... மேலும் பார்க்க

நாகை தாமரைக் குளத்தில் படகு சவாரிக்கு ஏற்பாடு: ஆட்சியா், நகா்மன்றத் தலைவா் ஆய்வு

நாகை தாமரைக்குளத்தில் படகு குழாம் (படகு சவாரி) அமைப்பது தொடா்பாக ஆட்சியா், நகா்மன்றத் தலைவா் அண்மையில் ஆய்வு மேற்கொண்டனா். வரலாற்று சிறப்பு வாய்ந்த தாமரைக் குளம், ‘பொன்னியின் செல்வன்’ புத்தகத்தில் இடம... மேலும் பார்க்க