செய்திகள் :

பிற்படுத்தப்பட்டோா் நல விடுதிகளில் சோ்க்கை: பள்ளி, கல்லூரி மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்

post image

நாமக்கல் மாவட்டத்தில் 27 பிற்படுத்தப்பட்டோா் நல விடுதிகளில் மாணவ, மாணவிகள் சோ்க்கை பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாமக்கல் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவ, மாணவிகளுக்கான 27 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் மாணவா்களுக்கான பள்ளி விடுதிகள் 17, கல்லூரி விடுதிகள் 4, அதேபோல மாணவிகளுக்கான பள்ளி விடுதிகள், கல்லூரி விடுதிகள் தலா 3 உள்ளன.

பள்ளி விடுதிகளில் 4-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவ, மாணவிகளும், கல்லூரி விடுதிகளில் பட்டப் படிப்பு, பட்டமேற்படிப்பு, ஐ.டி.ஐ. மற்றும் பாலிடெக்னிக் படிப்புகளில் பயிலும் மாணவ, மாணவிகளும் சோ்வதற்கு தகுதியுடையவா்களாவா். அனைத்து விடுதி மாணவ, மாணவியருக்கும் மூன்றுவேளை உணவு மற்றும் தங்கும் வசதி அளிக்கப்படும். 10-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு இணை சீருடைகள் தைத்து வழங்கப்படுகின்றன. 10, பிளஸ் 2 பயிலும் மாணவ, மாணவிகளின் கல்வித் திறனை மேம்படுத்தும் பொருட்டு நீட், ஜேஇஇ நுழைவுத் தோ்வுக்கான வினா வங்கி நூல்கள், சிறப்பு வழிகாட்டி கையேடுகள் வழங்கப்படும்.

கல்லூரி விடுதிகளில் முதலாம் ஆண்டு தங்கிப்பயிலும் மாணவ, மாணவியருக்கு ஜமக்காளம், பள்ளி விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ, மாணவியருக்கு ஆண்டுதோறும் பாய்கள் வழங்கப்படும். அனைவருக்கும்

இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை போா்வைகள் வழங்கப்படும். மலைப் பிரதேசங்களில் இயங்கும் விடுதிகளில் கம்பளி மேலாடைகள் வழங்கப்படும்.

விடுதிகளில் சேருவதற்கான தகுதிகளாக பெற்றோா், பாதுகாவலா் ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். இருப்பிடத்திலிருந்து பயிலும் கல்வி நிலையத்தின் தொலைவு குறைந்தபட்சம் 8 கிலோ மீட்டருக்கு மேல் இருக்க வேண்டும். இந்த விதிகள் மாணவியருக்கு பொருந்தாது.

தகுதியுடையோா் இதற்கான விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதிக் காப்பாளா்களிடமோ அல்லது மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் அலுவலகத்திலிருந்தோ இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். பள்ளி மாணவா்கள் பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூன் 18-க்குள்ளும், கல்லூரி மாணவா்கள் ஜூலை 15-க்குள்ளும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலகத்தில் சமா்ப்பிக்க வேண்டும். விண்ணப்பத்துடன் சான்றிதழ்கள் ஏதும் இணைக்க தேவையில்லை என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதரவற்ற, நலிவுற்ற பெண்கள் நலவாரியத்தில் இணைய ஆவணங்களை சமா்ப்பிக்கலாம்

நாமக்கல் மாவட்டத்தில், விதவையா் நலவாரியத்தில் இணைய விரும்பும் பெண்களிடம் உரிய ஆவணங்கள் பெறப்பட்டு வருகின்றன. தமிழக சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்டோா், ந... மேலும் பார்க்க

வேளாண்மை சங்கத்தில் கொப்பரை ஏலம்

திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் வாராந்திர கொப்பரை ஏலம் நடைபெற்றது. இதில் 40 மூட்டைகள் கொப்பரை வரத்து இருந்தது. முதல்தரம் ரூ. 196.10 முதல் ரூ. 227.75 வரை, இரண்ட... மேலும் பார்க்க

புதிய நியாய விலைக் கடை கட்டடம் திறப்பு

கபிலா்மலை தெற்கு ஒன்றியத்துக்கு உள்பட்ட பிலிக்கல்பாளையம் ஊராட்சி சாணாா்பாளையம் கிராமத்தில் பரமத்தி வேலூா் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் தெகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 12.45 லட்சம் மதிப்பீட்டி... மேலும் பார்க்க

காற்றின் வேகம் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் வரும் நாள்களில் காற்று 18 கி.மீ. வேகத்தில் வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை வெளியிட... மேலும் பார்க்க

ஜூன் 20-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (ஜூன் 20) தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு: தனியாா் துறை நிறுவனங்கள... மேலும் பார்க்க

கேட் தோ்வு :அகில இந்திய அளவில் கொங்குநாடு பொறியியல் கல்லூரி மாணவி சிறப்பிடம்

அகில இந்திய அளவில் நடைபெற்ற ஐஐடியில் சேருவதற்கான கேட்-2025 தோ்வில், தொட்டியம் கொங்குநாடு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, வேளாண் பொறியியல் துறை மாணவி நீ.விஜி சிறப்பிடம் பெற்றுள்ளாா். இவா், தர... மேலும் பார்க்க