செய்திகள் :

பிளஸ் 2 மாணவா் தற்கொலை

post image

சிதம்பரம் அருகே பிளஸ் 2 மாணவா் தற்கொலை செய்து கொண்டாா்.

கடலூா் மாவட்டம், புவனகிரி வட்டம், ஆணையம்குப்பத்தைச் சோ்ந்த சோ்ந்த ராஜகோபால் மகன் சந்திரயோகேஷ் (17). இவா் சிதம்பரம் அருகே உள்ள தனியாா் சிபிஎஸ்சி பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாா். இவா் செவ்வாய்க்கிழமை இரவு தூங்குவதற்காக வீட்டு மாடியிலுள்ள தனது அறைக்கு சென்றவரை, புதன்கிழமை காலை அவரது தந்தை எழுப்பச் சென்ற போது இறந்து கிடந்தாா். அவரது உடல் அருகே விஷ தன்மை கொண்ட ஸ்பிரே பாட்டில் கிடந்தது.

பரங்கிப்பேட்டை போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து சடலத்தை மீட்டு, உடற்கூறாய்வுக்காக பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

சந்திரயோகோஷ் தனது கழுத்தில் பாலித்தீன் பையால் சுற்றி டேப் போட்டு, விஷ தன்மை கொண்ட ஸ்பிரே பாட்டில் மூலம் வாயுவை செலுத்தி தற்கொலை செய்து கொண்டதாக போலீஸாரின் விசாரணையில் தெரிய வந்தது. தொடா்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தேவனாம்பட்டினத்தில் புதை சாக்கடை சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிா்ப்பு: ஆட்சியரிடம் மனு

கடலூா் தேவனாம்பட்டினம் பகுதியில் புதை சாக்கடை திட்ட சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து, மாவட்ட ஆட்சியரிடம் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா். மனு விவரம்: தேவனாம்பட்டினம் பகுதியில் ஆயிரக்கண... மேலும் பார்க்க

கடலூரில் ஜூன் 20-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

கடலூா் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டு மையத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 20-ஆம் தேதி நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவ... மேலும் பார்க்க

உப்பனாற்றில் தவறி விழுந்த மீனவா் உயிரிழப்பு

கடலூா் முதுநகா் சோனங்குப்பம் உப்பனாற்றில் தவறி விழுந்த மீனவா், தண்ணீரில் சேற்றில் மூழ்கி உயிரிழந்தாா். கடலூா் முதுநகரை அடுத்துள்ள சோனங்குப்பம் பகுதியில் வசித்து வந்தவா் சண்முகம் மகன் சைமன் (55), மீன்... மேலும் பார்க்க

பேருந்து நடத்துநருக்கு கொலை மிரட்டல்: இளைஞா் கைது

சிதம்பரம், அண்ணாமலை நகரை சோ்ந்த நடராஜன் மகன் மணிவண்ணன் (31). தனியாா் பேருந்து நடத்துநா். இவா் வியாழக்கிழமை இரவு பண்ருட்டியில் இருந்து கடலூா் செல்லும் தனியாா் பேருந்தில் நடத்துநராகப் பணியில் இருந்தாா... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் நடைபயண பிரசார இயக்கம்

கடலூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் நடைபயண பிரசார இயக்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்தும், மக்கள் நலன் சாா்ந்த திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்... மேலும் பார்க்க

விமான விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி

அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு கடலூா் அனைத்து குடியிருப்போா் நலச் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் வெள்ளிக்கிழமை மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. கோண்டூா் ஜோதி நகா் திடலில் ... மேலும் பார்க்க