செய்திகள் :

புதுச்சேரி உள்பட 5 இடங்களில் அபுல் கலாம் ஆசாத் ஆசியன் ஆராய்ச்சி மையம்!

post image

நாட்டில் புதுச்சேரி உள்ளிட்ட 5 இடங்களில் மெளலானா அபுல் கலாம் ஆசாத் ஆசியன் ஆராய்ச்சி மையம் அமைய உள்ளது.

இப்போது மத்திய அரசின் கலாசாரத் துறையின் கீழ் இந்த மையம் மேற்கு வங்கத்தில் செயல்பட்டு வருகிறது. இதேபோன்று புதுச்சேரி உள்ளிட்ட 5 இடங்களில் விரைவில் இந்த ஆராய்ச்சி மையம் செயல்பட உள்ளது.

புதுவை சுற்றுலாத் துறை அமைச்சர் க. லட்சுமிநாராயணனை திங்கள்கிழமை சந்தித்த இந்த மையத்தின் இயக்குநர் சரூப் பிரசாத் கோஷ், இதற்காக புதுச்சேரி அரசின் ஒத்துழைப்பைக் கோரினார்.

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இந்தியாவின் பங்களிப்பு எப்படி இருந்தது, சோழ பேரரசின் சாம்ராஜ்ஜியம் ஆசிய நாடுகளில் எப்படி பரவியது உள்ளிட்ட ஆராய்ச்சிகளை இந்த மையம் விரிவாக ஆராய்ச்சி செய்யும். மேலும் இது தொடர்பாக சர்வதேச கருத்தரங்கு உள்ளிட்டவை அடிக்கடி நடைபெறும்.

மேலும், இந்த மையத்தின் இயக்குநருடன் மேற்கு வங்கத்தில் மத்திய அரசின் கலாசாரத்துறையின் கீழ் இயங்கும் சமூக மற்றும் கலாசார படிப்புகள் மையத்தின் இயக்குநர் ஹரிதம் முகர்ஜியும் வந்திருந்தார்.

இந்த இரண்டு அமைப்புகள் மற்றும் புதுச்சேரி அரசின் சுற்றுலா மற்றும் கலை பண்பாட்டுத்துறையும் இணைந்து காலனி ஆதிக்கத்துக்குப் பிந்தைய அரிக்கமேடு தொடர்பான ஒருநாள் ஆராய்ச்சி தேசிய கருத்தரங்கை செப்டம்பர் 14 ஆம் தேதி அரிக்கன்மேடு பகுதியில் நடத்த உள்ளன.

இது தொடர்பாகவும் அமைச்சர் லட்சுமிநாராயணனை இக்குழு சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியது. இக்குழுவுடன் அரவிந்தர் ஆசிரமத்தைச் சேர்ந்த கோஸ்வாமி உடனிருந்தார்.

இதையும் படிக்க | ஆம்புலன்ஸ் ஓட்டுநரை தாக்கிய விவகாரம்: அதிமுகவினர் 14 பேர் மீது வழக்குப்பதிவு!

Abul Kalam Azad Asian Research Centre to be set up in 5 locations including Puducherry

நல்லகண்ணு உடல் நிலையில் நல்ல முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கை

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் ஆா். நல்லகண்ணு உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு நாளில் பூரண நலம் பெற்று வீடு திரும்புவார் என சென்னை நந்தனம் வெங்கடேஸ்வரா மருத்துவமன... மேலும் பார்க்க

சுதர்சன் ரெட்டிக்கு வாக்களிக்க வேண்டும்: தொல்.திருமாவளவன்

சென்னை: இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்கக் கூடிய வலிமை உள்ள சுதர்சன் ரெட்டிக்கு வாக்களிக்க வேண்டும் என விசிக தலைவர் தொல்.திருமாவளன் தெரிவித்தார். குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் இந்தியா கூட்டண... மேலும் பார்க்க

திமுக எம்.பி.க்கள் தவறாமல் சுதர்சன் ரெட்டிக்கு வாக்களிக்க வேண்டும்: கனிமொழி

சென்னை: குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் திமுக எம்.பி.,க்களும் அனைவரும் தவறாமல் வருகை தந்து நீதியரசர் சுதர்சன் ரெட்டிக்கு வாக்களிக்க வேண்டுமென திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவா் கனிமொழி அறிவுறுத்தினாா்.... மேலும் பார்க்க

அரசியலமைப்பை பாதுகாக்க முழுமூச்சுடன் செயல்படுவேன்: சுதர்சன் ரெட்டி

சென்னை: குடியரசு துணைத் தலைவராகும் வாய்ப்பு கிடைத்தால், அரசியலமைப்பை பாதுகாக்க முழுமூச்சுடன் செயல்படுவேன் என்று ‘இந்தியா’கூட்டணியின் குடியரசு துணைத் தலைவா் வேட்பாளா் சுதா்சன் ரெட்டி உறுதி அளித்தாா்.செ... மேலும் பார்க்க

அரசியலமைப்பு சட்டமே ஆபத்தில் சிக்கியுள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின்

மத்திய பாஜக அரசு அரசியல் எதிரிகளை பழிவாங்க புலனாய்வு அமைப்புகளை பயன்படுத்திக் கொண்டுள்ள நிலையில், அரசியலமைப்பு சட்டமே ஆபத்தில் சிக்கியுள்ள நிலையில், இந்திய ஜனநாயகத்தைக் காக்க, நாடாளுமன்ற மரபுகளைக் கா... மேலும் பார்க்க

ஹைட்ரோகார்பன் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம்: அமைச்சர் தங்கம் தென்னரசு

தமிழ்நாட்டில் எந்த பகுதியிலும் ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கான அனுமதியை தமிழ்நாடு அரசு வழங்காது என தமிழ்நாடு நிதி மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். தமிழ்நாடு அரசு, கடந்த... மேலும் பார்க்க