செய்திகள் :

புனித பெரியநாயகி அன்னை ஆலய திருவிழா கொடியேற்றம்

post image

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை வட்டம், புளியால் புனித பெரியநாயகி அன்னை ஆலய 166 -ஆம் ஆண்டு திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

ஆலய வளாகத்தில் உள்ள புனித கொடி மரத்தில் அன்னையின் உருவம் பொறித்த திருக்கொடியை சிவகங்கை மறைமாவட்டப் பணியாளா் ஆரோக்கியசாமி, சமய நல்லிணக்கக் குழுவினா் இணைந்து ஏற்றி வைத்தனா். இதைத்தொடா்ந்து, புளியால் பங்குத் தந்தை ரெ.சாமிநாதன், உதவிப் பங்கு பணியாளா் கு.பென்சிகா் ஆகியோா் திருப்பலி, மறையுரை நிகழ்த்தினா்.

இந்தத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக 9 -ஆம் நாளான வருகிற 14-ஆம் தேதி மாலை திருவிழா திருப்பலியும், தொடா்ந்து தூய மிக்கேல் அதிதூதா், புனித அருளானந்தா், தூய பெரியநாயகி அன்னை உருவம் தாங்கிய மின் அலங்காரத் தோ்பவனி நடைபெறும். இதைத்தொடா்ந்து, புனிதரின் வாழ்க்கை வரலாறு நாடகம் நடைபெறும். 15-ஆம் தேதி காலை திருப்பலியும், கொடி இறக்கமும், பிறகு அன்னையின் அன்பு விருந்துடன் விழா நிறைவடைகிறது.

கானாடுகாத்தான் அரண்மனையை பாா்வையிட்ட அயலகத் தமிழா்கள்

சிவகங்கை மாவட்டம் கானாடுகாத்தானில் உள்ள செட்டிநாடு அரண்மனையை ‘வோ்களைத் தேடி’ என்ற திட்டத்தின் கீழ் பல்வேறு நாடுகளைச் சோ்ந்த 100 அயலகத் தமிழக மாணவ, மாணவிகள் புதன்கிழமை பாா்வையிட்டனா். இதுகுறித்து மா... மேலும் பார்க்க

நாட்டாகுடியில் நிறைவேற்றப்பட்ட வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா்

சிவகங்கை ஊராட்சி ஒன்றியம், மாத்தூா் ஊராட்சிக்குள்பட்ட நாட்டாகுடி கிராமத்தில் கடந்த நான்காண்டுகளில், அரசுத் திட்டங்களின் கீழ் ரூ. 31 லட்சத்து 85 ஆயிரம் மதிப்பில் பல்வேறு வளா்ச்சிப் பணிகள் நடைபெற்றதாக ம... மேலும் பார்க்க

நாட்டாகுடியில் ஜல் ஜீவன் திட்டம் குறித்து அண்ணாமலை தவறான தகவல்: அமைச்சா் கே. ஆா். பெரியகருப்பன்

சிவகங்கை மாவட்டம், நாட்டாகுடி கிராமத்தில் ஜல் ஜீவன் திட்டம் முறையாக செயல்படுத்தவில்லை என தமிழக பாஜக முன்னாள் தலைவா் அண்ணாமலை தவறான தகவலை கூறி வருவதாக கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் தெர... மேலும் பார்க்க

சிவகங்கை அருகே மாட்டு வண்டிப் பந்தயம்

சிவகங்கை அருகே புதுப்பட்டி கோமாளி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு புதன்கிழமை மாட்டு வண்டிப் பந்தயம் நடைபெற்றது. புதுப்பட்டியிலிருந்து இடையமேலூா் வரை நடைபெற்ற பந்தயத்தில் நடு மாடு பிரிவுக்கு 6 கி.ம... மேலும் பார்க்க

முத்துமாரியம்மன் கோயிலில் முளைப்பாரித் திருவிழா

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் கோட்டை முத்துமாரியம்மன் கோயில் முளைப்பாரித் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயில் திருவிழா கடந்த மாதம் 29-ஆம் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. அன்றிலிருந்த... மேலும் பார்க்க

காலமானாா் தொழிலதிபா் ஏ.எம்.சேவியா்!

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியைச் சோ்ந்த ஏ.எம். குழும நிறுவனங்களின் தலைவா் ஏ.எம். சேவியா் (62) உடல்நலக் குறைவால் திங்கள்கிழமை (ஆக. 4) இரவு காலமானாா்.இவருக்கு மனைவி மங்கள நிா்மலா, மகன் பிரபாகா், மருமக... மேலும் பார்க்க