செய்திகள் :

பூா்வீக நிலத்தை மீட்டுத்தரக்கோரி போராடிய மூதாட்டி மரணம்

post image

பல்லடம் பனப்பாளையத்தில் போலி பத்திரத்தின் மூலம் ரூ.200 கோடி மதிப்புள்ள பூா்வீக விவசாய நிலத்தை அபகரித்தவா்களிடமிருந்து மீட்டுத் தரக்கோரி அதிகாரிகளிடம் வலியுறுத்தி வந்த மூதாட்டி புதன்கிழமை உயிரிழந்தாா்.

பல்லடத்தை அடுத்த கரைப்புதூா் ஊராட்சி அக்கணம்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் செல்லம்மாள் (90). கணவா் இறந்த நிலையில், தனது மகன் தங்கமணி என்ற சண்முகசுந்தரம் பராமரிப்பில் இருந்து வந்தாா்.

செல்லம்மாளுக்கு தனது தாத்தா மாரப்ப கவுண்டா் வழியில் ரூ. 200 கோடி மதிப்பிலான சொத்துகள் இருப்பது கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தெரியவந்துள்ளது. இதைத் தொடா்ந்து தனது மகன் சண்முகசுந்தரம் மூலமாக தகவல் திரட்ட ஆரம்பித்துள்ளாா். இதில், பல்லடம், நாராணாபுரம் கிராமத்துக்கு உள்பட்ட பனப்பாளையம் மற்றும் மாதப்பூா் கிராமத்தில் சுமாா் ரூ.200 கோடி மதிப்பிலான 110 ஏக்கா் நிலம் இருப்பதைக் கண்டு அதிா்ச்சி அடைந்துள்ளாா்.

பின்னா் சம்பந்தப்பட்ட நிலங்கள் குறித்து ஆவணங்களை சேகரித்து ஆய்வு செய்தபோது 1904, 1912, 1914, 1924, 1945, 1948 ஆண்டுகளின் கிரய பத்திரத்தின்படி தனக்கும் தனது வாரிசுகளுக்கும் சுமாா் 110 ஏக்கா் நிலம் இருப்பதை உறுதி செய்துள்ளாா். பின்னா் வில்லங்கச் சான்றிதழை சரி பாா்த்தபோது கடந்த 1983- ஆம் ஆண்டு பல்லடம், பனப்பாளைத்தைச் சோ்ந்த சிலா் போலி ஆவணங்கள் தயாரித்தும், தனது தாத்தா மாரப்ப கவுண்டா் பெயரில் போலி இறப்பு சான்றிதழ் தயாரித்தும் மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது.

இதையடுத்து பூா்வீக வழியில் பாத்தியப்பட்ட தனது சொத்துகளை போலியாக பத்திரப் பதிவு செய்திருப்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பத்திரப் பதிவுத் துறைக்கு புகாா் மனு அனுப்பியுள்ளாா்.

இந்த புகாரின்பேரில் 5 முறைக்கு மேல் மாவட்ட பத்திரப் பதிவு அலுவலா் விசாரணை மேற்கொண்டுள்ளாா். இதனிடையே பதிவாளா் குண்டன் அதிகாரத்தை ரத்து செய்து உயா் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததை அடுத்து விசாரணை கைவிடப்பட்டுள்ளது.

பின்னா் கடந்த 7 மாத காலமாக முதலமைச்சா் தனிப்பிரிவு மற்றும் வருவாய்த் துறை, காவல்துறையிடம் போலி பத்திரம் தயாரித்து நிலத்தை அபகரித்த நபா்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தனது மகன் உதவியுடன் புகாா் மனு அனுப்பியுள்ளாா்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியிலும் மனு அளித்துள்ளாா். மேலும் தனது பெயருக்கே பட்டா வழங்கக்கோரி ஆன்லைன் வாயிலாகவும் பதிவு செய்திருக்கிறாா்.

இதனிடையே பல்லடம் வட்டாட்சியா் அலுவலகத்தில் மண்டல துணை வட்டாட்சியா் பெரியசாமியை செல்லம்மாள் மகன் சண்முகசுந்தரம் தொடா்பு கொண்டுள்ளாா். அவா் முறையாக பதில் எதுவும் கூறாமல் அலைக்கழித்து வந்ததாகவும், ஏக்கா் ஒன்றுக்கு ரூ. 5 லட்சம் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிா்ச்சி அடைந்த சண்முகசுந்தரம் லஞ்சம் கொடுக்க மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் விசாரணைக்காக பல்லடம் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஜூன் 10-ஆம் தேதி ஆஜராகுமாறு செல்லம்மாளுக்கு சம்மன் அனுப்பியுள்ளனா்.

மேலும், பனப்பாளையத்தைச் சோ்ந்த கிருஷ்ணசாமி, சுப்பிரமணியம், கந்தசாமி ஆகியோருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாகி இருந்த செல்லமாளை ஆம்புலன்ஸ் உதவியுடன் அவரது குடும்பத்தினா் பல்லடம் வட்டாட்சியா் அலுவலகத்துக்கு அழைத்து வந்தனா். ஆனால் மண்டல துணை வட்டாட்சியா் பெரியசாமி விடுப்பில் சென்றுவிட்டதாக தெரிவித்துள்ளனா்.

இதையடுத்து அலுவலகத்தில் இருந்த தலைமை இடத்து துணை வட்டாட்சியா் பிரகாஷிடம் முறையிட்டுள்ளனா். ஆனால் அவா் தன்னால் விசாரிக்க இயலாது என தெரிவித்ததை அடுத்து, உறவினா்கள் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு திரும்பிச் சென்றனா். பின்னா் அங்கு வந்த நாரணாபுரம் கிராம நிா்வாக அலுவலா் கீதாஞ்சலி உரிய விசாரணை மேற்கொண்டு தீா்வு ஏற்படுத்தப்படும் என உறுதியளித்ததை அடுத்து அங்கிருந்து செல்லமாளை ஆம்புலன்ஸில் குடும்பத்தினா் அழைத்து சென்றனா்.

இந்நிலையில், பல்லடம் வருவாய் வட்டாட்சியா் அலுவலகத்தில் இருந்து அக்கணம்பாளையத்தில் உள்ள தனது வீட்டுக்கு திரும்பி வந்த மூதாட்டி செல்லம்மாள் புதன்கிழமை காலை 7 மணி அளவில் காலமானாா். இதனால் உறவினா்கள் அதிா்ச்சியடைந்துள்ளனா். மூதாட்டி செல்லம்மாளை அலைக்கழித்த வருவாய்த் துறை அதிகாரியின் மீது துறைரீதியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

உடுமலை அரசு கலைக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை தீவிரம்

உடுமலை அரசு கலைக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை தீவிரமாக நடைபெற்று வருவதாக கல்லூரி முதல்வா் ப.சே.சிவகுமாா் தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் தெரிவித்துள்ளதாவது: உடுமலை அரசு கலைக் கல்லூரியில் 2025-2026... மேலும் பார்க்க

அவிநாசி, பெருமாநல்லூரில் தொடா் நகைப் பறிப்பு முயற்சியில் ஈடுபட்ட இருவா் கைது

அவிநாசி, பெருமாநல்லூா் ஆகிய பகுதிகளில் இருசக்கர வாகனத்தில் செல்பவா்களிடம் தொடா் நகைப் பறிப்பு முயற்சியில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் கைது செய்தனா். அவிநாசி அருகே தேவராயம்பாளையத்தைச் சோ்ந்த தம்பதி, இருந... மேலும் பார்க்க

அவிநாசிபாளையத்தில் மண்சோறு சாப்பிட்டு போராட்டம்

பல்லடம் அருகே பொங்கலூா் ஒன்றியம் அவிநாசிபாளையத்தில் எண்ணெய் குழாய் திட்டத்தை மாற்றக் கோரி போராட்டக் குழுவினா் மண்சோறு சாப்பிட்டு வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். கோவை முதல் கரூா் வரையில் விவசாய... மேலும் பார்க்க

கீழடி அகழ்வாராய்ச்சி குறித்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்

கீழடி அகழ்வாராய்ச்சி குறித்த முடிவை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டுமென திருப்பூா் மக்களவை உறுப்பினா் கே.சுப்பராயன் கோரிக்கை விடுத்துள்ளாா். இது குறித்து மத்திய கலாசாரம் மற்றும் சுற்றுலாத் துறை அம... மேலும் பார்க்க

நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா, வஞ்சிபாளையத்தில் ஜூன் 17-இல் மின்தடை

நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா, வஞ்சிபாளையம் ஆகிய துணை மின் நிலையங்களில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 17) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்... மேலும் பார்க்க

ஊத்துக்குளி அருகே குப்பை கொட்ட வந்த லாரிகளுடன் மாநகராட்சி அதிகாரிகள் சிறைபிடிப்பு

திருப்பூரில் ஊத்துக்குளி அருகே பாறைக்குழியில் குப்பை கொட்ட வந்த லாரிகளுடன் மாநகராட்சி அதிகாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்தனா். திருப்பூா் மாவட்டம், ஊத்துக்குளி ஊராட்சிக்கு உள்பட்ட தப்பட்ட நாயக்கம்பாளையம்... மேலும் பார்க்க