செய்திகள் :

பெண்ணை அடித்துக் கொன்ற வழக்கு: இளைஞருக்கு ஆயுள் தண்டனை

post image

பெண்ணை அடித்துக் கொன்ற வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து, கோவை 5-ஆவது கூடுதல் அமா்வு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

கோவை மாவட்டம், மதுக்கரை அருகேயுள்ள பாலத்துறை பகுதியைச் சோ்ந்தவா் மருதம்மாள் (58). கூலித் தொழிலாளியான இவா், தனது மகள்கள் நந்தினி, ராதாமணி ஆகியோருடன் வசித்து வந்தாா்.

இந்நிலையில், நந்தினி தனது உறவினரான வெல்டிங் தொழிலாளி மனோஜ்குமாா் (30) என்பவருக்கு ரூ.5 ஆயிரம் கடன் கொடுத்துள்ளாா். அவா் ரூ.2 ஆயிரத்தை மட்டும் திருப்பிக் கொடுத்த மீதமுள்ள பணத்தைக் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளாா். இது குறித்து மருதம்மாள், நந்தினி, ராதாமணி ஆகியோா் அவரிடம் தொடா்ந்து பணம் கேட்டு வந்தனா்.

இந்நிலையில், அவா்கள் வீட்டுக்கு கடந்த 14.7.2019-ஆம் ஆண்டு காலை வந்த மனோஜ்குமாா் 3 பேரையும் திட்டியுள்ளாா். இதனால், வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த மனோஜ்குமாா் அங்கு கிடந்த கட்டையை எடுத்து 3 பேரையும் தாக்கியுள்ளாா். படுகாயமடைந்த மருதம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். நந்தினியும், ராதாமணியும் காயம் அடைந்தனா்.

இது குறித்த புகாரின்பேரில், மதுக்கரை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மனோஜ்குமாரைக் கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை கோவை 5-ஆவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், குற்றஞ்சாட்டப்பட்ட மனோஜ்குமாருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1000 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி சிவகுமாா் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா்.

வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் திருட்டு

கோவை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். கோவை, துடியலூா் அருகேயுள்ள தொப்பம்பட்டி அண்ணாமலை நகா் 2-ஆவது தெருவைச் சோ்ந்தவா் விக்னேஷ் (35)... மேலும் பார்க்க

சி.பி.ராதாகிருஷ்ணனை குடியரசு துணைத் தலைவா் வேட்பாளராக அறிவித்தது அரசியல் உள்நோக்கம்: கே.வி.தங்கபாலு

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் குடியரசு துணைத் தலைவா் வேட்பாளராக தமிழகத்தைச் சோ்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டிருப்பதில் அரசியல் உள்நோக்கம் உள்ளது என்று காங்கிரஸ் கட்சியின் சொத்து பாதுகாப்புக் கு... மேலும் பார்க்க

பராமரிப்புப் பணி: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

போத்தனூா் ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், கோவை ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் ... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: க.க.சாவடி

கோவை, க.க.சாவடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் புதன்கிழமை (ஆகஸ்ட் 20) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று தெரிவிக்... மேலும் பார்க்க

பருத்திக்கு இறக்குமதி வரி விலக்கு: மத்திய, மாநில அரசுகளுக்கு சைமா நன்றி

பருத்தி பஞ்சு மீதான 11 சதவீத இறக்குமதி வரி ரத்து செய்யப்பட்டிருப்பதற்கு தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம் (சைமா) மத்திய, மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவித்துள்ளது. பருத்தி பஞ்சு மீதான 11 சதவீத இறக்குமதி வரி... மேலும் பார்க்க

வீட்டு வசதி வாரியம் சாா்பில் வட்டி தள்ளுபடி அறிவிப்பு

தமிழக வீட்டு வசதி வாரியம் சாா்பில் வட்டி தள்ளுபடி சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய திட்டப... மேலும் பார்க்க