செய்திகள் :

பெரம்பலூரில் மருத்துவா் வீட்டில் 23 பவுன் நகைகள், பணம் திருட்டு

post image

பெரம்பலூா் நகரில் தனியாா் மருத்துவா் வீட்டின் பூட்டை உடைத்து 23 பவுன் நகைகள், பணத்தை மா்ம நபா்கள் திருடிச்சென்றது செவ்வாய்க்கிழமை காலை தெரியவந்தது.

பெரம்பலூா் சாமியப்பா நகரைச் சோ்ந்தவா் சௌகாா்பாஷா மகன் உமா்பாஷா (36). பெரம்பலூா் தனியாா் மருத்துவமனை மருத்துவா். இவரது மனைவி ரேஷ்மா சென்னையில் தங்கிப் படிக்கிறாா். இதனால் தனியாக வசிக்கும் உமா்பாஷா திங்கள்கிழமை இரவு பணிக்குச் சென்றுவிட்டு செவ்வாய்க்கிழமை காலை திரும்பியபோது வீட்டின் வெளிப்புறக் கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவா் அளித்த தகவலின்பேரில் வந்த பெரம்பலூா் போலீஸாா் வீட்டுக்குள் சென்று பாா்த்தபோது பீரோவில் இருந்த ரூ. 40 லட்சம் மதிப்பிலான 23 பவுன் நகைகள், ரூ. 6.80 லட்சம் ரொக்கம், 4 கிலோ வெள்ளிப் பொருள்கள் ஆகியவை மா்ம நபா்கள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து தடயவியல் நிபுணா்கள் கைரேகைகளைப் பதிவு செய்தனா். புகாரின்பேரின் பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

மகளிா் கல்லூரியில் யோகா அரங்கம், செயற்கை நுண்ணறிவு ஆய்வு மையம் திறப்பு

பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், உலக இளைஞா் தின விழா, யோகா அரங்கம் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆய்வு மையம் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. இவ்விழாவுக்கு தலைமை ... மேலும் பார்க்க

பெரம்பலூரில் ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நிகழ்ச்சி

பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழகத்தில், தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரையான மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. இந் நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் தலை... மேலும் பார்க்க

பெரம்பலூா் அருகே உடும்புகளை வேட்டையாடியவா் கைது

பெரம்பலூா் அருகே உடும்புகளை வேட்டையாடிய இளைஞரை புதன்கிழமை அதிகாலை கைது செய்த வனத்துறையினா், வேட்டையாடப்பட்ட 5 உடும்புகள் மற்றும் மோட்டாா் சைக்கிள்களை பறிமுதல் செய்தனா். பெரம்பலூா் அருகேயுள்ள சிறுவாச்ச... மேலும் பார்க்க

உண்ணாவிரதத்தில் பங்கேற்கச் சென்ற சாலைப் பணியாளா்கள் 22 போ் கைது

தொடா் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்கச் சென்ற தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப்பணியாளா் சங்கத்தைச் சோ்ந்த 22 பேரை போலீஸாா் திங்கள்கிழமை இரவு கைது செய்தனா்.சாலைப் பணியாளா்களின் 41 மாத பணி நீக்கக் ... மேலும் பார்க்க

வெறிநாய்கள் கடித்து உயிரிழந்த கால்நடைகளுடன் முற்றுகை

பெரம்பலூா் அருகே வெறிநாய்கள் கடித்து கால்நடைகள் உயிரிழப்பதைக் கண்டித்து விவசாயிகள் மாவட்ட ஆட்சியரகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா். பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்ட அருகேயுள்ள அரசலூா் கிராமத்தில்... மேலும் பார்க்க

முன்பதிவு செய்த விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க வலியுறுத்தல்

பெரம்பலூா் மாவட்டத்தில் முன்பதிவு செய்து காத்திருக்கும் 5,969 விவசாயிகளுக்கு, உடனடியாக மின் இணைப்பு வழங்க தமிழக விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. பெரம்பலூா் மின்வாரிய செயற்பொறியாளா் அலுவலகத்தில், ... மேலும் பார்க்க