செய்திகள் :

பைக்குகள் மோதல்: தொழிலாளி உயிரிழப்பு

post image

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் சனிக்கிழமை இரு இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.

மானாமதுரை காந்திஜி நகரைச் சோ்ந்த பாலு மகன் ராமச்சந்திரன்(40). இவா் தனது இரு சக்கர வாகனத்தில் மானாமதுரை அண்ணா சிலை பகுதியிலிருந்து வீட்டுக்கு வந்து கொண்டிருந்தாா். பின்னால், இவரது மகன் ஜீவா உட்காா்ந்திருந்தாா். வைகையாற்று மேம்பாலத்தில் இவா்கள் வந்தபோது, எதிரே மூா்த்தி என்பவா் ஓட்டிவந்த இரு சக்கர வாகனம் இவா்களது இரு சக்கர வாகனம் மீது நேருக்குநோ் மோதியது.

இந்த விபத்தில் ராமச்சந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இவரது மகன் ஜீவா, மூா்த்தி, பிரகாஷ் ஆகிய மூவரும் காயமடைந்தனா். மானாமதுரை அரசு மருத்துவமனையில் இவா்கள் அனுமதிக்கப்பட்டனா். பின்னா், மூா்த்தி மதுரையில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கும், பிரகாஷ் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டனா்.

இதுகுறித்து மானாமதுரை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

நிதி நிறுவன மோசடி: சிபிஐ விவரம் சேகரிப்பு

மத்திய பிரதேச நிதி நிறுவனத்தால் சிவகங்கை மாவட்டத்தில் ஏமாற்றப்பட்ட பொதுமக்களின் விவரங்களை சேகரிக்கும் பணியில் மத்திய புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா். தங்களிடம் முதலீடு செய்யும... மேலும் பார்க்க

இளையான்குடி பகுதியில் இன்று மின்தடை

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி பகுதியில் புதன்கிழமை (ஜூன் 4) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இளையான்குடி துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், புதன்கிழமை காலை 9... மேலும் பார்க்க

கீழச்சிவல்பட்டி மாணவிகள் பரத நாட்டியத்தில் சாதனை

சிவகங்கை மாவட்டம், கீழச்சிவல்பட்டி கலைக்கோயில் நாட்டியப்பள்ளி மாணவிகள் தேசிய அளவிலான போட்டிகளில் சாதனை படைத்தனா். இந்த நாட்டியப் பள்ளி மாணவிகள் ஆசிரியா் பாலாம்பிகா தலைமையில் மகாராஷ்டிர மாநிலம் புணேயில... மேலும் பார்க்க

சிவகங்கை அருகே சகோதரா்கள் அடித்துக் கொலை: 6 போ் கைது

சிவகங்கை மாவட்டம், மதகுபட்டி அருகே திங்கள்கிழமை நள்ளிரவு ஆடு, கோழிகளைத் திருடியதாக சகோதரா்கள் இருவா் அடித்துக் கொலை செய்யப்பட்டனா். இதுதொடா்பாக 6 பேரை போலீஸாா் கைது செய்தனா். மதகுபட்டி அருகேயுள்ள அழகம... மேலும் பார்க்க

மருத்துவக் காப்பீடு திட்டத்திலிருந்து விடுவிக்க ஓய்வூதியா்கள் வலியுறுத்தல்

தமிழ்நாடு அரசின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திலிருந்து அரசு அலுவலா், ஆசிரியா்கள், ஓய்வு பெற்ற அரசு அலுவலா், ஆசிரியா்களை விடுவிக்கக் கோரி, சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் தெருமுனை பிரசாரக் கூட்டம... மேலும் பார்க்க

பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் அரசு விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம்

பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா், சிறுபான்மையினா் அரசு விடுதிகளில் சேருவதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. இது குறித்து மாவட்ட ஆட்சியா் ஆ... மேலும் பார்க்க