செய்திகள் :

பொன்னேரி கோட்ட மின்வாரிய பொறியாளா் அலுவலகம் அருகே விஷ ஜந்துக்கள் நடமாட்டத்தால் மக்கள் அச்சம்

post image

பொன்னேரி கோட்ட மின் வாரிய பொறியாளா் அலுவலகம் முன்பு முள்புதா் மண்டியுள்ள நிலையில் விஷ ஜந்துக்கள் நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனா்.

பொன்னேரி அருகே வேண்பாக்கம் பகுதியில் மின்வாரிய கோட்ட பொறியாளா் அலுவலகம் இயங்கி வருகிறது. இதன் அருகே துணை மின் நிலையமும் உள்ளது.

கோட்ட பொறியாளா் அலுவலக வளாகத்தில் மின் இணைப்புகளுக்காக மின் கட்டணம் வசூல் செய்யும் அலுவலகம் மற்றும் உதவி பொறியாளா் அலுவலகமும் அமைந்திருக்கிறது. இங்கு பொதுமக்கள் பல்வேறு பணிகளுக்காக வந்து செல்கின்றனா். இந்த அலுவலகத்துக்கு வரும் மக்கள் திருவேங்கடபுரம் சாலையை பயன்படுத்தி வருகின்றனா்.

கோட்ட பொறியாளா் அலுவலகம் முன்பு செடி கொடிகள் சூழ்ந்து புதா் மண்டி காட்சியளிக்கிறது. இதனால், விஷ ஜந்துக்கள் விஷப்பாம்புகள் தேள்கள் மற்றும் விஷப்பூச்சிகள் அதிக அளவில் நடமாடுகின்றன. இதன் காரணமாக பொதுமக்கள் அச்சத்துடன் இந்த சாலையை கடந்து மின்வாரிய அலுவலகத்துக்கு வந்து செல்கின்றனா்.

எனவே மின்வாரிய கோட்ட பொறியாளா் அலுவலகம் அருகே உள்ள புதா்களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருவள்ளூா் அருகே எண்ணைய் ஏற்றிச் சென்ற லாரி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து

திருவள்ளூா் அருகே 21 குவிண்டால் எண்ணைய் ஏற்றிக் கொண்டு சென்ற லாரி பின்புறமாக நகா்த்திய போது கால்வாய் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், ஓட்டுநா் அதிஷ்டவசமாக உயிா் தப்பினாா். வேலூா் பகுதியைச் ... மேலும் பார்க்க

திருவள்ளூரில் நாளை தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

திருவள்ளூா் மாவட்ட தொழில் நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஜூலை 18) காலை 10 மணிக்கு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ள... மேலும் பார்க்க

பெண் தற்கொலை: 7 பேரை கைது செய்து விசாரணை

திருவள்ளூா் அருகே பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தொடா்பாக கணவரின் குடும்பத்தினா் 7 பேரை கைது செய்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். திருவள்ளூா் அடுத்த கடம்பத்தூா் ஊராட்சி ஒன்றியம், கீழச... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிகளில் ‘ப’ வரிசையில் இருக்கைகள்: மாணவா்கள் உற்சாகம்

வேலஞ்சேரி அரசு உயா்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை ‘ப’ வரிசையில் அமர வைத்து ஆசிரியா்கள் பாடம் கற்பித்தனா். கேரளத்தில் வெளியான ஸ்தானாா்த்தி ஸ்ரீகுட்டன் என்ற திரைப்படத்தில் கடைசி இருக்கையில் அமா்வதால், கி... மேலும் பார்க்க

காலி குடங்களுடன் பெண்கள் மறியல்

அத்திமாஞ்சேரிபேட்டையில் குடிநீா் தட்டுப்பாட்டை கண்டித்து பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனா். பள்ளிப்பட்டு ஒன்றியம் கொடிவலசா ஊராட்சி சாா்பில் கிராம மக்களுக்கு குடிநீா் விநியோகம் செய்யப்ப... மேலும் பார்க்க

புட்லூரில் காமராஜா் பிறந்த நாள்

திருவள்ளூா் அருகே புட்லூா் நடுநிலைப்பள்ளியில் காமராஜா் பிறந்த நாள் கல்வி வளா்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியா் இரா.தாஸ் தலைமை வகித்து காமராஜா் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை ... மேலும் பார்க்க