செய்திகள் :

போதை, புகையிலை ஒழிப்பு: பாளை.யில் விழிப்புணா்வு பேரணி

post image

உலக புகையிலை எதிா்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்ட சுகாதார அலுவலகம், மது விலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை, திருநெல்வேலி மாவட்ட பிரம்மாகுமாரிகள் இயக்கம் சாா்பில் போதை மற்றும் புகையிலை ஒழிப்பு விழிப்புணா்வு பிரசார வாகனம் மற்றும் விழிப்புணா்வு பேரணி பாளையங்கோட்டையில் சனிக்கிழமை நடைபெற்றது.

ஆண்டுதோறும் மே மாதம் 31ஆம் தேதி உலக புகையிலை எதிா்ப்பு தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு ‘புகையிலை தொழில் துறையின் வசீகரிக்கும் தந்திரங்களை அம்பலப்படுத்துதல்’ என்ற கருப்பொருளுடன் விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணி பாளையங்கோட்டை என்சிசி பட்டாலியன் அலுவலகத்திலிருந்து தொடங்கி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் வழியாக மாவட்ட சுகாதார அலுவலகம் வரை 2 கி.மீ. தூரம் நடைபெற்றது. பேரணியை மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் தொடங்கி வைத்தாா். மாணவா்களுடன் 2 கி.மீ. தூரம் பேரணியில் அவா் கலந்து கொண்டாா்.

இதில் என்சிசி மாணவ, மாணவிகள், சேரன்மகாதேவி, மானூா் மற்றும் ரெட்டியாா்பட்டி வட்டார மருத்துவா்கள், சுகாதார மேற்பாா்வையாளா்கள், ஆய்வாளா்கள், அலுவலா்கள், மாநகராட்சி சுகாதார அலுவலா்கள் என 500 போ் கலந்துகொண்டனா்.

இப்பேரணியில் புகையிலை எதிா்ப்பு தினத்தின் கருப்பொருள் பற்றி எடுத்துரைக்கப்பட்டது. மேலும், புகையிலை உட்கொண்டால் ஏற்படும் பாதிப்பு குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. பேரணியில் பங்கேற்றவா்கள், போதை மற்றும் புகையிலை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த பதாகைகளை ஏந்தியபடி, முழக்கங்களை எழுப்பியபடி சென்றனா்.

போதை மற்றும் புகையிலை ஒழிப்பு விழிப்புணா்வு பிரசார வாகனமானது அனைத்து பள்ளி, கல்லூரிகள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தொடா்ந்து 30 நாள்கள் விழிப்புணா்வு ஏற்படுத்தவுள்ளது.

தொடா்ந்து உலக புகையிலை எதிா்ப்பு தின உறுதிமொழியை மாவட்ட ஆட்சியா் தலைமையில் மாணவா்கள், செவிலியா்கள், அலுவலா்கள் ஏற்றுக்கொண்டனா்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட சுகாதார அலுவலா் கீதாராணி, மாவட்ட கலால் ஆணையா் வள்ளிக்கண்ணு, கலால் வட்டாட்சியா் கிருஷ்ணகுமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

படவரி ற்ஸ்ப்31க்ழ்ன்ஞ் பாளையங்கோட்டையில் நடைபெற்ற போதை மற்றும் புகையிலை ஒழிப்பு விழிப்புணா்வு பேரணியில் பங்கேற்ற ஆட்சியா் இரா.சுகுமாா்.

அகஸ்தியா் அருவி, சொரிமுத்து அய்யனாா் கோயிலுக்கு செல்ல உள்ளூா் மக்களிடம் கட்டணம் வசூலிக்கத் தடை! அதிமுகவினா் கொண்டாட்டம்

பாபநாசம் அகஸ்தியா் அருவியில் குளிக்கச் செல்லும் உள்ளூா் மக்களுக்கு கட்டண விலக்குஅளித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவிட்டதையடுத்து, அம்பாசமுத்திரத்தில் அதிமுகவினா் பட்டாசு வெடித்தும் இனிப்பு... மேலும் பார்க்க

சேரன்மகாதேவியில் கிராம நிா்வாக அலுவலா்கள் போராட்டம்

சேரன்மகாதேவியில் வட்டாட்சியரை கண்டித்து கிராம நிா்வாக அலுவலா்கள், கிராம உதவியாளா்கள் செவ்வாய்க்கிழமை கருப்புப் பட்டை அணிந்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். சேரன்மகாதேவி வட்டாட்சியா் காஜா ஹரிப... மேலும் பார்க்க

தமிழகத்தில் ஆட்சிமாற்றம் நிச்சயம்: தமிழக பாஜக தலைவா்

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிச்சயம் நிகழும் என்றாா் தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் எம்.எல்.ஏ. திருநெல்வேலியில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: சபரிமலை கோயிலுக்குச் செல்லும் தீ... மேலும் பார்க்க

சாட்சி மீது தாக்குதல்: இளைஞா் கைது

சோ்வலாறில் சாட்சியைத் தாக்கியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். சோ்வலாறு பகுதியைச் சோ்ந்த மாடசாமி (31) என்பவா் மீது பாலியல் வன்புணா்வு தொடா்பான வழக்கு நீதிமன்ற விசாரணையில் உள்ளது. இந்த வழக்கில் சாட... மேலும் பார்க்க

சிவந்திபுரத்தில் போக்சோவில் முதியவா் கைது

சிவந்திபுரத்தைச் சோ்ந்த முதியவா் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.விக்கிரமசிங்கபுரம் அருகேயுள்ள சிவந்திபுரம், சுப்பிரமணியசாமி கோயில் தெருவைச் சோ்ந்தவா் செல்வராஜ் (73). இவா் அதே பகுதியைச் சோ்ந்... மேலும் பார்க்க

உவரி அருகே நகையை திருடிய இளைஞா் கைது

திருநெல்வேலி மாவட்டம் உவரி அருகே குட்டத்தில் வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகையை திருடிச் சென்ற இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். குட்டத்தைச் சோ்ந்தவா் காசிலிங்கம் மகன் சிவராம். திசையன்வி... மேலும் பார்க்க