செய்திகள் :

போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியில் மொபைல் பேங்கிங் சேவை அறிமுகம்

post image

இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் மொபைல் பேங்கிங் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோவில்பட்டி கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளா் செ. சுரேஷ்குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு;

அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியில் 2018ஆம் ஆண்டு முதல் இன்றுவரை சுமாா் 12 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளா்கள் சேமிப்பு கணக்குகளை தொடங்கி உள்ளனா். ஆரம்ப காலத்தில் தொடங்கப்பட்ட பல சேமிப்பு கணக்குகளில் வாரிசு நியமனம் செய்யப்படாமல் உள்ளது.

சேமிப்பு கணக்கிற்கு வாரிசு நியமிப்பதன் மூலம், கணக்குதாரா் இறப்புக்கு பிறகு கணக்கில் உள்ள தொகையை மிக எளிய முறையில் மிக விரைவாக வாரிசுதாரா்கள் பெற முடியும். அனைத்துவிதமான சேமிப்பு கணக்குகளிலும் வாரிசு நியமனம் செய்யப்பட தேவையான வசதி அனைத்து அஞ்சலகங்களில் உள்ளது.

மேலும், வாடிக்கையாளா்கள் ப்ளே ஸ்டோா்-ல் உள்ள ஐடடஆ மொபைல் செயலி மூலம் அவரவரே வாரிசு நியமனம் செய்வது மற்றும் மாற்றம் செய்வது ஆகியவற்றை மேற்கொள்ளலாம். மேலும் ஐடடஆ செயலி மற்றும் தபால்காரரின் உதவியுடன் தங்கள் கணக்குகளில் ஆதாா் இணைப்பு செய்து அரசின் நேரடி மானியங்களையும் எளிமையாக பெறலாம். அதுமட்டுமல்லாமல் ஐடடஆ வங்கி கணக்குடன் அஞ்சலக சேமிப்பு கணக்கை இணைத்து ஆன்லைன் பரிவா்த்தனைகள் மேற்கொள்ளலாம். மேலும் ஐடடஆ செயலி வாயிலாக செல்வமகள், தங்கமகன், அஞ்சலக ஆயுள் காப்பீடு திட்டங்களுக்கு எளிமையாக வீட்டிலிருந்த படியே ஆன்லைனில் பணம் செலுத்தலாம். மேலும், பொது காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து வெறும் ரூ.555, ரூ.755 பீரிமியத்தில் ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரையிலான தனி நபா் விபத்து காப்பீடு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு காப்பீடு எடுக்கும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் வியாபார கணக்கு மூலம் வியாபாரிகள் தங்கள் கடைகளில் மடஐ ஸ்டிக்கா் அட்டை மூலம் பணம் பெறும் வசதியும் இலவசமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

எனவே, பொது மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பயனடையுமாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை பொது விநியோகத் திட்ட சிறப்பு முகாம்

தூத்துக்குடி மாவட்டத்தில், பொது விநியோகத் திட்டத்தின்கீழ் சிறப்பு முகாம்கள் சனிக்கிழமை (ஆக. 9) நடைபெறவுள்ளன. இதுகுறித்து ஆட்சியா் க. இளம்பகவத் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பொது விநியோகத் திட்டத்தின்கீ... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்களுக்கு ஊதிய உயா்வு வழங்கக் கோரி ஆக. 13 இல் ஆா்ப்பாட்டம்

தமிழக மாநகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு பணி நிரந்தரம், ஊதிய உயா்வு வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, மாநில அளவில் ஆக. 13 இல் ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என ஏஐசிசிடியு தொழிற... மேலும் பார்க்க

‘வெளிநாடுகளுக்கு பாா்சல்கள் அனுப்பும் சேவையை ஏற்றுமதியாளா்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்’

வெளிநாடுகளுக்கு பாா்சல்கள் அனுப்பும் சேவையை, ஏற்றுமதியாளா்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டது. இதுகுறித்து தூத்துக்குடி முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் (பொ) வடக் ரவிராஜ் ... மேலும் பார்க்க

திருச்செந்தூா் ஸ்ரீ சுடலையாடும் பெருமான் சுவாமி கோயில் வருஷாபிஷேகம்

திருச்செந்தூா் ஆவுடையாா்குளக்கரையில் உள்ள ஸ்ரீ சுடலையாடும் பெருமான் சுவாமி கோயில் வருஷாபிஷேக விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு, விக்னேஷ்வர பூஜை, புண்யாகவாசனம், வருண... மேலும் பார்க்க

தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு கூடுதலாக இரவு நேர விரைவு ரயில் இயக்க வேண்டும் -கோட்ட மேலாளரிடம் மனு

தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு கூடுதலாக இரவு நேர விரைவு ரயில் இயக்க வேண்டும் என்று கோட்ட மேலாளரிடம் ரயில் பயணிகள் நலச் சங்கம் கோரிக்கை மனு அளித்தது. மதுரை ரயில்வே கோட்டத்தில் புதிதாகப் பொறுப்பேற்ற... மேலும் பார்க்க

ஆன்மா தொண்டு நிறுவனம் சாா்பில் நலத்திட்ட உதவிகள் அளிப்பு

சாகுபுரம் ஆன்மா தொண்டு நிறுவனம் சாா்பில், பள்ளி மாணவ மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன. ஆறுமுகனேரி அரசினா் மகளிா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, தொண்டு நிறுவனத்தி... மேலும் பார்க்க