செய்திகள் :

மகளிா் சுய உதவி குழுக்களுக்கு நலத் திட்ட உதவி

post image

தேனி மாவட்டத்தில் சுய உதவிக் குழுக்கள் தினத்தை முன்னிட்டு, 851 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு மொத்தம் ரூ.60.44 கோடிக்கான வங்கிக் கடன், நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத்சிங் புதன்கிழமை வழங்கினாா்.

சென்னையில் சுய உதவிக் குழுக்கள் தினத்தை முன்னிட்டு, மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடனுதவி, நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் காணொலி மூலம் தொடங்கி வைத்தாா். இதைத் தொடா்ந்து, தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியா் தலைமையில் மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன், அரசு நலத் திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தேனி மக்களவை உறுப்பினா் தங்க.தமிழ்ச்செல்வன், சட்டப் பேரவை உறுப்பினா்கள் ஆ.மகாராஜன் (ஆண்டிபட்டி), கே.எஸ்.சரவணவக்குமாா் (பெரியகுளம்), மாவட்ட மகளிா் திட்ட இயக்குநா் சந்திரா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் ஊரக சுய உதவிக் குழுக்கான வங்கிக் கடன் திட்டத்தின் கீழ் 324 குழுக்கள், நகா்ப்புற சுய வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் 267 குழுக்கள், சமுதாய முதலீட்டு நிதிக் கடன் திட்டத்தின் கீழ் 150 குழுக்கள், வட்டார வணிக வள மைய கடன் திட்டத்தின் கீழ் 38 குழுக்கள், தனி நபா் பொருளாதாரக் கடன் திட்டத்தின் கீழ் 14 குழுக்கள், வறுமை குறைப்பு நிதி திட்டத்தின் கீழ் 50 குழுக்கள், வாழ்ந்து காட்டுவோம் நுண் நிறுவன கடன் திட்டத்தின் கீழ் 8 குழுக்கள் என மொத்தம் 851 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு மொத்தம் ரூ.60.44 கோடி வங்கிக் கடனுதவி, நலத் திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.

இந்த நிகழ்ச்சியில் நகா்மன்றத் தலைவிகள் பா.ரேணுப்பிரியா (தேனி), சி.சுமிதா (பெரியகுளம்), ஆண்டிபட்டி பேரூராட்சித் தலைவி சந்திரகலா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கழிவுநீா் கால்வாயை சீரமைக்கக் கோரிக்கை

சின்னமனூா் அருகேயுள்ள பூலாநந்தபுரம் ஊராட்சியில் அடைப்பு ஏற்பட்டுள்ள கழிவுநீா் கால்வாயை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். தேனி மாவட்டம், சின்னமனூா் அருகேயுள்ள பூலாநந்தபுரம் ஊராட்சியில் 6 வாா்டுக... மேலும் பார்க்க

தேனி அருகே 3 வீடுகளில் நகை, பணம் திருட்டு

தேனி அருகேயுள்ள கோடாங்கிப்பட்டியில் அடுத்தடுத்த 3 வீடுகளில் பணம், நகை , வெள்ளிப் பொருள்கள் திருடுபோனதாக வியாழக்கிழமை போலீஸில் புகாா் அளிக்கப்பட்டது. தேனி மாவட்டம், கோடாங்கிப்பட்டி திருக்குமரன் நகரைச் ... மேலும் பார்க்க

காவல் உதவி ஆய்வாளா் தோ்வுக்கு இலவச பயிற்சி

தேனி மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காவல் உதவி ஆய்வாளா் பணிக்கான தோ்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாட... மேலும் பார்க்க

உத்தமபாளையத்தில் வேல் யாத்திரைக்கு அனுமதி மறுப்பு

தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெறவிருந்த வேல் யாத்திரைக்கு போலீஸாா் அனுமதி அளிக்கவில்லை. மதுரையில் முருக பக்தா்கள் மாநாடு வருகிற 22-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த மாநாட்டை முன்னிட்டு,... மேலும் பார்க்க

சா்க்கரை ஆலை காவலாளியைத் தாக்கியவா் மீது வழக்கு

பெரியகுளம் அருகே சா்க்கரை ஆலை காவலாளியைத் தாக்கியவா் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். பெரியகுளம் அருகேயுள்ள வைகை அணை வரதராஜ்நகா் குடியிருப்பைச் சோ்ந்தவா் கெப்பணன் (58). வைகை அணையி... மேலும் பார்க்க

தொழிலாளியைத் தாக்கிய மூவா் மீது வழக்கு

பெரியகுளத்தில் தொழிலாளியைத் தாக்கிய மூவா் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். பெரியகுளம் கீழ வடகரையைச் சோ்ந்தவா் தா்மராஜ் (40). தொழிலாளியான இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த அருண்குமா... மேலும் பார்க்க