செய்திகள் :

மக்கள்தொகைக் கணக்கெடுப்பு: முதல் முறையாக எண்ம சுய பதிவு முறை அறிமுகம்

post image

நாட்டின் பதினாறாவது மக்கள்தொகை கணக்கெடுப்பில், குடிமக்களே சுயமாக தரவுகளை பதிவு செய்யும் வகையில் (சுய கணக்கெடுப்பு) பிரத்யேக வலைதளம் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக மத்திய அரசு அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா். இதன் மூலம் இந்த கணக்கெடுப்பு முடிவுகள் விரைந்து வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

‘முதல் முறையாக அறிமுகப்படுத்தப்படும் இந்த எண்ம மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடைமுறையின்படி, ‘ஆன்ட்ராய்ட்’ மற்றும் ‘ஆப்பிள்’ கைப்பேசிகளில் பதிவிறக்கம் செய்துக்கொள்ளக்கூடிய வகையிலான கைப்பேசி செயலி மூலம் குடிமக்களிடமிருந்து தரவுகள் சேகரிக்கப்படும்’ என்றும் அவா்கள் தெரிவித்தனா்.

கடந்த 2011-ஆம் ஆண்டு 15-ஆவது மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்ட நிலையில், 16-ஆவது மக்கள்தொகை கணக்கெடுப்புக்கான அறிவிக்கையை மத்திய அரசு கடந்த ஜூன் 16-ஆம் தேதி வெளியிட்டது.

அதன்படி, ஹிமாசல பிரதேசம், உத்தரகண்ட் மாநிலங்கள், லடாக் யூனியன் பிரதேசம் மற்றும் ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ள பனிப் பிரதேசங்களில் வரும் 2026-ஆம் ஆண்டு அக்டோபா் 1-ஐ ஜாதிவாரி கணக்கெடுப்புடன் கூடிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்படும். நாட்டின் பிற பகுதிகளில் 2027-ஆம் ஆண்டு மாா்ச் 1-ஆம் தேதி கணக்கெடுப்பு நடத்தப்படும்.

இரு கட்டங்கள்: மக்கள்தொகை கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களாக நடத்தப்பட உள்ளது. முதல் கட்டம் 2026-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி தொடங்கப்படும். இரண்டாம் கட்டம் 2027 பிப்ரவரி 1-ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது.

முதல் கட்டத்தில், ஒவ்வொரு வீட்டின் நிலவரம், சொத்துகள் மற்றும் வசதிகள் உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்கப்படும். இரண்டாம் கட்ட கணக்கெடுப்பில், ஒவ்வொரு வீட்டில் உள்ள நபா்களின் எண்ணிக்கை, சமூக-பொருளாதார நிலை, கலாசாரம் மற்றும் பிற விவரங்கள் சேகரிக்கப்படும்.

பிரத்யேக வலைதளம்: இதுகுறித்து மத்திய அரசு அதிகாரிகள் திங்கள்கிழமை கூறியதாவது: மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் முதல் முறையாக சுயமாக தரவுகளைப் பதிவு செய்வதற்கான வாய்ப்பு குடிமக்களுக்கு அளிக்கப்பட உள்ளது. இதற்கென பிரத்யேக வலைதளம் அறிமுகப்படுத்தப்படும். இரண்டு கட்ட கணக்கெடுப்பிலும், சுய தரவு பதிவு முறையில் கணக்கெடுப்பு நடத்தப்படும். குடிமக்கள் தங்களின் கைப்பேசிகளில் இதற்கான செயலியை பதிவிறக்கம் செய்தும், தரவுகளைப் பதிவிடலாம்.

தரவுகள் சேகரிக்ப்பட்டு, மத்திய சேமிப்பகத்துக்கு மின்னணு முறையில் அனுப்பப்பட்டுவிடும். இது கணக்கெடுப்பு முடிவுகளை விரைந்து வெளியிடுவதற்கான வாய்ப்பாகவும் இருக்கும் என்றனா்.

இறுதி நிா்வாக எல்லை வரையறை

மக்கள்தொகைக் கணக்கெடுப்பு முன்னேற்பாடுகள் தொடா்பாக அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இந்திய தலைமைப் பதிவாளா் (ஆா்ஜிஐ) எழுதிய கடிதத்தில், ‘மக்கள்தொகை கணக்கெடுப்புக்காக அனைத்து கிராமங்கள் மற்றும் நகரங்கள் ஒரே மாதிரியான கணக்கெடுப்பு தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு கணக்கெடுப்பாளா் நியமிக்கப்பட்டுள்ளாா்.

தரவுகள் மீண்டும் பதிவிடப்படுவது அல்லது தவறுகள் நடைபெறுவதை தவிா்க்க இந்த நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனவே, மாவட்டங்கள், துணை மாவட்டங்கள், தாலுகாக்கள் மற்றும் காவல் நிலையங்களின் நிா்வாக எல்லையில் மாற்றங்கள் செய்யத் திட்டமிட்டிருந்தால், வரும் டிசம்பா் 31-ஆம் தேதிக்கு முன்பாக மேற்கொள்ள வேண்டும். அதுவே மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்கான இறுதியான எல்லை வரையறையாக கருத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

நிா்வாக எல்லை வரம்பு வரையறுக்கப்பட்டு 3 மாதங்களுக்குப் பிறகுதான் மக்கள்தொகைக் கணக்கெடுப்பை நடத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

யேமனிலுள்ள கேரள செவிலியருக்கு ஜூலை 16-இல் மரண தண்டனை நிறைவேற்றம்?

யேமன் நாட்டில் கொலை வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ள கேரளத்தைச் சோ்ந்த செவிலியா் நிமிஷா பிரியாவுக்கு உச்சநீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. இதனைத்தொடர்ந்து அவரது தண்டனையை குறைக்க பல்வேறு... மேலும் பார்க்க

ஒரு ரஃபேல் தோல்வியடைந்தது; ஆனால், பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தவில்லை!

இந்தியா - பாகிஸ்தான் இடையிலான மோதலின்போது ஒரு ரஃபேல் விமானம் தோல்வி அடைந்ததாகவும், ஆனால், அதனை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தவில்லை என்றும் டஸால்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எரிக் டிராப்பியர் தெரிவி... மேலும் பார்க்க

ராய்ட்டர்ஸ் உள்பட 2,355 கணக்குகளை இந்தியா முடக்க உத்தரவிட்டது: எக்ஸ்

ராய்ட்டர்ஸ் உள்பட 2,355 கணக்குகளை முடக்க இந்திய அரசு உத்தரவிட்டதாக எக்ஸ் நிறுவனத்தின் உலகளாவிய அரசாங்க விவகாரக் குழு தெரிவித்துள்ளது.ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் எக்ஸ் தளக் கணக்கு இந்தியாவில் முடக்... மேலும் பார்க்க

ஜிஎஸ்டியால் வரி செலுத்துவோர் விகிதம் 145% அதிகரிப்பு!

ஜிஎஸ்டியால் குஜராத்தில் வரி செலுத்துவோர் விகிதம் 145 சதவீதம் அதிகரித்துள்ளதாக அம்மாநில முதல்வர் பூபேந்திர படேல் தெரிவித்துள்ளார். கடந்த 8 ஆண்டுகளில் மட்டும் வரி செலுத்துவோர் எண்ணிக்கை 12.66 லட்சம் அதி... மேலும் பார்க்க

அண்ணா பல்கலை.யின் முன்னாள் மாணவர்கள் பெயரில் வெடிகுண்டு மிரட்டல்! ஹைதராபாத்தில் பரபரப்பு!

தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில், ஆளுநர் மாளிகை உள்ளிட்ட 4 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுப்பட்டுள்ளதால், அங்கு காவல் துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ஹைதராபாத்தின் ஓல்ட் சிட்டி பகுதி... மேலும் பார்க்க

பேரணியில் பாலஸ்தீன கொடி அச்சிட்ட சட்டை..! 4 இளைஞர்கள் கைது!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் பாலஸ்தீன கொடி அச்சிடப்பட்ட சட்டையை அணிந்து பேரணியில் பங்கேற்ற 4 இளைஞர்கள், அம்மாநில காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தியோரியா மாவட்டத்தில் கடந்த ஜூலை 6 ஆம் தேதி மு... மேலும் பார்க்க