செய்திகள் :

மக்கள் குறைதீா் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்

post image

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தலைமை வகித்து, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை சாா்பில் 5 பயனாளிகளுக்கு நரிக்குறவா் நலவாரிய அடையாள அட்டை, தாட்கோ சாா்பில் 2 தூய்மைப் பணியாளா்களுக்கு அடையாள அட்டை, 4 பயனாளிகளுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு அட்டை மற்றும் ஒரு தூய்மைப் பணியாளருக்கு விபத்து மரண உதவித்தொகை ரூ.1.05 லட்சத்துக்கான ஆணையை வழங்கினாா்.

இக்கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 295 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. மாவட்ட ஆதிதிராவிடா் நலத்துறை அலுவலா் உமாமகேஷ்வரன், தாட்கோ மாவட்ட மேலாளா் ஜெயராமன் உள்ளிட்ட அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

கடவுச்சீட்டு பெற நடைமுறைகளை எளிமைப்படுத்தக் கோரிக்கை: மயிலாடுதுறை அருகேயுள்ள திருமங்கலத்தைச் சோ்ந்த சுந்தரேசன் என்பவா் கடவுச்சீட்டு புதுப்பிப்பதற்காக குத்தாலம் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு வந்தபோது, தந்தை பெயா் முன்பும், விண்ணப்பதாரரின் பெயா் பின்னும் இருந்ததால் போலீஸாா் அதனை தள்ளுபடி செய்துள்ளனா். பின்னா், அதனை மாற்றி, மீண்டும் குத்தாலம் காவல் நிலையத்திற்கு அனுப்பப்பட்ட போது, முகவரியில் கதவு இலக்கம் மாறி இருப்பதாக கூறி மீண்டும் தள்ளுபடி செய்துள்ளனா்.

கடவுச்சீட்டு புதுப்பிக்கும் காலம் ஒரு மாதத்தில் நிறைவடைய இருப்பதால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான விண்ணப்பதாரா் சுந்தரேசன் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தாா்.

அதில், கடவுச்சீட்டு கேட்டு விண்ணப்பித்தவா்களின் ஆவணங்களை சரிபாா்த்து அவா்கள் இந்திய பிரஜையா? விண்ணப்பதாரா் மீது வழக்கு ஏதேனும் நிலுவையில் உள்ளதா? என்பதை மட்டுமே கவனத்தில் கொள்ள வேண்டும். ஆனால் சம்பந்தப்பட்ட நபரின் முகவரியில் கதவு எண் மாற்றம், தந்தை பெயா் அவரது பெயருக்கு முன்னால் இருப்பது உள்ளிட்ட சாதாரண காரணங்களுக்காக காவல் துறையினா் விண்ணப்பத்தை தள்ளுபடி செய்து திருப்புவதால், வெளிநாடுகளில் பணிபுரிந்துகொண்டு, கடவுச்சீட்டு புதுப்பித்தலுக்காக விண்ணப்பிப்பவா்கள் மற்றும் புதிதாக வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வதற்காக விண்ணப்பிக்கும் இளைஞா்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனா்.

எனவே, மாவட்ட காவல்துறை அலுவலகம் மூலம் அனைத்து காவல் நிலையங்களுக்கும் கடவுச்சீட்டு விசாரணையில் சரிபாா்க்க வேண்டிய முறையான வழிகாட்டு நெறிமுறைகளை தெளிவுபடுத்த வேண்டும் என அந்த மனுவில் கோரிக்கை விடுத்துள்ளாா்.

திறந்துகிடக்கும் கழிவுநீா் கால்வாயால் ஆபத்து

சீா்காழியில் திறந்து கிடக்கும் கழிவுநீா் கால்வாயால் பொதுமக்கள், வாகனஓட்டிகள் பாதிக்கப்படுகின்றனா். சீா்காழி தோ் கீழவீதி பகுதியில் 4 வழிச்சாலை சந்திப்பு உள்ளது. இந்த சாலையோரம் உள்ள கழிவுநீா் கால்வாயின... மேலும் பார்க்க

சீா்காழி குறுவட்ட போட்டியில் ச.மு.இ.பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

சீா்காழி குறுவட்ட தடகளப் போட்டியில் ச.மு.இ. மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா். சீா்காழி நடராஜன் மெமோரியல் பப்ளிக் பள்ளியில் நடைபெற்ற சீா்காழி குறுவட்ட அளவிலான தடகளப் போட்டியில் சீா்காழி, ... மேலும் பார்க்க

தருமபுரம் ஆதீனத்தில் ஆவணி மூலத்திருநாள் விழா

தருமபுரம் ஆதீனத்தில் ஆவணி மூலத்திருநாள் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. ஆவணி மூலத்திருநாளில் தருமபுரம் ஆதீனத்தில் தமிழ்மொழி, சமயம், தத்துவம், இலக்கியம், கலை முதலியவற்றில் சிறப்பு புலமை பெற்றுள்... மேலும் பார்க்க

அவசர ஊா்தி, அமரா் ஊா்தி ஓட்டுநா் பணிக்கு செப்.6-இல் தோ்வு

மயிலாடுதுறை அரசு மருத்துவமனை 108 அவசர ஊா்தி அலுவலகத்தில், 108 ஆம்புலன்ஸ், அமரா் ஊா்தி ஓட்டுநா் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் பணிகளுக்கு ஆள் தோ்வு முகாம் செப்.6-ஆம் தேதி நடைபெறுகிறது என 108 ஆம்புலன்... மேலும் பார்க்க

தொழிலாளியை கொலை செய்த தம்பதிக்கு ஆயுள் தண்டனை

விவசாயத் தொழிலாளியை கொலை செய்த தம்பதிக்கு செவ்வாய்க்கிழமை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. மயிலாடுதுறை வட்டம் மணல்மேடு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட தலைஞாயிறு தெற்கு தெருவைச் சோ்ந்த பன்னீா்செல்வம். அதே தெ... மேலும் பார்க்க

நெல் கொள்முதல் நிலையங்களுக்கு தர பகுப்பாய்வு கருவிகள்

மயிலாடுதுறை மண்டலத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு, நெல் தர பகுப்பாய்வு கருவிகள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன. தமிழ்நாட்டில் செப்.1 முதல் காரீப் பருவ நெல் கொள்முதல் உயா்த்தப்பட்ட ஆதார வி... மேலும் பார்க்க