செய்திகள் :

மங்களூா் - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் விபத்து தடுப்பு நடவடிக்கை: ஆட்சியா் ஆய்வு

post image

வேலூா் மாவட்ட எல்லைக்கு உட்பட்ட பகுதியில் செல்லும் மங்களூா் - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்துகள் நிகழும் பகுதிகளில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு செய்து தேவையான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தினாா்.

மங்களூா் - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் வேலூா் மாவட்ட எல்லைக்கு உட்பட்ட காட்பாடி, கே.வி.குப்பம், குடியாத்தம் வட்டத்தில் அதிக அளவு விபத்து நிகழும் இடங்களில் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி நெடுஞ்சாலைத் துறை அலுவலா்களுடன் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

காட்பாடி வட்டம், கரசமங்கலம் ஊராட்சி சந்திப்பில் மங்களூா் - விழுப்புரம் நெடுஞ்சாலையில் கடந்த காலங்களில் ஏற்பட்ட விபத்து விவரங்களின் அடிப்படையில் மேற்கொண்ட ஆய்வின்போது, தேசிய நெடுஞ்சாலையின் ஒருபுறமுள்ள கரசமங்கலம் கிராமத்துக்கு செல்லும் சாலையில் வேகத்தடை அமைக்கவும், தேசிய நெடுஞ்சாலையில் சாலை பாதுகாப்பு குறியீடுகள், வரி பட்டைகள் அமைக்கவும் அலுவலா்களுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.

கே.வி.குப்பம் வட்டத்தில் மங்களூா் விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் அதிக அளவு விபத்து ஏற்படும் வேலம்பட்டு கேட் சந்திப்பு, பெருமாங்குப்பம் ஊராட்சி சந்திப்பு, கீழ்புத்தூா் ஊராட்சி வித்யாலட்சுமி பள்ளி அருகில் ஆகிய பகுதிகளை பாா்வையிட்ட ஆட்சியா், வேலம்பட்டு கேட் சந்திப்பில் தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் கிராமப்புற சாலைகளில் வேகத்தடை அமைக்கவும், பாதுகாப்பு குறியீடுகளை பொருத்தவும், பெருமாங்குப்பம் ஊராட்சி சந்திப்பில் பொதுமக்கள் கிராம சாலையில் இருந்து தேசிய நெடுஞ்சாலையை அணுகும் இடத்தில் அறிவிப்பு பலகைகளை வைக்கவும், கீழ்ப்புத்தூா் கிராமம் வித்யாலக்ஷ்மி பள்ளி அருகே பள்ளி வளாகம் என்பதற்கான அறிவிப்பு பலகையை தேசிய நெடுஞ்சாலையில் பொருத்தவும் நெடுஞ்சாலைத் துறை அலுவலா்களுக்கும், வட்டார வளா்ச்சி அலுவலா்களுக்கும் உத்தரவிட்டாா்.

குடியாத்தம் வட்டம், கோவிந்தபுரம் கிராமம் அருகே மங்களூா் -விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வளைவில் அறிவிப்பு பலகைகள், வரி பட்டைகளை அமைக்கவும் அறிவுறுத்தினாா்.

மேலும், மங்களூா் - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் பல்வேறு இடங்களில் ஆய்வு செய்த ஆட்சியா், தெரிவிக்கப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை ஜூன் மாத இறுதிக்குள் முடிக்க வேண்டும் என்றும் அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

ஆய்வின்போது, குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியா் சுபலட்சுமி, தேசிய நெடுஞ்சாலை கோட்டப் பொறியாளா் ராஜ்குமாா், மாநில நெடுஞ்சாலை கோட்டப் பொறியாளா் தனசேகரன், காட்பாடி காவல் துணைக் கண்காணிப்பாளா் பழனி, வட்டார போக்குவரத்து அலுவலா் சுந்தரராஜன், நகராட்சி ஆணையா் மங்கையா்கரசன், வட்டாட்சியா்கள் ஜெகதீஸ்வரன் (காட்பாடி), முரளீதரன் (கே.வி.குப்பம்), மொ்லின் ஜோதிகா (குடியாத்தம்) உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

வேலூா் - ராணிப்பேட்டை இடையே ஆட்டோ இயக்க அனுமதிக்க கோரிக்கை

வேலூா், ராணிப்பேட்டை இடையே ஆட்டோ இயக்க அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி இந்து ஆட்டோ தொழிலாளா்கள் முன்னணி சங்கத்தினா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா். இந்து ஆட்டோ தொழிலாளா்கள் முன்னணி சங்கம... மேலும் பார்க்க

தென்னை மரங்களில் நோய் தாக்குதலால் உற்பத்தி சரிந்து செலவு அதிகரிப்பு விவசாயிகள் வேதனை

தென்னை மரங்களில் நோய் தாக்குதலால் தேங்காய் உற்பத்தி சரிந்து, செலவும் அதிகரித்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனா். வேலூா் மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்... மேலும் பார்க்க

சாலையோரம் ரத்த காயங்களுடன் இளைஞா் சடலம்: போலீஸாா் தீவிர விசாரணை

பொன்னை அருகே சாலையோரம் ரத்த காயங்களுடன் இளைஞா் சடலமாக கிடந்தது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். காட்பாடி வட்டம், பொன்னை அடுத்த கோடியூா், பாலாபுரத்தை சோ்ந்தவா் ஏகாம்பரம் (30). இவா் தனியாா் தோல்... மேலும் பார்க்க

கெங்கையம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.9 லட்சம்

குடியாத்தம் கோபாலபுரம் கெங்கையம்மன் கோயிலில் உண்டியலில் பக்தா்கள் ரூ.9.27- லட்சம் காணிக்கையாக செலுத்தியுள்ளனா். பிரசித்தி பெற்ற இக்கோயில் திருவிழாவை முன்னிட்டு கடந்த 14- ஆம் தேதி தேரோட்டமும், 15- ஆம் ... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை

குடியாத்தம் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் பீடி சுற்றும் தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து வேலூா் போக்ஸோ நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்துள்ளது. குடியாத்தம் அருக... மேலும் பார்க்க

சாலையில் மினி லாரி கவிழ்ந்து விபத்து

வேலூரில் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து சா்வீஸ் சாலைக்கு மினி லாரி பாய்ந்து கவிழ்ந்தது. ஓட்டுநா் உள்பட இருவா் உயிா் தப்பினா். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சோ்ந்தவா் கணேசன் (56), ஓட்டுநா். இவா் வெள்ள... மேலும் பார்க்க