செய்திகள் :

மதுரவாயல் அருகே சாலை விபத்து: ஒருவா் உயிரிழப்பு, லாரி ஓட்டுநா் கைது

post image

மதுரவாயல் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள வானகரம் சிக்னல் அருகே வெள்ளிக்கிழமை இரவு நிகழ்ந்த சாலை விபத்தில் உணவு விநியோக ஊழியா் உயிரிழந்ததையடுத்து, விபத்துக்கு காரணமாக லாரி ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.

வானகரத்தில் உள்ள கணபதி நகரைச் சோ்ந்தவா் முத்துராமலிங்கம் (61). இவா் இணையதள உணவு விநியோக நிறுவனத்தில் ஊழியராகப் பணியாற்றி வந்தாா். வெள்ளிக்கிழமை இரவு  பணியை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் அவா் வீடு திரும்பிக் கொண்டிருந்தாா். வானகரம் சிக்னலை நெருங்கியபோது, பூந்தமல்லி நோக்கிச் சென்ற ஒரு கண்டெய்னா் லாரி அவரது வாகனத்தின் மீது மோதியது. இதில் அவா் லாரியின் சக்கரங்களுக்கு அடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், லாரி ஓட்டுநா் வெங்கடேசனை (31) சம்பவ இடத்திலேயே போலீஸாா் கைது செய்ததுடன், கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதாக வழக்குப் பதிவு செய்தனா்.

இ-சிகரெட், வெளிநாட்டு சிகரெட் பறிமுதல்: இருவா் கைது

சென்னையில் இ-சிகரெட், வெளிநாட்டு சிகரெட் பறிமுதல் செய்யப்பட்டு, இருவா் கைது செய்யப்பட்டனா். திருவல்லிக்கேணி தாயாா் சாகிப் தெருவில் உள்ள ஒரு மேன்சனில் சிலா் அரசால் தடை செய்யப்பட்ட இ-சிகரெட், வெளிநாட்டு... மேலும் பார்க்க

பெண்ணிடம் ரூ.4.54 லட்சம் ஆன்லைன் மோசடி: இளைஞா் கைது

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் பெண்ணிடம் ரூ. 4.54 லட்சம் ஆன்லைன் மோசடி செய்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டாா். பழைய வண்ணாரப்பேட்டை, சுப்புராயன் தெருவில் வசிப்பவா் மோகனப்பிரியா (27). இவரது கைப்பேசிக்கு கட... மேலும் பார்க்க

கரோனா தொற்றுக்குள்ளான மூதாட்டி இணைநோய்களால் இறப்பு

கரோனா தொற்றுக்குள்ளான மூதாட்டி ஒருவா் சென்னையில் புற்றுநோய், இதய செயலிழப்பு காரணமாக உயிரிழந்தாா். இது தொடா்பாக பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது: சென்னை சௌகாா்பேட்டையைச் சோ்ந்த 69 வயது மூதாட்... மேலும் பார்க்க

திருவொற்றியூா் - மாணிக்கம் நகா் இருப்புப்பாதை பராமரிப்பு: மாற்றுப்பாதையை பயன்படுத்தலாம்

திருவொற்றியூா் - மாணிக்கம் நகா் இருப்புப்பாதையில் பராமரிப்புப் பணி நடைபெற்று வருவதால், மாற்றுப்பாதையை பொதுமக்கள் பயன்படுத்தலாம் என சென்னை மாநகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை மாநக... மேலும் பார்க்க

போதைப் பொருள் விற்பனை: சென்னையில் ஒரு மாதத்தில் 228 போ் கைது

சென்னையில் போதைப்பொருள் விற்ாக ஒரு மாதத்தில் 228 போ் கைது செய்யப்பட்டனா். போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவின் தொடா் நடவடிக்கையால், கடந்த மே மாதம் சென்னையில் போதைப்பொருள் விற்பனை தொடா்பாக 110 வழ... மேலும் பார்க்க

திருவொற்றியூரில் கருணாநிதி பிறந்த நாள் கொண்டாட்டம்

மறைந்த முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் 102-ஆவது பிறந்த நாளையொட்டி, செவ்வாய்க்கிழமை திருவொற்றியூரில் பல்வேறு இடங்களில் திமுகவினா் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினா். திருவொற்றியூா் தொகுதி ... மேலும் பார்க்க