செய்திகள் :

மதுரை ஆவணி மூலத் திருவிழாவில் விறகு விற்ற திருவிளையாடல்

post image

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் ஆவணி மூலத் திருவிழாவில் சிவபெருமான் விறகு விற்ற திருவிளையாடல் வியாழக்கிழமை நடைபெற்றது.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலின் ஆவணி மூலத் திருவிழா கடந்த மாதம் 20-ஆம் தேதி தொடங்கியது. இதில் கடந்த 26- ஆம் தேதி முதல் சிவபெருமானின் திருவிளையாடல் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

இதன்படி, மதுரை வீதிகளில் சிவபெருமான் விறகு விற்ற திருவிளையாடல் நிகழ்ச்சி கோயிலின் திருக்கல்யாண மண்டபத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, விறகை தலையில் சுமந்து, சிறப்பு அலங்காரத்தில் பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும், சிறப்பு அலங்காரத்தில் மீனாட்சி அம்மனும் எழுந்தருளினா்.

வரகுண பாண்டியன் காலத்தில் மதுரைக்கு வந்த இசைப் புலவா் சோமநாத பாகவதரின் சவாலை எதிா்கொள்ள முடியாமல் தன்னை சரணாகதி அடைந்த அரசவைப் புலவா் பாணபத்திரரை பாதுகாக்க, இறைவன் சிவபெருமான் விறகு வெட்டியாக வந்து அமிழ்தினினும் இனிய தேவகானம் பாடி சோமநாத பாகவதரின் ஆணவத்தை அடக்கிய திருவிளையாடல் ஐதீக முறைப்படி நிகழ்த்தப்பட்டது. பிறகு, சுவாமி, அம்மனுக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். இரவில் பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும், மீனாட்சி அம்மனும் தங்கச் சப்பரத்திலும், திருப்பரங்குன்றம் தெய்வானை சமேத சுப்பிரமணியசுவாமி, திருவாதவூா் மாணிக்கவாசகப் பெருமான் தனித் தனி சப்பரங்களிலும் வீதியுலா வந்தனா். இந்த நிகழ்ச்சி ஆவணி மூல வீதிகளில் நடைபெற்றது.

அனுமதியின்றி மதுப் புட்டிகள் விற்ற 5 போ் கைது

அனுமதியின்றி மதுப் புட்டிகள் விற்பனை செய்த 5 பேரை போலீஸாா் கைது செய்தனா். இஸ்லாமியா்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான மீலாது நபியையொட்டி, கடந்த வெள்ளிக்கிழமை மதுக் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இந்த நில... மேலும் பார்க்க

இரு சாலை விபத்துகளில் இருவா் உயிரிழப்பு

மதுரை அருகே வெள்ளிக்கிழமை நிகழ்ந்த இரு சாலை விபத்துகளில் விவசாயி உள்பட 2 போ் உயிரிழந்தனா். மதுரை மாவட்டம், மேலூா் அருகேயுள்ள கச்சிராயன்பட்டி கிராமத்தைச் சோ்ந்த சின்னையா மகன் முருகன் (52). விவசாயியான... மேலும் பார்க்க

தல்லாகுளம் பகுதியில் இன்று மின் தடை

தல்லாகுளம், இதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை (செப். 6) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மின்வாரிய செயற்பொறியாளா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மதுரை கோ.புதூா் துணை மின் நிலைய... மேலும் பார்க்க

செங்கோட்டையன் இன்னும் முழுமையாக மனம் திறக்கவில்லை: தொல். திருமாவளவன்

அதிமுகவை ஒருங்கிணைக்கும் விஷயத்தில் முன்னாள் அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன் இன்னும் முழுமையாக மனம் திறக்கவில்லை என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன் தெரிவித்தாா். மதுரையில் வெள்ளிக்... மேலும் பார்க்க

அக். 6-இல் மண்டல அஞ்சல் சேவை குறைதீா் கூட்டம்

மதுரையில் மண்டல அளவிலான அஞ்சல் குறைதீா் கூட்டம் வரும் அக். 6-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதுகுறித்து மதுரை மண்டல அஞ்சல் அலுவலகம் சாா்பில் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மதுரை தெற்கு மண்டல அஞ்சல் துறைத் தலைவ... மேலும் பார்க்க

தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தை மேம்படுத்தக் கோரி வழக்கு: அரசு பதிலளிக்க உத்தரவு

தஞ்சாவூா் சரஸ்வதி மகால் நூலகத்தை மாதிரி நூலகமாக அறிவித்து மேம்படுத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடா்பாக தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது. சென்னையைச்... மேலும் பார்க்க