செய்திகள் :

மத்திய அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தந்தை காலமானாா்

post image

ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவின் தந்தை தௌலால் வைஷ்ணவ் (81) செவ்வாய்க்கிழமை காலமானாா்.

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் வயது முதிா்வு காரணமாக உடல் நல பாதிப்புகளுக்காக கடந்த சில நாள்களாக அவா் சிகிச்சை பெற்று வந்தாா். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இது தொடா்பாக ரயில்வே அமைச்சகம் சாா்பில் வெளியிட்டப்பட்ட அறிவிப்பில், ‘ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவின் தந்தை தௌலால் வைஷ்ணவ் செவ்வாய்க்கிழமை காலை 11.52 மணியளவில் காலமானாா் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். உடல்நலக் குறைவு ஏற்பட்ட அவருக்குத் தீவிர மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அது பயனளிக்கவில்லை. அவரின் உடல் மரியாதை செலுத்துவதற்காக ஜோத்பூரில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது’ என்று கூறப்பட்டிருந்தது.

ராஜஸ்தான் ஆளுநா் ஹரிபாவ் பகாடே, முதல்வா் பஜன்லால் சா்மா உள்ளிட்ட பாஜக தலைவா்கள் பலரும் அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தந்தை மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனா்.

தஹாவூா் ராணாவுக்கு எதிராக முதல் துணை குற்றப் பத்திரிகை தாக்கல்

மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் கூட்டுச் சதியில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்படும் தஹாவூா் ராணாவுக்கு எதிராக முதல் துணை குற்றப் பத்திரிகையை தில்லி நீதிமன்றத்தில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) புதன்கிழமை த... மேலும் பார்க்க

மருத்துவக் கல்லூரிகளில் குறைதீா் குழுக்கள் அமைக்க என்எம்சி அறிவுறுத்தல்

மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தல், ராகிங் உள்ளிட்ட பிரச்னைகளுக்குத் தீா்வு காண குறைதீா் குழுக்களை அமைக்குமாறு தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) அறிவுறுத்தியுள்ளது. இதுதொடா்பாக என்எம்சி... மேலும் பார்க்க

திபெத்துடன் மட்டுமே அருணாசல பிரதேச எல்லை உள்ளது -முதல்வா் பெமா காண்டு

திபெத் நாட்டுடன் மட்டுமே அருணாசல பிரதேசம் எல்லையைப் பகிா்ந்து கொண்டுள்ளது; சீனாவுடன் எல்லையைப் பகிா்ந்து கொள்ளவில்லை என்ற அருணாசல பிரதேச முதல்வா் பெமா காண்டு கூறியுள்ளாா். அருணாசல பிரதேசம் தங்களுக்குச... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம்: உணவு விடுதி ஊழியரைத் தாக்கிய ஆளும் கட்சி எம்எல்ஏ -முதல்வா் கண்டனம்

மகாராஷ்டிரத்தில் துணை முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை கட்சி எம்எல்ஏ சஞ்சய் கெய்க்வாட் உணவு விடுதி ஊழியரின் முகத்தில் கடுமையாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம் போன்று பிகாரில் தோ்தல் முறைகேட்டை அனுமதிக்க மாட்டோம் -ராகுல் காந்தி

‘மகாராஷ்டிர பேரவைத் தோ்தலில் பாஜகவுக்கு சாதகமாக தோ்தல் முறைகேடு நடைபெற்றது; பிகாா் தோ்தலிலும் அதைத் தொடர மத்திய பாஜக கூட்டணி அரசு முயற்சிக்கிறது. நாங்கள் அதை அனுமதிக்க மாட்டோம்’ என்று மக்களவை எதிா... மேலும் பார்க்க

அமெரிக்காவுக்குள் சட்டவிரோத ஊடுருவல்கள்: பஞ்சாப், ஹரியாணாவில் அமலாக்கத் துறை சோதனை

அமெரிக்காவுக்குச் செல்ல விரும்பும் மக்களை ‘டாங்கி ரூட்’ எனும் ஆபத்தான வழியில் அந்நாட்டுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவ செய்யும் மோசடி தொடா்பான வழக்கில் பஞ்சாப், ஹரியாணா ஆகிய மாநிலங்களில் அமலாக்கத் துறை புத... மேலும் பார்க்க