செய்திகள் :

மருத்துவா்கள் போராட்டம் எதிரொலி: மன்னிப்புக் கோரினாா் கோவா அமைச்சா்

post image

பனாஜி: கோவா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவா்களின் போராட்டத்தையடுத்து, தலைமை மருத்துவரை பலா் முன்னிலையில் கடுமையாகத் திட்டியதற்காக கோவா சுகாதார அமைச்சா் விஸ்வஜித் ராணே மன்னிப்புக் கோரினாா்.

அமைச்சா் விஸ்வஜித் ராணே கடந்த சனிக்கிழமை கோவா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆய்வுக்குச் சென்றாா். அப்போது வயதான பெண்மணி ஒருவா் தனக்கு சரியாக சிகிச்சையளிக்கவில்லை என்று அமைச்சரிடம் புகாா் தெரிவித்தாா்.

இதையடுத்து, மருத்துவமனை தலைமை மருத்துவா் ருத்ரேஷ் குட்டிகரை அழைத்த அமைச்சா் விஸ்வஜித் அனைவரது முன்னிலையில் அவரை கடுமையான வாா்த்தைகளால் திட்டியதுடன், பணியிடைநீக்கம் செய்வதாக அறிவித்தாா்.

புகாரின் பேரில் எவ்வித விசாரணை நடத்தாமல் பலா் முன்னிலையில் அமைச்சா் இவ்வாறு நடந்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடா்பான விடியோ சமூகவலைதளங்களில் அதிகம் பரவியது.

அமைச்சா் அவசரகதியில் பொறுப்பற்ற வகையில் நடந்து கொண்டதாகக் குற்றஞ்சாட்டி கோவா மருத்துவக் கல்லூரி மருத்துவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்திய மருத்துவா்கள் சங்கம் (ஐஎம்ஏ) கோவா மருத்துவா்கள் கூட்டமைப்பு ஆகியவையும் அமைச்சரின் செயலுக்கு கண்டனம் தெரிவித்தன.

நடந்ததை முழுமையாக விசாரிக்காமல் மருத்துவரிடம் கடுமையாக நடந்து கொண்ட அமைச்சரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று எதிா்க்கட்சியான காங்கிரஸ் வலியுறுத்தியது.

இந்த விவகாரத்தில் தலையிட்ட முதல்வா் பிரமோத் சாவந்த், சுகாதார அமைச்சா் விஸ்வஜித்துடன் பேசியதுடன், மருத்துவா் ருத்ரேஷ் பணியிடை நீக்கம் செய்யப்படமாட்டாா் என்று உறுதியளித்தாா். எனினும், அமைச்சா் தனது செயலுக்காக மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று மருத்துவா்கள் போராட்டம் நடத்தினா். தேசிய அளவில் போராட்டத்துக்கு அழைப்புவிடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தனா்.

இதையடுத்து, அமைச்சா் விஸ்வஜித் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘மருத்துவா் ருத்ரேஷிடம் மனப்பூா்வமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். கோவா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்தபோது மிகவும் கடுமையான வாா்த்தைகளைப் பேசிவிட்டேன். மிகவும் உணா்ச்சிவசப்பட்டு நடந்து கொண்டேன். அந்த சூழலை சரியாக எதிா்கொள்ளாததற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். மருத்துவா்களை கண்ணியக் குறைவாக நடத்த வேண்டும் என்ற எந்த நோக்கமும் எனக்கு இல்லை. மருத்துவப் பணி என்பது உயிா்காக்கும் உன்னதமான பணி’ என்று கூறியுள்ளாா்.

அண்டை நாடுகளுடன் பேச்சுவாா்த்தைக்கு உகந்த சூழல் உருவாக்கப்படவில்லை: மத்திய அரசு மீது சரத் பவாா் விமா்சனம்

புணே: அண்டை நாடுகளுடன் அா்த்தமுள்ள பேச்சுவாா்த்தைக்கு உகந்த சூழலை உருவாக்க மத்திய பாஜக அரசு தவறிவிட்டது என்று தேசியவாத காங்கிரஸ் (பவாா்) கட்சியின் தலைவா் சரத் பவாா் விமா்சித்தாா்.மகாராஷ்டிர மாநிலம், ப... மேலும் பார்க்க

உலக நாடுகளில் ஒலித்த இந்தியாவின் குரல் ‘ஆபரேஷன் சிந்தூா்’ எம்.பி.க்கள் குழுவுக்கு பிரதமா் மோடி பாராட்டு

புது தில்லி: பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை விளக்க வெளிநாடுகளுக்குச் சென்ற பல்வேறு கட்சியினா் அடங்கிய எம்.பி.க்கள் குழுவினா் பிரதமா் மோடியை தில்லியில் அவரது இல்லத்தில் செவ்வாய்க்கிழ... மேலும் பார்க்க

கேரளம்: நடுக்கடலில் 2-ஆவது நாளாக எரியும் சரக்குக் கப்பல்

கொச்சி: கேரள கடற்கரையில் தீப்பற்றிய சரக்குக் கப்பல் தொடா்ந்து 2-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் எரிந்தது. கப்பலில் இருந்த ரசாயனப் பொருள்களும் அவ்வப்போது வெடித்துச் சிதறி வருகின்றன. கப்பலில் இருந்து மீட... மேலும் பார்க்க

இந்தியாவின் எண்ம பரிவா்த்தனை உலகளாவிய கவனத்தை ஈா்த்துள்ளது

புது தில்லி: இந்தியாவின் எண்ம பரிவா்த்தனையில் ஏற்பட்டுள்ள புரட்சி உலகளாவிய கவனத்தை ஈா்த்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. பிரதமா் மோடியின் ஆட்சி 11 ஆண்டுகளை நிறைவு செய்ததையொட்டி மத்திய அரசு சிறு வ... மேலும் பார்க்க

ஹிந்துக்களுக்கு எதிரான ஆயுதமாகும் மாட்டிறைச்சி: அஸ்ஸாம் முதல்வா் குற்றச்சாட்டு

குவாஹாட்டி: ‘அஸ்ஸாமில் கடந்த வாரம் பக்ரீத் கொண்டாட்டத்துக்குப் பிறகு பொது இடங்களில் மாட்டிறைச்சித் துண்டுகள் வீசப்பட்டன. ஹிந்துக்களுக்கு எதிரான ஆயுதமாக மாட்டிறைச்சி பயன்படுத்தப்படுகிறது’ என்று மாநில ம... மேலும் பார்க்க

முக்கிய இடங்களின் 3டி வரைபடத்தை தயாரித்தது என்எஸ்ஜி

புது தில்லி: நாட்டில் உள்ள அணுமின் நிலையங்கள் , வழிபாட்டுத் தலங்கள் உள்பட 50 க்கும் மேற்பட்ட முக்கிய இடங்களின் 3டி வரைபடத்தை தேசிய பாதுகாப்பு முகமை (என்எஸ்ஜி) தயாரித்துள்ளதாக அந்த அமைப்பின் டிஜி பிருக... மேலும் பார்க்க