மழைக்கு இடிந்து விழுந்த காவல் அலுவலகம்: உள்ளே தூங்கிக்கொண்டிருந்த காவலர் பலி
காசியாபாத்தில் மழைக்கு காவல் அலுவலகம் இடிந்து விழுந்ததில் காவலர் ஒருவர் பலியானார்.
உத்தரப் பிரதேச மாநிலம், காசியாபாத்தில் மழைக்கு உதவி காவல் ஆணையர் அங்கூர் விஹார் லோனி அலுவலகத்தின் கூரை திடீரென இடிந்து விழுந்தது.
இந்த சம்பவத்தின்போது அறை ஒன்றில் தூங்கிக்கொண்டிருந்த துணை ஆய்வாளர் வீரேந்திர குமார் மிஸ்ரா(58) கட்டட இடிபாடுகளுக்கு இடையே சிக்கினார்.
கூடுதல் காவல் ஆணையர் அலோக் பிரியதர்ஷி இந்த சம்பவத்தை உறுதிப்படுத்தினார்.
காலையில் போலீஸார் அலுவலகத்திற்கு வரும் வரை கட்டடம் இடிந்து விழுந்த விவரம் தெரிவரவில்லை. உடனே அவர்கள் மிஸ்ராவின் உடலை இடிபாடுகளில் இருந்து வெளியே எடுத்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஐபோன் மட்டுமல்ல; அனைத்துக்கும் வரிதான்! டிரம்ப்பிடம் சிக்கிய சாம்சங்!
ஆனால் அங்கு அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
எட்டாவா மாவட்டத்தில் உள்ள அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.