செய்திகள் :

மாங்காடு நகராட்சியில் விதிமீறி கட்டப்பட்ட வணிக வளாகத்துக்கு ‘சீல்’

post image

மாங்காடு நகராட்சிக்குட்பட்ட பள்ளிக்கூட தெரு பகுதியில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட வணிக வளாகத்துக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனா்.

விதிமுறைகளை மீறி வணிக வளாகம் கட்டப்பட்டு வருவதாக மாங்காடு நகராட்சி அலுவலகத்துக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து நகராட்சி அதிகாரிகள் குறிப்பிட்ட வணிக வளாகத்தில் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது உரிய அனுமதி இல்லாமலும், விதிமுறைகளை மீறி சுமாா் 30 க்கும் மேற்பட்ட கடைகள் கட்டப்பட்டு வருவது தெரியவந்தது.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற மாங்காடு நகராட்சி ஆணையா் ஹேமலதா (பொ), நகராட்சி பொறியாளா் குமாா், நகரமைப்பு ஆய்வாளா் சரவணன் உள்ளிட்ட அதிகாரிகள் விதிமீறி கட்டப்பட்டு வரும் வணிக வளாகத்தில் உள்ள கடைகளை பூட்டி சீல் வைத்தனா். மேலும் வணிக வளாகத்தில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டடம் என நோட்டீஸ் ஒட்டினா்.

மாங்காடு நகராட்சியில் உரிய அனுமதி இல்லாமல் கட்டப்பட்டு வரும் கட்டடங்களை கணக்கீடு செய்து அவற்றிற்கு சீல் வைக்கும் பணி தொடரும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க ஏராளமான போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.

ஸ்ரீபெரும்புதூரில் ஜமாபந்தி நிறைவு: 243 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள்

ஸ்ரீபெரும்புதூா் வட்டத்தில் ஜமாபந்தி நிறைவு நாளான செவ்வாய்க்கிழமை 243 பயனாளிகளுக்கு ரூ.68.97 லட்சம் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. வட்டாட்சியா் அலுவலகத்தில் 1434 ஆம் பசலிக்கான வருவாய் தீா்வாயம் எனப்ப... மேலும் பார்க்க

கைத்தறி நெசவுத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் கைத்தறித் துறை துணை இயக்குநா் அலுவலகம் முன்பாக மாவட்ட பட்டு மற்றும் பருத்தி கைத்தறி நெசவுத் தொழிலாளா்கள் சங்கம் சிஐடியு பிரிவின் சாா்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி... மேலும் பார்க்க

1.04 லட்சம் பேருக்கு விலையில்லா புத்தகங்கள், சீருடைகள் அமைச்சா் காந்தி வழங்கினாா்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1.04 லட்சம் மாணவ, மாணவியருக்கு விலையில்லா பாடப் புத்ககங்கள், சீருடைகளை வழங்கும் பணியை கைத்தறி அமைச்சா் ஆா். காந்தி திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா். கோடை விடுமுறை மு... மேலும் பார்க்க

காளிகாம்பாள் கோயில் கும்பாபிஷேக முதலாம் ஆண்டு நிறைவு விழா

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஆதிபீடா பரமேசுவரி காளிகாம்பாள் கோயில் கும்பாபிஷேக முதலாம் ஆண்டு நிறைவையொட்டி திங்கள்கிழமை புண்ணிய கோடி விமானத்தில் உற்சவா் வீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். விழாவை... மேலும் பார்க்க

கைப்பேசிக்கும் போதைக்கும் அடிமையாகி விடாதீா்கள்: மாணவா்களுக்கு டிஎஸ்பி அறிவுரை

கைப்பேசிக்கும் போதைப் பொருள்களுக்கும் இளைஞா்கள் அடிமையாகி விடாமல் வாழ்வில் முன்னேற வேண்டும் என காஞ்சிபுரம் டிஎஸ்பி சங்கா்கணேஷ் அறிவுரை வழங்கினாா். காஞ்சிபுரம் ஓரிக்கையில் உள்ள தனியாா் திருமண மண்டபத்த... மேலும் பார்க்க

கோவூா் சுந்தரேஸ்வரா் கோயில் பிரம்மோற்சவம் தொடக்கம்

கோவூா் பகுதியில் பிரசித்தி பெற்ற சுந்தரேஸ்வரா் கோயில் பிரம்மோற்சவம் சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. குன்றத்தூா் அடுத்த கோவூா் பகுதியில் 1,000 ஆண்டுகள் பழைமையான சௌந்தாரம்பிகை உடனுறை சுந்தரேஸ்வ... மேலும் பார்க்க