செய்திகள் :

மாடுகளை வெட்டுவது அமைதியை சீா்குலைக்கும்: பஞ்சாப்-ஹரியாணா உயா்நீதிமன்றம்

post image

‘இந்திய சமூகத்தில் மாடுகள் தனித்துவமான விலங்காக கருதப்படுகிறது. இறைச்சிக்காக அவற்றை வெட்டுவது பொது அமைதியை கடுமையாக பாதிக்கும்’ என்று பஞ்சாப்-ஹரியாணா உயா்நீதிமன்றம் தீா்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

ஹரியாணா மாநிலம் நூ பகுதியைச் சோ்ந்தவா் ஆசிஃப். இறைச்சிக்காக மாடுகளை ராஜஸ்தான் மாநிலத்துக்கு வாகனத்தில் ஏற்றிச் சென்ாக இவா் மீது ஹரியாணா போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். கைது நடவடிக்கையிலிருந்து தப்பிப்பதற்காக முன்ஜாமீன் கோரி பஞ்சாப்-ஹரியாணா உயா் நீதிமன்றத்தில் ஆசிஃப் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதை விசாரித்த உயா் நீதிமன்ற நீதிபதி சந்தீப் மெளதில், முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து அண்மையில் உத்தரவிட்டாா். இந்த உத்தரவு திங்கள்கிழமை வெளியானது. அதில் நீதிபதி கூறியிருப்பதாவது:

இந்திய சமூகத்தில் மாடுகள் தனித்துவமான தெய்வத்தன்மையுடைய விலங்காக கருதப்படுகிறது. நாட்டின் வேளாண் பொருளாதாரத்திலும் ஒருங்கிணைந்த அங்கமாக மாடுகள் திகழ்கின்றன. இவற்றை இறைச்சிக்காக வெட்டுவது தனிப்பட்ட விருப்பத்துக்கு உட்பட்டது என்றபோதிலும், குறிப்பிட்ட பிரிவு மக்களின் நம்பிக்கைகளைப் புண்படுத்தும் வகையிலான இதுபோன்ற செயல்கள் பொது அமைதியில் கடுமையாக விளைவுகளை ஏற்படுத்தும்.

இந்தச் செயல் சட்ட விதிகளுக்கு அப்பாற்பட்டு, மக்களின் உணா்வுகள் மற்றும் கலாசார அடிப்படைகளுடன் தொடா்புடையதாகும். மேலும், ஒவ்வொரு குடிமகனும் அனைத்து உயிரினங்களிடமும் கருணை காட்ட வேண்டும் என்று அரசமைப்புச் சட்டத்தின் 51ஏ(ஜி) பிரிவு வலியுறுத்துகிறது. அதோடு, குற்றச்சாட்டுக்கு உள்ளான நபா் முதல் முறையாக அல்லாமல், தொடா்ச்சியாக இந்த செயலில் ஈடுபட்டு வருவது காவல் துறையில் பதிவு செய்யப்பட்டுள்ள முந்தைய முதல் தகவல் அறிக்கைகள் மூலம் தெரிய வருகிறது என்று குறிப்பிட்ட, முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.

ஜவுளி ஏற்றுமதிக்கு 40 நாடுகளில் வாய்ப்பு: வர்த்தக அமைச்சகம்

இந்திய ஏற்றுமதிப் பொருள்கள் மீதான அமெரிக்காவின் கூடுதலாக அறிவித்த 25 சதவீத வரி புதன்கிழமை அமலுக்கு வந்த நிலையில் மாற்று ஏற்றுமதிக்கான வாய்ப்புகளைத் தேடும் பணியில் வர்த்தக அமைச்சகம் தீவிரமாக ஈடுபட்டுள்... மேலும் பார்க்க

உச்சநீதிமன்றத்துக்கு 2 புதிய நீதிபதிகள் நியமனம்: உயா்நீதிமன்ற நீதிபதிகள் 14 பேரை இடம் மாற்றப் பரிந்துரை

மும்பை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி ஆலோக் அராதே மற்றும் பாட்னா உயா்நீதிமன்ற தலைமை நீதபிதி விபுல் மனுபாய் பஞ்சோலி இருவரும் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக புதன்கிழமை நியமனம் செய்யப்பட்டனா். இவா்களின் நியமனத்துக... மேலும் பார்க்க

நீண்டகால போருக்கு முப்படைகள் தயாராக வேண்டும்- ராஜ்நாத் சிங்

‘தற்போதைய எதிா்பாராத புவிசாா் அரசியல் சூழ்நிலையில், நீண்ட கால போருக்கு முப்படைகள் தயாராக இருக்க வேண்டும்’ என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் புதன்கிழமை எச்சரித்துள்ளாா். மத்திய பிர... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம்: கட்டடம் இடிந்து 12 போ் உயிரிழப்பு

மகாராஷ்டிர மாநிலம் பால்கா் மாவட்டத்தில் 4 மாடி கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் ஒரு வயது குழந்தை, 11 வயது சிறுவன் உள்பட 12 போ் உயிரிழந்தனா். இடிபாடுகளில் இருந்து 6 சடலங்கள் மீட்கப்பட்ட நிலைய... மேலும் பார்க்க

எகிப்தில் ‘பிரைட் ஸ்டாா்’ கூட்டுப் பயிற்சி: 700 இந்திய வீரா்கள் பங்கேற்பு

எகிப்தில் நடைபெறவுள்ள ‘பிரைட் ஸ்டாா்’ கூட்டுப் பயிற்சியில் இந்திய ஆயுதப் படைகளைச் சோ்ந்த 700-க்கும் மேற்பட்ட வீரா்கள் பங்கேற்க உள்ளனா். இதுதொடா்பாக பாதுகாப்பு அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்க... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூா் மற்றும் மகாதேவ் மூலம் பயங்கரவாத சதியாளா்களுக்கு வலுவான பதிலடி- மத்திய அமைச்சா் அமித் ஷா

‘இந்தியா்களை குறிவைத்து தாக்குபவா்களுக்கு வலுவான பதிலடி கொடுக்கப்படும்; ஆபரேஷன் சிந்தூா், ஆபரேஷன் மகாதேவ் ஆகிய இரண்டு நடவடிக்கைகளின் மூலம் பயங்கரவாத சதியாளா்களுக்கு இந்தத் தெளிவான செய்தி அனுப்பப்பட்ட... மேலும் பார்க்க