செய்திகள் :

மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: ஒடிஸா காங்கிரஸ் இளைஞரணி தலைவர் கைது!

post image

மாணவிக்கு பாலியல் வன்கொடுமை அளித்த வழக்கில், ஒடிஸா மாநில காங்கிரஸ் இளைஞரணி தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஒடிஸா காங்கிரஸ் இளைஞரணி தலைவர் உதித் பிரதான், தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக 19 வயது பொறியியல் மாணவி புவனேஸ்வர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரில் தெரிவித்திருப்பதாவது:

”கடந்த மார்ச் 18 ஆம் தேதி பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது தோழிகள் இருவரை புவனேஸ்வரில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அழைத்துச் சென்ற உதித் பிரதான், குளிர்பானம் எனக் கூறி அவர்களுக்கு மதுபானத்தை அளித்துள்ளார்.

பின்னர், 19 வயது மாணவி மயக்கமடைந்த நிலையில், அவரை உதித் பிரதான் மற்றும் அவரது நண்பர்கள் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதுகுறித்து வெளியில் கூறினால், கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அந்த மாணவிக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து புகார் அளிக்க தயங்கிய மாணவி, 4 மாதங்களுக்கு பிறகு மஞ்சேஸ்வர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரைத் தொடர்ந்து, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த காவல்துறையினர் ஞாயிற்றுக்கிழமை இரவே உதித் பிரதானை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உதித் பிரதானை இன்று நீதிமன்றத்தில் புவனேஸ்வர் காவல்துறையினர் ஆஜர்படுத்தவுள்ளனர்.

இந்த நிலையில், ஒடிஸா மாநில காங்கிரஸ் இளைஞரணி தலைவர் உதித் பிரதானை உடனடியாக இடைநீக்கம் செய்வதாக தேசிய இளைஞரணி தலைவர் தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே, ஒடிஸாவின் பாலாசோரில் உதவிப் பேராசிரியர் பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில் போராட்டம் நடைபெற்று வருகின்றது.

இதனிடையே, காங்கிரஸ் இளைஞரணி தலைவர் மீதான பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு அந்த மாநிலத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The Odisha Congress Youth Wing president has been arrested in a case of sexual assault on a student.

இதையும் படிக்க : மும்பை ரயில் குண்டுவெடிப்பு: குற்றஞ்சாட்டப்பட்ட 12 பேரும் விடுதலை; அரசு தரப்பின் தோல்வி

பதவிக்காலம் முடிவதற்குள் குடியரசு துணைத் தலைவர் ராஜிநாமா: அடுத்து என்ன நடக்கும்?

குடியரசு துணைத் தலைவர் பதவி வகித்த ஜகதீப் தன்கர் பதவிக்காலம் முடிவதற்குள் ராஜிநாமா செய்துள்ளார்.‘குடியரசு துணைத் தலைவர்' என்னும் இந்திய அரசமைப்பின் இரண்டாவது பெரிய பதவியிலிருக்கும் ஒருவர் தமது பதவிக்க... மேலும் பார்க்க

‘ஏழைகளின் போராளி அச்சுதானந்தன்' - ராகுல் காந்தி இரங்கல்!

கேரள முன்னாள் முதல்வரும் மூத்த கம்யூனிஸ்ட் தலைவருமான வி. எஸ். அச்சுதானந்தன் மறைவுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.ராகுல் காந்தி வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், ... மேலும் பார்க்க

போர் விமான விபத்து: வங்கதேசத்துக்கு உதவத் தயார் - பிரதமர் மோடி

வங்க தேசத்தில் விமானப் படைக்குச் சொந்தமான போர் விமானம் விபத்துக்குள்ளான விவகாரத்தில் சாத்தியமான அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பயிற்சியில் ஈடுபட்ட... மேலும் பார்க்க

குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் ராஜிநாமா!

குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் தனது பதவியை ராஜிநாமா செய்வதாக அறிவித்துள்ளார். மருத்துவ காரணங்களுக்காக பதவியை ராஜிநாமா செய்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் பார்க்க

முன்னாள் முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தன் மறைவு: கேரளத்தில் நாளை பொது விடுமுறை!

முன்னாள் முதல்வர் வி. எஸ். அச்சுதானந்தன் மறைவையொட்டி, கேரளத்தில் 3 நாள்களுக்கு அரசுமுறை துக்கம் அனுசரிக்கப்படுகிறது. திருவனந்தபுரத்திலுள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வி. எஸ். அச்சுதானந்த... மேலும் பார்க்க

நீதிபதி யஷ்வந்த் வர்மாவை நீக்கக் கோரி மாநிலங்களவை உறுப்பினர்கள் நோட்டீஸ்!

நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கம் செய்யக் கோரி மாநிலங்களவை உறுப்பினர்கள் நோட்டீஸ் வழங்கியுள்ளதாக அவையின் தலைவர் ஜகதீப் தன்கர் இன்று (ஜூலை 21) தெரிவித்துள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் உரிய நடவடி... மேலும் பார்க்க