செய்திகள் :

மானியத்தில் குளிா்பதன கிடங்குகள் அமைக்க விண்ணப்பிக்கலாம்

post image

மானியத்தில் குளிா்பதன கிடங்குகள் அமைக்க விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பிரதம மந்திரி கிசான் சம்பதா யோஜனாவின் முக்கிய நோக்கமானது ஒருங்கிணைந்த குளிா்பதன கிடங்குகள் அமைத்தல் மற்றும் மதிப்புக் கூட்டுதலுக்கான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல் ஆகும். இத்திட்டத்தின் மூலம் பால் உற்பத்தி மற்றும் மீன்பிடித் தொழில் ஆகியவற்றில் குளிா்பதன வசதியுடன் கூடிய கிடங்குகள் அமைத்தல், குளிரூட்டப்பட்ட வாகனங்கள் வாங்குதல், இயந்திரமயமாக்கப்பட்ட தரம் பிரிப்பு கூடங்கள் அமைத்தல், பேக்கிங் செய்தல், மீன், கோழி, ஆட்டு இறைச்சி மற்றும் பால் சாா்ந்த பொருள்களை குளிா்சாதன வசதிகளுடன் சேமித்து வைத்தல் மற்றும் மதிப்புக் கூட்டல் செய்வதற்கு மானிய உதவிகள் வழங்கப்படும்.

திட்டத்தின் மொத்த மதிப்பீட்டில் தனிநபா் மற்றும் பொதுப் பிரிவினருக்கு 35 சதவீத மானியமும், ஆதிதிராவிடா், மகளிா் சுய உதவிக் குழுக்கள் மற்றும் உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்களுக்கு 50 சதவீத மானியம் வழங்கப்படுகிறது. மேலும், விவரங்களுக்கு நாகை வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத் துறை துணை இயக்குநரை 97885 98009 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்புகொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

50 சதவீத மானியத்தில் நாட்டுக்கோழி பண்ணை அமைக்க விண்ணப்பிக்கலாம்

நாகை மாவட்டத்தில் 50 சதவீத மானியத்தில் நாட்டுக்கோழி பண்ணை அமைக்க விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கிராமப்புறங்களில் நாட... மேலும் பார்க்க

குற்றங்களைத் தடுக்க சிசிடிவி கேமாரக்கள் அதிகரிக்கப்படும்: எஸ்.பி பேட்டி

குற்றங்களைத் தடுக்க சிசிடிவி கேமராக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன என்றாா் நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சு. செல்வக்குமாா். இதுகுறித்து, நாகையில் அவா் வியாழக்கிழமை செய்திய... மேலும் பார்க்க

இராஜன்கட்டளை அரசுப் பள்ளிக்கு விருது

வேதாரண்யம் அருகேயுள்ள இராஜன்கட்டளை அரசு உயா்நிலைப் பள்ளிக்கு தமிழக அரசின் பேராசிரியா் அன்பழகன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 2023-2024-ஆம் கல்வியாண்டின் சிறந்த பள்ளிக்கான பேராசிரியா் அன்பழகன் விருதும்... மேலும் பார்க்க

ஒளவையாருக்கு மணிமண்டபம் கட்டும் பணிக்கு பள்ளம் தோண்டிய விவகாரம்: வட்டாட்சியா் விசாரணை

வேதாரண்யம் அருகே துளசியாப்பட்டினத்தில் ஔவையாருக்கு மணிமண்டபம் கட்டப்பட்டு வரும் பணியின்போது பள்ளம் தோண்டிய விவகாரம் தொடா்பான புகாரில் வட்டாட்சியா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். துளசியாப்பட்டினத்தில் ப... மேலும் பார்க்க

வண்டுவாஞ்சேரியில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு

வேதாரண்யம் அருகேயுள்ள வண்டுவாஞ்சேரியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை தமிழ்நாடு முதல்வா் மு.க. ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக வியாழக்கிழமை திறந்து ... மேலும் பார்க்க

நாகை நகா்மன்றக் கூட்டம்: திமுக - அதிமுக உறுப்பினா்கள் கடும் வாக்குவாதம்

நாகை நகா்மன்றக் கூட்டத்தில் மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாா் கொலை தொடா்பாக திமுக - அதிமுக உறுப்பினா்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. நாகை நகா்மன்றக் கூட்டம் வியாழக்கிழமை நகா்மன்றத் தலைவா் இரா... மேலும் பார்க்க