செய்திகள் :

மான்செஸ்டர் டெஸ்ட்: இந்தியா பேட்டிங்! சிஎஸ்கே வீரர் அன்ஷுல் காம்போஜுக்கு வாய்ப்பு!

post image

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட ‘ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபியில்’ விளையாடி வருகிறது. இந்தத் தொடரில் இந்தியா ஒரு போட்டியில் வெற்றி பெற்ற நிலையில், இங்கிலாந்து 2 போட்டிகளில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலையில் இருக்கிறது. இந்தத் தொடரின் வெற்றியைத் தீர்மானிக்கும் 4-வது போட்டி மான்செஸ்டரில் இன்று (ஜூலை 23) தொடங்கியது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பந்துவீசுவதாகத் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியில் ஆகாஷ் தீப், நிதிஷ் ரெட்டி மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் காயம் காரணமாக விலகியுள்ளனர். இதனால், ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிவரும் இளம் வீரர் அன்ஷுல் காம்போஜுக்கு இந்திய அணியில் முதல்முறையாக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து அணியில் ஒரேயொரு மாற்றமாக சோயிப் பஷீருக்குப் பதிலாக டாஸன் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்திய அணி விவரம்

ஷுப்மன் கில் (கேப்டன்), கே.எல்.ராகுல், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரவீந்திர ஜடேஜா, சாய் சுதர்சன், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், அன்ஷுல் கம்போஜ்.

இங்கிலாந்து அணி

பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்) , ஜேமி ஸ்மித் (விக்கெட் கீப்பர்) , ஜாக் கிராலி, பென் டக்கெட், ஆலிவர் போப், ஜோ ரூட், ஹாரி புரூக், லியாம் டாஸன், கிறிஸ் வோக்ஸ், கார்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜோஷ் டங், கஸ் அட்கின்சன், ஜேக்கப் பெதெல்.

india vs england toss update

இதையும் படிக்க :ஹர்மன்ப்ரீத் சதம், கிராந்தி 6 விக்கெட்டுகள்.! தொடரை வென்று வரலாறு படைத்தது இந்தியா!

ராசேந்திர சோழனின் பிறந்தநாளில் சுற்றுலா மேம்பாட்டுப் பணிகளை அறிவிப்பதில் மகிழ்ச்சி: முதல்வர்

ராசேந்திர சோழனின் பிறந்தநாளில், அவர் உருவாக்கிய சோழகங்கம் ஏரியில் நீர்வள ஆதார மேம்பாட்டுப் பணிகளும் - சுற்றுலா மேம்பாட்டுப் பணிகளும் மேற்கொள்ளப்படும் என்று அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன் என்று ... மேலும் பார்க்க

பிரதமரும் அமைச்சரவைச் சகாக்களும் இன்னும் மெளனம் காப்பது ஏன்?

குடியரசு துணைத் தலைவர் ராஜிநாமா குறித்து பிரதமரும் அமைச்சரவைச் சகாக்களும் இன்னும் மெளனம் காப்பது ஏன்? என மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார். இந்தியாவின் 14-ஆவது கு... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் நிலச்சரிவு: தொழிலாளிகள் 2 பேர் பலி

ஜம்மு-காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி தொழிலாளிகள் இரண்டு பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனர்.செவ்வாய் இரவு மற்றும் புதன்கிழமை அதிகாலை மஹோர் தாலுக... மேலும் பார்க்க

பெருமுதலாளிகள் மோசடி என்றால் வங்கிகள் கைகளை இறுகக் கட்டிக் கொள்வது ஏன்?: சு.வெங்கடேசன் எம்.பி.

அனில் அம்பானி தொடர்புடைய வங்கி கணக்குகளை “மோசடி” என ஸ்டேட் வங்கி வகைப்படுத்தியுள்ளது. ஆனால்… பல்லாயிரம் கோடி மோசடி பணத்தை 9 ஆண்டுகளாக மீட்கவில்லை. சாமானிய மக்களின் கடன் என்றால் கழுத்தில் துண்டை போட்டு... மேலும் பார்க்க

புதிய உச்சத்தில் தங்கம் விலை: பவுன் ரூ.75 ஆயிரத்தை கடந்து விற்பனை!

வரலாற்றில் முதல் முறையாக சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக பவுனுக்கு ரூ.760 உயா்ந்து ரூ. 75,040-க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை உயர்வு நகைப்பிரியர்களை அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளது. சென்னையில்... மேலும் பார்க்க

சென்னையில் குழந்தை கழுத்தறுத்து கொலை: உறவினர்கள் போராட்டம்

சென்னை ஓட்டேரியில் குடும்பத் தகராறில் குழந்தையை கழுத்தறுத்து கொன்று தற்கொலைக்கு முயன்ற தந்தையை கைது செய்யக்கோரி தாயின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குழந்தையின் தாயை தந்தை செல்போனில் மிரட்ட... மேலும் பார்க்க