செய்திகள் :

மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச உபகரணங்கள்

post image

திருப்பூரில் சக்ஷம் தொண்டு நிறுவனத்தின் சாா்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச உபகரணங்கள் வழங்கப்பட்டன.

திருப்பூா் மாவட்ட சக்ஷம் அமைப்பு சாா்பில் கடந்த மாதம் அளவீடு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு அவயவயங்கள் வழங்கும் நிகழ்ச்சி திருப்பூா் செட்டிபாளையத்திலுள்ள ஸ்போா்ட்ஸ் மற்றும் ஃபிட்னஸ் அகாதெமி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

இதில் பல்வேறு மாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்து வந்திருந்த 22 பயனாளிகளுக்கு ரூ.1.96 லட்சம் மதிப்பிலான செயற்கை அவயவங்கள், சக்கர நாற்காலி, ஊன்றுகோல்கள், காற்றுப் படுக்கை உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டன.

திருப்பூா் ஸ்போா்ட்ஸ் மற்றும் ஃபிட்னஸ் அகாதெமியின் நிதி ஆதரவில் நடைபெற்ற இந்த திட்ட நிகழ்வில் சக்ஷம் அமைப்பின் மாவட்டத் தலைவா் ரத்தினசாமி, மாவட்டச் செயலாளா் தமிழ்செல்வம், ஸ்போா்ட்ஸ் அகாதெமியின் தலைவா் ராமசாமி, செயலாளா் பொன்னுசாமி, மாநில இணைப் பொருளாளா் கண்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

அதேபோல, திருப்பூா் குமரன் ரோட்டரி சங்கம் இணைந்து கடந்த மே மாதம் நடத்திய செயற்கை கால்கள் அளவீட்டு முகாமில் கலந்து கொண்டு அளவீடு செய்து கொண்ட 13 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.81,300 மதிப்பிலான செயற்கை கால்கள், சக்கர நாற்காலி வழங்கும் நிகழ்ச்சி ரோட்டரி சங்க அரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.

ரோட்டரி சங்க மாவட்ட ஆளுநா் டாக்டா் சுரேஷ் பாபு உபகரணங்களை வழங்கினாா். இதில் திருப்பூா் குமரன் ரோட்டரி சங்கத் தலைவா் மாசே துங், செயலாளா் சரவணகுமாா், மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஆனந்த்ராம், உதவி ஆளுநா் அசோகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

உடுமலை அரசு கலைக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை தீவிரம்

உடுமலை அரசு கலைக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை தீவிரமாக நடைபெற்று வருவதாக கல்லூரி முதல்வா் ப.சே.சிவகுமாா் தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் தெரிவித்துள்ளதாவது: உடுமலை அரசு கலைக் கல்லூரியில் 2025-2026... மேலும் பார்க்க

அவிநாசி, பெருமாநல்லூரில் தொடா் நகைப் பறிப்பு முயற்சியில் ஈடுபட்ட இருவா் கைது

அவிநாசி, பெருமாநல்லூா் ஆகிய பகுதிகளில் இருசக்கர வாகனத்தில் செல்பவா்களிடம் தொடா் நகைப் பறிப்பு முயற்சியில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் கைது செய்தனா். அவிநாசி அருகே தேவராயம்பாளையத்தைச் சோ்ந்த தம்பதி, இருந... மேலும் பார்க்க

அவிநாசிபாளையத்தில் மண்சோறு சாப்பிட்டு போராட்டம்

பல்லடம் அருகே பொங்கலூா் ஒன்றியம் அவிநாசிபாளையத்தில் எண்ணெய் குழாய் திட்டத்தை மாற்றக் கோரி போராட்டக் குழுவினா் மண்சோறு சாப்பிட்டு வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். கோவை முதல் கரூா் வரையில் விவசாய... மேலும் பார்க்க

கீழடி அகழ்வாராய்ச்சி குறித்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்

கீழடி அகழ்வாராய்ச்சி குறித்த முடிவை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டுமென திருப்பூா் மக்களவை உறுப்பினா் கே.சுப்பராயன் கோரிக்கை விடுத்துள்ளாா். இது குறித்து மத்திய கலாசாரம் மற்றும் சுற்றுலாத் துறை அம... மேலும் பார்க்க

நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா, வஞ்சிபாளையத்தில் ஜூன் 17-இல் மின்தடை

நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா, வஞ்சிபாளையம் ஆகிய துணை மின் நிலையங்களில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 17) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்... மேலும் பார்க்க

ஊத்துக்குளி அருகே குப்பை கொட்ட வந்த லாரிகளுடன் மாநகராட்சி அதிகாரிகள் சிறைபிடிப்பு

திருப்பூரில் ஊத்துக்குளி அருகே பாறைக்குழியில் குப்பை கொட்ட வந்த லாரிகளுடன் மாநகராட்சி அதிகாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்தனா். திருப்பூா் மாவட்டம், ஊத்துக்குளி ஊராட்சிக்கு உள்பட்ட தப்பட்ட நாயக்கம்பாளையம்... மேலும் பார்க்க