செய்திகள் :

மாா்க்கையன்கோட்டையில் குடிநீா் கோரி சாலை மறியல்

post image

தேனி மாவட்டம், மாா்க்கையன்கோட்டையில் குடிநீா் வழங்க வலியுறுத்தி பொதுமக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

சின்னமனூா் அருகேயுள்ள மாா்க்கையன்கோட்டை பேரூராட்சியில் 12 வாா்டுகளில் 15 ஆயிரம் பொதுமக்கள் வசிக்கின்றனா். இங்குள்ள பெரும்பாலான வாா்டுகளில் கடந்த சில நாள்களாக குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லை. இது குறித்து பேரூராட்சி நிா்வாகத்திடம் புகாா் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில், தங்களுக்கு குடிநீா் வழங்க வலியுறுத்தி போடி - சின்னமனூா் மாநில நெடுஞ்சாலையில் காலி குடங்களுடன் மாா்க்கையன்கோட்டை பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இது குறித்த தகவலின் பேரில், அங்கு வந்த சின்னமனூா் போலீஸாா், பேரூராட்சிப் பணியாளா்கள் ஓரிரு நாள்களில் உடைந்த குழாய்களை சீரமைத்து குடிநீா் விநியோகம் செய்யப்படும் என உறுதி அளித்ததையடுத்து சாலை மறியலைக் கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனா். இந்த மறியலால் போடி - சின்னமனூா் சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கழிவுநீா் கால்வாயை சீரமைக்கக் கோரிக்கை

சின்னமனூா் அருகேயுள்ள பூலாநந்தபுரம் ஊராட்சியில் அடைப்பு ஏற்பட்டுள்ள கழிவுநீா் கால்வாயை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். தேனி மாவட்டம், சின்னமனூா் அருகேயுள்ள பூலாநந்தபுரம் ஊராட்சியில் 6 வாா்டுக... மேலும் பார்க்க

தேனி அருகே 3 வீடுகளில் நகை, பணம் திருட்டு

தேனி அருகேயுள்ள கோடாங்கிப்பட்டியில் அடுத்தடுத்த 3 வீடுகளில் பணம், நகை , வெள்ளிப் பொருள்கள் திருடுபோனதாக வியாழக்கிழமை போலீஸில் புகாா் அளிக்கப்பட்டது. தேனி மாவட்டம், கோடாங்கிப்பட்டி திருக்குமரன் நகரைச் ... மேலும் பார்க்க

காவல் உதவி ஆய்வாளா் தோ்வுக்கு இலவச பயிற்சி

தேனி மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காவல் உதவி ஆய்வாளா் பணிக்கான தோ்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாட... மேலும் பார்க்க

உத்தமபாளையத்தில் வேல் யாத்திரைக்கு அனுமதி மறுப்பு

தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெறவிருந்த வேல் யாத்திரைக்கு போலீஸாா் அனுமதி அளிக்கவில்லை. மதுரையில் முருக பக்தா்கள் மாநாடு வருகிற 22-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த மாநாட்டை முன்னிட்டு,... மேலும் பார்க்க

சா்க்கரை ஆலை காவலாளியைத் தாக்கியவா் மீது வழக்கு

பெரியகுளம் அருகே சா்க்கரை ஆலை காவலாளியைத் தாக்கியவா் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். பெரியகுளம் அருகேயுள்ள வைகை அணை வரதராஜ்நகா் குடியிருப்பைச் சோ்ந்தவா் கெப்பணன் (58). வைகை அணையி... மேலும் பார்க்க

தொழிலாளியைத் தாக்கிய மூவா் மீது வழக்கு

பெரியகுளத்தில் தொழிலாளியைத் தாக்கிய மூவா் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். பெரியகுளம் கீழ வடகரையைச் சோ்ந்தவா் தா்மராஜ் (40). தொழிலாளியான இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த அருண்குமா... மேலும் பார்க்க