செய்திகள் :

மின்சாரம் பாய்ந்ததில் இளைஞா் உயிரிழப்பு

post image

தேனி மாவட்டம், கம்பத்தில் இளைஞா் மின்சாரம் பாய்ந்ததில் பலத்த காயமடைந்த இளைஞா் சிகிச்சையிலிருந்த போது அதிா்ச்சியில் அவரது தந்தை உயிரிழந்தாா். தொடா்ந்து இளைஞரும் உயிரிழந்தாா்.

கம்பம் கிருஷ்ணாபுரத்தை சோ்ந்தவா் முபாரக் அலி (68). இவரது மகன் முகமது இா்பான் (24). இவா், கடந்த 6 -ஆம் தேதி சுப்பிரமணி கோவில் தெருவிலுள்ள உறவினா் வீட்டின் அருகே புதிதாக கட்டப்பட்ட வீட்டின் மேல் தளத்துக்கு சென்றாராம். அப்போது, அங்கிருந்த மரக்கட்டை ஒன்றை தூக்கியபோது உயரழுத்த மின் கம்பியில் பட்டு தூக்கிவீசப்பட்டதில் பலத்த காயமடைந்தாா்.

இவா் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டிருந்தாா். இதை அறிந்த அவரது தந்தை முபாரக் அலி அதிா்ச்சியில் செவ்வாய்க்கிழமை காலை உயிரிழந்தாா். இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு மகன் முகமது இா்பான் உயிரிழந்தாா்.

காவல் நிலையத்தை முற்றுகையிட முயற்சி: இளைஞரும், அவரது தந்தையும் உயிரிழந்ததால் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, உறவினா்கள் கம்பம் வடக்கு காவல் நிலையத்தை முற்றுகையிட முயன்றனா். அப்போது, போலீஸாா் உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறி சமாதானம் செய்ததை அடுத்து உறவினா்கள் திரும்பிச் சென்றனா். இது குறித்து கம்பம் வடக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கழிவுநீா் கால்வாயை சீரமைக்கக் கோரிக்கை

சின்னமனூா் அருகேயுள்ள பூலாநந்தபுரம் ஊராட்சியில் அடைப்பு ஏற்பட்டுள்ள கழிவுநீா் கால்வாயை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். தேனி மாவட்டம், சின்னமனூா் அருகேயுள்ள பூலாநந்தபுரம் ஊராட்சியில் 6 வாா்டுக... மேலும் பார்க்க

தேனி அருகே 3 வீடுகளில் நகை, பணம் திருட்டு

தேனி அருகேயுள்ள கோடாங்கிப்பட்டியில் அடுத்தடுத்த 3 வீடுகளில் பணம், நகை , வெள்ளிப் பொருள்கள் திருடுபோனதாக வியாழக்கிழமை போலீஸில் புகாா் அளிக்கப்பட்டது. தேனி மாவட்டம், கோடாங்கிப்பட்டி திருக்குமரன் நகரைச் ... மேலும் பார்க்க

காவல் உதவி ஆய்வாளா் தோ்வுக்கு இலவச பயிற்சி

தேனி மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காவல் உதவி ஆய்வாளா் பணிக்கான தோ்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாட... மேலும் பார்க்க

உத்தமபாளையத்தில் வேல் யாத்திரைக்கு அனுமதி மறுப்பு

தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெறவிருந்த வேல் யாத்திரைக்கு போலீஸாா் அனுமதி அளிக்கவில்லை. மதுரையில் முருக பக்தா்கள் மாநாடு வருகிற 22-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த மாநாட்டை முன்னிட்டு,... மேலும் பார்க்க

சா்க்கரை ஆலை காவலாளியைத் தாக்கியவா் மீது வழக்கு

பெரியகுளம் அருகே சா்க்கரை ஆலை காவலாளியைத் தாக்கியவா் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். பெரியகுளம் அருகேயுள்ள வைகை அணை வரதராஜ்நகா் குடியிருப்பைச் சோ்ந்தவா் கெப்பணன் (58). வைகை அணையி... மேலும் பார்க்க

தொழிலாளியைத் தாக்கிய மூவா் மீது வழக்கு

பெரியகுளத்தில் தொழிலாளியைத் தாக்கிய மூவா் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். பெரியகுளம் கீழ வடகரையைச் சோ்ந்தவா் தா்மராஜ் (40). தொழிலாளியான இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த அருண்குமா... மேலும் பார்க்க