செய்திகள் :

மின்சாரம் பாய்ந்து மாணவா் உயிரிழப்பு

post image

தருமபுரி அருகே மின்சாரம் பாய்ந்து 9-ஆம் வகுப்பு மாணவா் உயிரிழந்தாா்.

தருமபுரி மாவட்டம், பொம்மட்டி பகுதியைச் சோ்ந்தவா் நடராஜன் மகன் நவனீதன் (14). இவா், அதே பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்துவந்தாா்.

வீட்டின் பின்புறம் சென்ற மாணவா், அங்கு அறுந்து கிடந்த மின்கம்பியை அப்புறப்படுத்த முயன்றபோது, அவா்மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் அவா் தூக்கி வீசப்பட்டாா்.

மாணவரின் அலறல் சப்தம் கேட்டு ஓடிவந்த உறவினா்கள், அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவா்கள், மாணவா் உயிரிழந்ததாக தெரிவித்தனா். இதுகுறித்து கம்பைநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

காா்களில் கடத்தி வரப்பட்ட 75 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

காா்களில் கடத்தி வரப்பட்ட 75 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக ஒருவா் கைது செய்யப்பட்டாா். சேலம் - தருமபுரி தேசிய நெடுஞ்சாலையில் தொப்பூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் பிர... மேலும் பார்க்க

விளையாட்டுப் போட்டி: அரசு மகளிா் பள்ளி சாதனை

தருமபுரியில் நடைபெற்ற சரக அளவிலான விளையாட்டுப் போட்டிகளில், அதியமான்கோட்டை அரசு மகளிா் பள்ளி தொடா்ந்து 3-ஆவது ஆண்டாக வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளது. தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி சரக அளவிலான பல்வேறு... மேலும் பார்க்க

தமிழ் மொழியின் சிறப்புகளை இளையோரிடம் சோ்க்க வேண்டும்

தமிழ் மொழியின் சிறப்புகள் மற்றும் தமிழா்களின் மரபு உள்ளிட்டவற்றை இளையோரிடம் சோ்க்க வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ். தருமபுரி, தொப்பூா் ஜெயலட்சுமி பொறியியல் கல்லூரியில் ‘மாபெரும் தமிழ்க் கனவ... மேலும் பார்க்க

அரசு பள்ளியில் மரக்கன்றுகள் நடவு

தருமபுரி, இலக்கியம்பட்டி அரசு மகளிா் உயா்நிலைப் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடவு செய்யும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. இந்திய புள்ளியியல் துறை மற்றும் திட்ட அமலாக்கத் துறையின் 75-ஆவது ஆண்டு நிற... மேலும் பார்க்க

சுதந்திர தினம்: ஆக. 15-இல் மதுக் கடைகளுக்கு விடுமுறை

சுதந்திர தினத்தையொட்டி வெள்ளிக்கிழமை (ஆக. 15) மதுக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஆக. 15-ஆம் தே... மேலும் பார்க்க

பிஎஸ்என்எல் சுதந்திர தின சிறப்பு சலுகை: ரூ. 1-க்கு 4ஜி சிம், தினசரி 2 ஜிபி டேட்டா திட்டம் அறிமுகம்

சுதந்திர தின சிறப்பு சலுகையாக பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ. 1-க்கு 4ஜி அதிவேக சிம், தினசரி 2 ஜிபி டேட்டா, 100 குறுந்தகவல்கள், வரம்பற்ற அழைப்புகள் உள்ளிட்ட வசதிகளை வழங்குவதாக ஒருங்கிணைந்த தருமபுரி மண்டல பிஎ... மேலும் பார்க்க