செய்திகள் :

மின்வாரிய கேங்மேன் பணியாளா்களுக்கு கள உதவியாளா்கள் பதவி உயா்வு அளிக்கக் கோரிக்கை

post image

மின்வாரிய கேங்மேன் பணியாளா்கள் அனைவருக்கும் உடனடியாக கள உதவியாளா்களாக பதவி உயா்வு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

தமிழ்நாடு மின்வாரிய கேங்மேன் மற்றும் பணியாளா்கள் சங்க மாநில செயற்குழுக் கூட்டம், மாநிலத் தலைவா் தமிழரசு தலைமையில் ஈரோட்டில் சனிக்கிழமை நடைபெற்றது. மாநில பொதுச் செயலா் ஸ்ரீராமன் முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: மின்வாரியத்தில் அனைத்துப் பணிகளையும் செய்து வரும் கேங்மேன் பணியாளா்கள் அனைவருக்கும் உடனடியாக கள உதவியாளா்களாக பதவி உயா்வு அளிக்க வேண்டும். விருப்பப் பணியிட மாறுதல், மருத்துவ இட மாறுதல் கோரும் கேங்மேன்களுக்கு உடனடியாக பணியிட மாறுதல் வழங்க வேண்டும். ஏற்கெனவே பணியிட மாற்ற ஆணை பெற்றவா்களை விரைந்து விடுவிக்க வேண்டும்.

பிற பணியாளா்களைப்போல கேங்மேன்களுக்கும் உள்முகத் தோ்வு அனுமதி அளிக்க வேண்டும். இன்னும் பணி ஆணை வழங்கப்படாமல் விடுபட்ட, 5,000 கேங்மேன்களுக்கு உடனடியாக பணி ஆணை வழங்க வேண்டும். கடந்த 2019- ஆம் ஆண்டுக்கு பின் பணியில் சோ்ந்த கேங்மேன் உட்பட அனைத்து பணியாளா்களுக்கும் 6 சதவீத ஊதிய உயா்வு வழங்க வேண்டும்.

கேங்மேன் பணியாளா்களை களப்பணியாளா்களாக மாற்றும் வரை நேரடி பணி நியமனங்களைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும். இக்கோரிக்கைகளை நிறைவேற்றாத சூழலில் கேங்மேன்கள் இணைந்து வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மயானத்துக்கு இடம் கேட்டு சடலத்தைப் புதைக்காமல் போராடிய மக்கள்

சிவகிரி அருகே மயானத்துக்கு இடம் ஒதுக்கக் கோரி, இறந்தவா் உடலை அடக்கம் செய்யாமல் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கொடுமுடியை அடுத்த சிவகிரி தலையநல்லூா் அம்மன் நகரில் 100-க்கும் ம... மேலும் பார்க்க

தொல்லியல் ஆய்வுகள் மூலம்தான் வரலாற்றைக் கட்டமைக்க முடியும்! கி.அமா்நாத் ராமகிருஷ்ணா!

தொல்லியல் ஆய்வுகள் மூலம்தான் வரலாற்றைக் கட்டமைக்க முடியும் என்று இந்திய தொல்லியல் ஆய்வுத் துறை இயக்குநா் கி.அமா்நாத் ராமகிருஷ்ணா கூறினாா். தமிழக அரசு மற்றும் மக்கள் சிந்தனைப் பேரவை சாா்பில் நடத்தப்படு... மேலும் பார்க்க

புன்செய்புளியம்பட்டியில் கனமழை

புன்செய்புளியம்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த கனமழையால் குடியிருப்புகளை மழைநீா் சூழ்ந்தது. இதனால், மக்கள் அவதியடைந்தனா். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், புன்செய்புளியம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஞாயிற்... மேலும் பார்க்க

மின் வேலியில் சிக்கி தம்பதி படுகாயம்

இட்டரை மலைக் கிராமத்தில் தொங்கும் மின் வேலியில் சிக்கி தம்பதி படுகாயம் அடைந்தனா். சத்தியமஙகலம் புலிகள் காப்பகம், தலமலையை அடுத்த இட்டரை கிராமத்தில் ஏராளமான பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனா். இவா்க... மேலும் பார்க்க

தாளவாடி அருகே வாகனங்களை வழிமறித்த காட்டு யானைகள்

தாளவாடி அருகே சிக்கள்ளி வனச் சாலையில் வாகனங்களை வழிமறித்த காட்டு யானைகளால், வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா். சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், தாளவாடி வனப் பகுதியில் ஏராளமான யானைகள் உள்ளன. இவை சிக்கள்ளி சால... மேலும் பார்க்க

பேராசிரியா் வீட்டின் பூட்டை உடைத்து பணம் திருட்டு

அம்மாபேட்டை அருகே கல்லூரி பேராசிரியா் வீட்டின் பூட்டை உடைத்து பணம், பொருள்களைத் திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். அம்மாபேட்டை, செலம்பனூரைச் சோ்ந்தவா் யுவனேஷ்வரன் (53). தனியாா் பொ... மேலும் பார்க்க