செய்திகள் :

மியான்மரில் நிலநடுக்கம்! ரிக்டர் அளவில் 4.2 ஆகப் பதிவு!

post image

மியான்மர் நாட்டில் 4.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மியான்மரில், இன்று (ஆக.20) மாலை 6.16 மணியளவில், நிலப்பரப்பில் இருந்து சுமார் 10 கி.மீ. ஆழத்தில் 4.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது பதிவாகியுள்ளதாக, தேசிய நில அதிர்வு மையம் அறிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தினால், ஏற்பட்ட உயிர் மற்றும் பொருள் சேதங்கள் குறித்து தற்போது வரை எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை.

இருப்பினும், மிதமான அளவிலான இந்த நிலநடுக்கத்தால், பெரியளவிலான பாதிப்புகள் எதுவும் ஏற்பட்டிருக்காது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில், இந்த நிலநடுக்கத்தினால் பின் அதிர்வுகள் உருவாகக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த மார்ச் 28 ஆம் தேதி மியான்மரில் ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தினால், சுமார் 3,000-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: பலரைக் கொல்வது வலிமை அல்ல: இஸ்ரேல் பிரதமருக்கு ஆஸி. பதிலடி!

A 4.2 magnitude earthquake has been reported in Myanmar.

எத்தனை பேரை கொல்ல முடியும் என்பது வலிமை இல்லை: இஸ்ரேல் பிரதமருக்கு ஆஸி. பதிலடி!

ஆஸ்திரேலியா நாட்டின் பிரதமர் ஆண்டனி அல்பானீஸ் பலவீனமானவர் என்ற இஸ்ரேல் பிரதமரின் கருத்துக்கு, அந்நாட்டு உள்துறை அமைச்சர் பதிலடி கொடுத்துள்ளார். காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் உடனடியாக முடிவுக்குக் ... மேலும் பார்க்க

போலந்தில் யூஎஃப்ஓ விபத்து? வானில் பறந்து வந்து கீழே விழுந்து வெடித்த மர்ம பொருள்!

போலந்து நாட்டின் கிழக்கு மாகாணத்தில், வானில் பறந்து வந்த மர்ம பொருள் திடீரென கிழே விழுந்து வெடித்ததால், அங்கு பரபரப்பான சூழல் நிலவியுள்ளது.போலந்தின், ஒசினி கிராமத்தில் இன்று (ஆக.20) அதிகாலை 2 மணியளவில... மேலும் பார்க்க

மேற்கு கரையை இரண்டாகப் பிரிக்கக் கூடிய திட்டம்! இஸ்ரேல் அரசு ஒப்புதல்!

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரை பகுதியில் கட்டுமானங்கள் மேற்கொண்டு, அப்பகுதியை இரண்டாகப் பிரிக்கக் கூடிய சர்ச்சைக்குரிய திட்டத்துக்கு, இஸ்ரேல் அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. ஜெருசலேம் நகரத்துக்கு கிழக்குப்... மேலும் பார்க்க

ஆப்கன் பேருந்து விபத்து: பலி எண்ணிக்கை 78 ஆக அதிகரிப்பு!

ஆப்கானிஸ்தான் நாட்டில், புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற பேருந்து தீப்பிடித்த விபத்தில், பலியானவர்களின் எண்ணிக்கை 78 ஆக அதிகரித்துள்ளது. ஹெராத் மாகாணத்தின், குஸாரா மாவட்டத்தில் ஈரானில் இருந்து தாயகம் தி... மேலும் பார்க்க

பாலியல் தொழிலுக்காகக் கடத்தல்! அமெரிக்காவில் 5 இந்தியர்கள் கைது!

பாலியல் தொழிலுக்காக சிறுமிகளை கடத்திய வழக்கில் 5 இந்தியர்களை அமெரிக்க காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.அமெரிக்காவின் நெப்ராஸ்கா மாகாணத்தில் மனித கடத்தலில் ஈடுபடும் கும்பலைக் குறிவைத்து கடந்த வாரம் மிக... மேலும் பார்க்க

ஆப்கனில் பேருந்து தீப்பிடித்தது: 71 பேர் உடல் கருகி பலி!

ஆப்கானிஸ்தானில் புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற பேருந்து தீப்பிடித்து விபத்துக்குள்ளானதில் 71 பேர் உடல் கருகி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாகாண அரசு செய்தித் தொடர்பாளர் அஹ்மதுல்லா முத... மேலும் பார்க்க