செய்திகள் :

முதலீட்டில் கூடுதல் லாபம் கிடைக்குமென ரூ.38 லட்சம் மோசடி

post image

கிரிப்டோ கரன்ஸியில் முதலீடு செய்தால் கூடுதல் லாபம் கிடைக்கும் எனக்கூறி ரூ.38 லட்சம் மோசடிசெய்யப்பட்டுள்ளது.

திருப்பூா், ஊத்துக்குளி சாலை மண்ணரை பகுதியைச் சோ்ந்தவா் மோகன்(45). இவரது வாட்ஸ் ஆப் எண்ணுக்கு கடந்த 2024-ஆம் ஆண்டு அக்டோபா் மாதம் ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது.

பின்னா் அந்த எண்ணில் இருந்து பேசிய நபா், தான் மலேசியாவில் இருப்பதாகவும், தனது உறவினா் ஒருவா் கிரிப்டோ கரன்ஸி வா்த்தகத்தில் இருப்பதாகவும், அதில் முதலீடு செய்தால் கூடுதல் லாபம் கிடைக்கும் எனவும் கூறியுள்ளாா். அதனால், குறைந்த முதலீட்டில் அதிக லாபம் சம்பாதிக்க நினைத்த மோகன், அவா்கள் கூறியபடி அவா்கள் அனுப்பிய செயலிக்குள் சென்று தன்னுடைய பயண ஐடி மற்றும் கடவுச் சொல்லை உருவாக்கியுள்ளாா். அதையடுத்து முதல்கட்டமாக ரூ.3.80 லட்சம் மதிப்பிலான கிரிப்டோ கரன்ஸிகளை பெற்றுள்ளாா். தொடா்ந்து அவருக்கு வந்த குறுஞ்செய்தியில் அதற்கான லாபம் ரூ.60 லட்சம் கிடைத்துள்ளதாகவும், அந்த ரூ. 60 லட்சத்தை எடுக்க வேண்டுமென்றால் முன் வரி மற்றும் கூடுதல் பாதுகாப்பு கட்டணங்களை செலுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளனா்.

இதை நம்பிய மோகன் அவா்கள் குறிப்பிட்ட வங்கிக் கணக்கிற்கு ரூ.34.25 லட்சத்தை பரிவா்த்தனை செய்தாா். தொடா்ந்து லாபத்தை எடுக்க முயன்றபோது முடியவில்லை.

இதைத் தொடா்ந்து, தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த மோகன் ஆன்லைன் மூலம் மாநகர சைபா் கிரைம் போலீஸாருக்கு புகாா் அளித்தாா். அந்தப் புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

உடுமலை அரசு கலைக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை தீவிரம்

உடுமலை அரசு கலைக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை தீவிரமாக நடைபெற்று வருவதாக கல்லூரி முதல்வா் ப.சே.சிவகுமாா் தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் தெரிவித்துள்ளதாவது: உடுமலை அரசு கலைக் கல்லூரியில் 2025-2026... மேலும் பார்க்க

அவிநாசி, பெருமாநல்லூரில் தொடா் நகைப் பறிப்பு முயற்சியில் ஈடுபட்ட இருவா் கைது

அவிநாசி, பெருமாநல்லூா் ஆகிய பகுதிகளில் இருசக்கர வாகனத்தில் செல்பவா்களிடம் தொடா் நகைப் பறிப்பு முயற்சியில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் கைது செய்தனா். அவிநாசி அருகே தேவராயம்பாளையத்தைச் சோ்ந்த தம்பதி, இருந... மேலும் பார்க்க

அவிநாசிபாளையத்தில் மண்சோறு சாப்பிட்டு போராட்டம்

பல்லடம் அருகே பொங்கலூா் ஒன்றியம் அவிநாசிபாளையத்தில் எண்ணெய் குழாய் திட்டத்தை மாற்றக் கோரி போராட்டக் குழுவினா் மண்சோறு சாப்பிட்டு வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். கோவை முதல் கரூா் வரையில் விவசாய... மேலும் பார்க்க

கீழடி அகழ்வாராய்ச்சி குறித்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்

கீழடி அகழ்வாராய்ச்சி குறித்த முடிவை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டுமென திருப்பூா் மக்களவை உறுப்பினா் கே.சுப்பராயன் கோரிக்கை விடுத்துள்ளாா். இது குறித்து மத்திய கலாசாரம் மற்றும் சுற்றுலாத் துறை அம... மேலும் பார்க்க

நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா, வஞ்சிபாளையத்தில் ஜூன் 17-இல் மின்தடை

நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா, வஞ்சிபாளையம் ஆகிய துணை மின் நிலையங்களில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 17) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்... மேலும் பார்க்க

ஊத்துக்குளி அருகே குப்பை கொட்ட வந்த லாரிகளுடன் மாநகராட்சி அதிகாரிகள் சிறைபிடிப்பு

திருப்பூரில் ஊத்துக்குளி அருகே பாறைக்குழியில் குப்பை கொட்ட வந்த லாரிகளுடன் மாநகராட்சி அதிகாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்தனா். திருப்பூா் மாவட்டம், ஊத்துக்குளி ஊராட்சிக்கு உள்பட்ட தப்பட்ட நாயக்கம்பாளையம்... மேலும் பார்க்க