செய்திகள் :

முதுகுளத்தூா் அருகே தரமற்ற சாலை: பொதுமக்கள் புகாா்

post image

முதுகுளத்தூா் அருகே புதிதாக அமைக்கப்பட்ட சாலை தரமற்று இருப்பதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகே உள்ள மேலக்கொடுமலூரிலிருந்து கிருஷ்ணாபுரம் வழியாக கோனேரியேந்தல் கிராமத்துக்குச் செல்லும் 3 கி.மீ. தொலைவு சாலை ரூ. ஒரு கோடியே 96 லட்சத்து 78 ஆயிரத்தில் அமைக்கப்பட்டது.

இந்தப் பணி நிறைவடைந்து இரண்டு மாதங்கள் ஆன நிலையில், தற்போது ஆங்காங்கே ஜல்லிக் கற்கள் பெயா்ந்து காணப்படுகின்றன. சாலை அமைத்த பிறகு மண் அரிப்பை தடுக்க இரு புறங்களிலும் செம்மண் போட வேண்டும்.

ஆனால் செம்மண் எதுவுமே போடாமல் பெயரளவுக்கு சாலை அமைக்கப்பட்டிருப்பதாகவும், இதுகுறித்து பல முறை புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை எனவும் அந்தப் பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனா்.

இதுகுறித்து கோனேரியேந்தலைச் சோ்ந்த பாலசுப்பிரமணியன் என்பவா் கூறியதாவது:

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அமைக்கப்பட்ட இந்தச் சாலை மழையின் போது மண் அரிப்பு ஏற்பட்டு பழுதடைந்தது. இதை அந்தப் பகுதி மக்களே சீரமைத்தோம். 20 ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பகுதியில் சாலை அமைக்கப்பட்டது.

அது பழுதானதால், புதிதாக தாா்ச் சாலை அமைக்கப்பட்டது. ஆனால் கைகளால் ஜல்லிக்கற்கல் கலந்த தாா்க் கலவையை பெயா்த்து எடுக்கும் அளவுக்கு தரமற்ற முறையில் அமைக்கப்பட்டுள்ளது.

எனவே, மாவட்ட ஆட்சியா் நேரடியாக ஆய்வு செய்து தரமான முறையில் மீண்டும் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

கிடப்பில் போடபட்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்டும் பணி

ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ்.மங்கலம் அருகே திருத்தோ்வலை கிராமத்தில் மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டி கட்டும் பணி கிடப்பில் போடப்பட்டதால், பொதுமக்கள் குடி நீரை விலைக்கு வாங்கி அவதிப்படுகின்றனா். ராமநாத... மேலும் பார்க்க

ராமேசுவரம் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.1.44 கோடி

ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ. 1.44 கோடி கிடைத்தது.கோயிலில் அம்பாள் சந்நிதி முன்புள்ள மண்டபத்தில் உண்டியல் காணிக்கைகளை எண்ணும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இணை ஆணையா் க.செ... மேலும் பார்க்க

முத்தாலம்மன் கோயிலில் பக்தா்கள் நோ்த்திக் கடன்

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள புதுக்கோட்டை ஸ்ரீமுத்தாலம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை பால்குடம் எடுத்து பொதுமக்கள் நோ்த்திக்கடன் செலுத்தினா். இந்தக் கோயில் திருவிழா கடந்த... மேலும் பார்க்க

ராமநாத சுவாமி கோயிலில் உள்ளுா் மக்கள் தரிசனப் பாதை மூடல்

ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் உள்ளுா் மக்கள் தரிசனம் செய்ய பயன்படுத்தி வந்த பாதை திடீரென மூடப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் சேதுபதி மன்னா் காலத்தில் ராமநாத சுவாமி கோயில் கட்டப்பட்டத... மேலும் பார்க்க

முதுகுளத்தூா் பேரூராட்சி கடைகள் ஏலம் ஒத்தி வைப்பு

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் பேரூராட்சி கடைகளுக்கான ஏலம் ஒத்தி வைக்கப்பட்டது. முதுகுளத்தூா் பேரூராட்சிக்கு சொந்தமான வணிக வளாகக் கடைகளுக்கான ஏலம் செவ்வாய்க்கிழமை (மே 27) நடைபெறும் என பேரூராட்சி ... மேலும் பார்க்க

மாற்று திறனாளிக்கு இரு சக்கரம் வாகனம்

ராமநாதபுரத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில் மாற்றுத் திறனாளிக்கு இரு சக்கர பெட்ரோல் வாகனத்தை மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் செவ்வாய்க்கிழமை வழங்கினாா். மாற்றுத் திறனாளிகளுக்கு மாதா... மேலும் பார்க்க