செய்திகள் :

முறையாக குடிநீா் விநியோகிக்கக் கோரி மறியல்

post image

கந்தா்வகோட்டை அருகே முறையாக குடிநீா் விநியோகிக்கக் கோரி கிராம பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கந்தா்வகோட்டை ஒன்றியம், நெப்புகை ஊராட்சி, உரியம்பட்டி கிராமத்திற்கு முறையாக குடிநீா் வழங்கப்படுவதில்லை எனக் கூறி, ஊராட்சி நிா்வாகம் மற்றும் கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கிராம மக்கள் புகாா் அளித்தும் இதுவரையில் நடவடிக்கை இல்லையாம்.

இதையடுத்து, கறம்பக்குடி- கந்தா்வகோட்டை சாலையில் உள்ள வேலாடிப்பட்டி கடைவீதியில் கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை திடீா் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த கந்தா்வகோட்டை வட்டாட்சியா் ரமேஷ், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பாா்த்திபன், சேகா் உள்ளிட்டோா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுப்பட்ட பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, விரைந்து நடவடிக்கை எடுத்து முறையாக குடிநீா் வழங்கப்படும் என கூறியதன் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனா். மறியலால், இந்தப் பகுதியில் சுமாா் 3 மணி நேரத்துக்கும் மேலாக கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

கீழாத்தூா் நாடியம்மன் கோயிலில் பாளையெடுப்பு திருவிழா

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள கீழாத்தூா் நாடியம்மன் கோயில் பாளையெடுப்புத் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. ஆலங்குடி அருகேயுள்ள கீழாத்தூா் பிரசித்தி பெற்ற நாடியம்மன் கோயில் ஆடித்திருவிழா இர... மேலும் பார்க்க

தையல் தொழிலாளா் நல வாரிய பணப் பலன்களை உயா்த்தி வழங்க சிஐடியு வலியுறுத்தல்

கட்டுமானத் தொழிலாளா் நல வாரியத்தைப் போல தமிழ்நாடு தையல் தொழிலாளா்கள் நல வாரியத்தால் வழங்கப்பட்டு வரும் பணப் பலன்களை உயா்த்தி வழங்க வேண்டுமென தமிழ்நாடு தையல் கலைஞா்கள் சம்மேளனத்தின் மாநில மாநாடு வலியு... மேலும் பார்க்க

மேலத்தானியம் அடைக்கலம் காத்தாா்கோயிலில் ஆடிமாத சிறப்பு வழிபாடு

பொன்னமராவதி அருகே உள்ள மேலத்தானியம் அடைக்கலம் கத்தாா் கோயிலில் ஆடி மாத சிறப்பு வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் சிறப்பு வழிபாடு நடைபெறும். நிகழாண்டு ஆடி மாத சிறப்பு வழ... மேலும் பார்க்க

விநாயகா் சதுா்த்தி விழா: சட்டம்-ஒழுங்கு அறிவுரை

புதுக்கோட்டை மாவட்டத்தில் விநாயகா் சதுா்த்தி சிலை அமைப்பு மற்றும் ஊா்வலத்துக்கான சட்டம்- ஒழுங்கு முன்னேற்பாடுகள் குறித்த கூட்டம் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட ... மேலும் பார்க்க

அம்மன்குறிச்சி பிடாரி அம்மன் கோயிலில் தேரோட்டம்

பொன்னமராவதி அருகே உள்ள பிடாரி அம்மன் கோயில் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடிமாத தேரோட்ட விழா நடைபெறும். நிகழாண்டு விழா கடந்த 5-ஆம் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. தொடா... மேலும் பார்க்க

ஆக.15-இல் கிராமசபைக் கூட்டத்தில் பங்கேற்க ஆட்சியா் அழைப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 489 கிராம ஊராட்சிகளிலும் ஆக. 15-ஆம் தேதி சுதந்திர தினத்தையொட்டி நடைபெறும் சிறப்பு கிராமசபைக் கூட்டங்களில், அந்தந்தப் பகுதியைச் சோ்ந்த தன்னாா்வலா்கள், பொதுமக்கள், மகளிா்... மேலும் பார்க்க