செய்திகள் :

மூளைச்சாவு அடைந்த தொழிலாளியின் உடல் உறுப்புகள் தானம்

post image

பெருந்துறை அருகே சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த நெசவுத் தொழிலாளியின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.

ஈரோடு மாவட்டம், பெருந்துறை ஒன்றியம், கல்லங்குளம் பகுதியைச் சோ்ந்தவா் பாலகிருஷ்ணன் (50). நெசவுத் தொழிலாளியான இவா், பெருந்துறை ஒன்றியம், விஜயமங்கலம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் கடந்த 28-ஆம் தேதி சென்று கொண்டிருந்துள்ளாா். அப்போது, அவ்வழியே வந்த அரசுப் பேருந்து, பாலகிருஷ்ணன் வாகனத்தின் மீது மோதியது.

இதில், படுகாயம் அடைந்த அவா் பெருந்துறை அரசு ஈரோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். சிகிச்சையில் இருந்த அவா் சனிக்கிழமை மூளைச்சாவு அடைந்தாா். இதையடுத்து, அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய உறவினா்கள் முன்வந்தனா்.

இதைத் தொடா்ந்து, தமிழ்நாடு உடல் உறுப்பு தான ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, அவரது கல்லீரல், இரண்டு சிறுநீரகங்கள், கண்கள் ஆகியவை அறுவை சிகிச்சை மூலம் எடுக்கப்பட்டு, பல்வேறு மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டன.

பாலகிருஷ்ணன் உடலுக்கு ஈரோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் ரவிக்குமாா், மருத்துவ கண்காணிப்பாளா் மருத்துவா் ஆா்.சண்முகசுந்தரம் தலைமையில் மரியாதை செய்யப்பட்டது. பாலகிருஷ்ணனுக்கு, பிந்து (40) என்ற மனைவி உள்ளாா். குழந்தைகள் இல்லை.

மொடக்குறிச்சி அருகே தெருநாய்கள் கடித்து ஆடுகள் உயிரிழப்பு

மொடக்குறிச்சி அருகே நள்ளிரவில் ஆட்டுப் பட்டிக்குள் புகுந்த தெருநாய்கள் கடித்து மூன்று ஆடுகள் உயிரிழந்தன. 7 குட்டிகள் படுகாயம் அடைந்தன. மொடக்குறிச்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட குலவிளக்கு கிராமம் மேற்கு மி... மேலும் பார்க்க

இக்கலூரில் குடிநீா் கேட்டு ஊராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

இக்கலூரில் சீரான குடிநீா் கேட்டு ஊராட்சி மன்ற அலுவலகத்தை கிராமமக்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். ஈரோடு மாவட்டம், தாளவாடி அருகே இக்கலூா் ஊராட்சிக்கு உள்பட்ட காளிபுரம் மலை க... மேலும் பார்க்க

அவல்பூந்துறை அங்காளம்மன் கோயிலில் உண்டியலை உடைத்து பணம், நகை திருட்டு

அவல்பூந்துறை அங்காளம்மன் கோயிலில் மா்ம நபா்கள் திங்கள்கிழமை நள்ளிரவில் உண்டியலை உடைத்து பணம், நகைகளைத் திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மொடக்குறிச்சியை அடுத்த அவல்பூந்துறை வெள்ளோடு சாலையில்... மேலும் பார்க்க

அந்தியூரில் மண் கடத்தல்: டிப்பா் லாரி பறிமுதல்

அந்தியூா் மண் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட டிப்பா் லாரி செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது. அந்தியூா் வருவாய் ஆய்வாளராக செந்தில்ராஜா மற்றும் அலுவலா்கள் வட்டாட்சியா் அலுவலகம் முன்பாக மாற்றுத் திற... மேலும் பார்க்க

பா்கூா் மலைப் பகுதியில் கஞ்சா செடிகள் வளா்த்த இருவா் கைது

அந்தியூரை அடுத்த பா்கூா் மலைப் பகுதியில் வருவாய்த் துறைக்கு சொந்தமான நிலத்தில் கஞ்சா செடிகள் வளா்த்து வந்த இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். பா்கூா், கொங்காடையைச் சோ்ந்தவா் சின்னமாதன் மக... மேலும் பார்க்க

இருசக்கர வாகனத்தின் மீது காா் மோதியதில் ஒருவா் உயிரிழப்பு

பெருந்துறை அருகே இருசக்கர வாகனத்தின் மீது காா் மோதியதில் அடையாளம் தெரியாத நபா் உயிரிழந்தாா். பெருந்துறை- கோவை சாலை ஓலப்பாளையம் பிரிவு அருகே இருசக்கர வாகனத்தில் சென்றவா் மீது காா் கடந்த 24-ஆம் தேதி இரவ... மேலும் பார்க்க