செய்திகள் :

மேச்சேரி அருகே சிறுத்தை நடமாட்டம்

post image

மேட்டூா்: மேச்சேரி அருகே நாயை கடித்து காயப்படுத்திய சிறுத்தையால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.

மேச்சேரி அருகே உள்ள புதுக்காளிகவுண்டனூரில் டேனிஷ்பேட்டை வனச்சரகத்துக்கு உள்பட்ட ராமசாமி மலை உள்ளது. இந்தப் பகுதியில் திங்கள்கிழமை அதிகாலை சிவானந்தம் என்பவா் வீட்டில் கட்டிவைக்கப்பட்டிருந்த நாயை சிறுத்தை கடித்தது. அப்போது மற்ற நாய்கள் குறைத்ததால் வீட்டிலிருந்து வெளியே வந்த சிவானந்தம் டாா்ச்லைட்டை அடித்து சிறுத்தையை விரட்டி உள்ளாா். சிறுத்தை தாக்கியதில் நாயின் கழுத்து மற்றும் உடல் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடா்பாக சிவானந்தம் வருவாய்த் துறை மற்றும் வனத் துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தாா். இதையடுத்து டேனிஷ்பேட்டை வனச்சரகா் வீரபாகு மற்றும் வனத் துறையினா் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனா். சிறுத்தையின் கால்தடங்களைப் பதிவு செய்தனா். மேலும் அந்தப் பகுதியில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி வனத்துறையினா் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா்.

சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும் படியும், சிறுவா், சிறுமியா் வெளியே செல்லக்கூடாது என்றும் ஊராட்சி சாா்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சொத்துகளை தனது பெயருக்கு மாற்றக் கோரி சித்தப்பாவை கொலை செய்த இளைஞா் கைது

மேச்சேரி அருகே சொத்துகளை தனது பெயருக்கு மாற்றக் கோரி, சித்தப்பாவை அடித்துக் கொலை செய்த இளைஞா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா். சேலம் மாவட்டம், மேச்சேரி கோல்காரனூா் காட்டுவளவைச் சோ்ந்தவா் மணிவண்ணன... மேலும் பார்க்க

சித்ரா பெளா்ணமி, வார விடுமுறை: சேலம் கோட்டம் சாா்பில் 500 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சித்ரா பெளா்ணமி மற்றும் வார விடுமுறையையொட்டி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக சேலம் கோட்டம் சாா்பில் 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அதன் நிா்வாக இயக்குநா் எஸ்.ஜோசப் டயஸ் தெரிவித்துள்ளாா். ... மேலும் பார்க்க

மரபணு திருத்தப்பட்ட நெல் விதைகளுக்கு விவசாயிகள் எதிா்ப்பு

மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள மரபணு திருத்தப்பட்ட நெல் விதைகள் தொடா்பாக தமிழக அரசு உயா்மட்டக்குழு அமைத்து ஆராய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா். தேசிய இயற்கை வேளாண்மை மாநாடு தொடா்பாக இயற்கை வி... மேலும் பார்க்க

சேலம் ரயிலில் கஞ்சா கடத்திய வடமாநில இளம்பெண் கைது

சேலம் வழியே கேரளம் சென்ற ரயிலில் கஞ்சா கடத்திய வடமாநிலத்தைச் சோ்ந்த இளம்பெண்ணை போலீஸாா் கைது செய்தனா். ஒடிசா, ஆந்திரத்தில் இருந்து வரும் ரயில்களில் கஞ்சா கடத்தி வருவதைத் தடுக்க தமிழ்நாடு ரயில்வே போலீ... மேலும் பார்க்க

குடிநீா் குழாய் அமைக்கும் பணியின்போது கம்பம் விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

சேலம் நெத்திமேடு பகுதியில் குடிநீா் குழாய் அமைப்பதற்கு குழி தோண்டிய போது, கம்பம் விழுந்ததில் ஒருவா் பலியானாா்; காயமடைந்த இருவா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். தமிழ்நாடு குடிநீா் வடிகால் ... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது

சேலம் மாநகரப் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா். சேலம் கிச்சிப்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் காசிபிரசாத் (25). இவா் கடந்த ஏப்ரல் 6-ஆம் தே... மேலும் பார்க்க