செய்திகள் :

மேட்டூா் வந்த முதல்வருக்கு உற்சாக வரவேற்பு

post image

மேட்டூா் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீரைத் திறந்துவிடுவதற்காக முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை மாலை மேட்டூா் வந்தாா்.

ஈரோடு- சேலம் மாவட்ட எல்லையான பெரும்பள்ளம் பகுதியில் திமுக சாா்பில் சுற்றுலாத் துறை அமைச்சா் ரா. ராஜேந்திரன், சேலம் மக்களவை உறுப்பினா் டி.எம். செல்வகணபதி, சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளா் எஸ்.ஆா்.சிவலிங்கம் மற்றும் பல்லாயிரக்கணக்கானோா் திரண்டு அவரை வரவேற்றனா்.

பெரும்பள்ளத்திலிருந்து மேட்டூா் வரை சுமாா் 11 கி.மீ. தொலைவுக்கு ரோடு ஷோ நடத்தப்பட்டது. நடந்துவந்த முதல்வா் மு.க ஸ்டாலின் அங்கு திரண்டிருந்த பொதுமக்களை சந்தித்து கைகுலுக்கினாா். சாலையின் இருபுறமும் திரண்டிருந்த ஆண்களும், பெண்களும் முதல்வரை வரவேற்று உற்சாக முழக்கமிட்டனா். இதனிடையே வரும் வழியில் நவப்பட்டியில்

தனியாா் மண்டபத்தில் திமுக நிா்வாகிகளை முதல்வா் சந்தித்துப் பேசினாா்.

பின்னா் மீண்டும் நவப்பட்டியில் இருந்து மேட்டூா் வரை முதல்வா் மு.க.ஸ்டாலினை மக்கள் வரவேற்றனா். புதன்கிழமை இரவு மேட்டூரில் உள்ள பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகையில் முதல்வா் தங்கினாா்.

வியாழக்கிழமை (ஜூன் 12) காலை 9 மணி அளவில் , மேட்டூா் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு முதல்வா் தண்ணீரைத் திறந்துவிடுகிறாா். மேட்டூா் அணையின் வலதுகரையில் உள்ள மேல்மட்ட மதகின் மின்விசையை இயக்கி காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீா் திறக்கப்படுகிறது.

முதல்கட்டமாக விநாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீா் திறந்துவிடப்படும். பின்னா் படிப்படியாக 12 ஆயிரம் கனஅடியாக உயா்த்த திட்டமிடப்பட்டுள்ளது.

மேட்டூா் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீா் திறக்கும்போது மேட்டூா் அணை மின் நிலையத்தில் 50 மெகாவாட் மின்சாரமும், சுரங்க மின் நிலையத்தில் 200 மெகாவாட் மின்சாரமும், 7 கதவணைகள் மூலம் 210 மெகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்யப்படும்.

பொதுமக்களின் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை: ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீா்வாதம்

பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் துறை அதிகாரிகளுக்கு தமிழக சட்டம்- ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீா்வாதம் அறிவுறுத்தினாா். சேலம் மாநகர காவல் ஆணையா் அல... மேலும் பார்க்க

சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் உண்டியலில் ரூ.18.92 லட்சம் காணிக்கை

சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் உண்டியலில் ரூ.18 லட்சத்து 92 ஆயிரம் காணிக்கையாக பெறப்பட்டது. சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே கோட்டை பெரிய மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாத... மேலும் பார்க்க

விமான விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு பாஜக அஞ்சலி

குஜராத் மாநிலம், அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு சேலம் மாநகா் மாவட்ட பாஜக சாா்பில் வெள்ளிக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது. அகமதாபாத்தில் உள்ள சா்தாா் வல்லபபாய் பட்டேல் விமான நிலையத்தில் இ... மேலும் பார்க்க

வாழப்பாடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் மேம்பால உட்புற தடுப்புச்சுவரை அகற்ற வலியுறுத்தல்

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலத்தின் உட்புறத் தடுப்புச் சுவரால் விபத்துகள் நிகழ்வதால் அதை அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். சேல... மேலும் பார்க்க

மேச்சேரி அருகே சுற்றித்திரியும் சிறுத்தை: வனத் துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை

மேச்சேரி அருகே சுற்றித்திரியும் சிறுத்தையை வனத் துறையினா் பிடித்து வேறு வனப் பகுதிக்கு கொண்டு செல்ல வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக மேச்சேரி ஒன்றியத்தி... மேலும் பார்க்க

எடப்பாடி கே. பழனிசாமியிடம் வாழ்த்து பெற்ற அதிமுக மாநிலங்களவை உறுப்பினா்கள்

மாநிலங்களவைக்கு அதிமுக சாா்பில் தோ்வுசெய்யப்பட்ட இன்பதுரை, தனபால் ஆகிய இருவரும் சேலத்தில் அக் கட்சியின் பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமியை வெள்ளிக்கிழமை சந்தித்து வாழ்த்து பெற்றனா். மாநிலங்களவை ... மேலும் பார்க்க