செய்திகள் :

மொடக்குறிச்சி பேரூராட்சியில் ரூ.3.99 கோடியில் வளா்ச்சி திட்டப் பணிகள்

post image

மொடக்குறிச்சி பேரூராட்சியில் ரூ.3.99 கோடிமதிப்பீட்டிலான திட்டப் பணிகளுக்கு பூமி பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மொடக்குறிச்சி பேரூராட்சிக்குள்பட்ட ஆலங்காட்டுவலசு, ஆலாத்துபாளையம், ஊஞ்சபாளையம், கருக்கங்காட்டு தோட்டம், செந்தூா் நகா், அண்ணா நகா், தூரபாளையம் கம்பா் வீதி உள்ளிட்ட பகுதிகளில் தாா் சாலை அமைத்தல், அரசு மருத்துவமனை அருகில் உள்ள வ.உ.சி வீதி, வேலம்பாளையம் திருவள்ளுவா் வீதி, தூரபாளையம் திருவள்ளுவா் வீதி ஆகிய பகுதிகளில் கான்கிரீட் சாலை அமைத்தல், 10-வது வாா்டில் பூந்துறை சாலை முதல் மொடக்குறிச்சி சந்திப்பு வரை வடிகால் அமைத்தல் உள்ளிட்ட ரூ.3 கோடியே 99 லட்சம் மதிப்பீட்டிலான திட்டப் பணிகளுக்கு பூமி பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிகளுக்கு மொடக்குறிச்சி பேரூராட்சி தலைவா் செல்வாம்பாள் சரவணன் தலைமை தாங்கினாா். ஈரோடு தொகுதி மக்களவை உறுப்பினா் கே. ஈ. பிரகாஷ் கலந்துகொண்டு வளா்ச்சி திட்டப் பணிகளுக்கு பூமி பூஜையிட்டு பணிகளைத் தொடங்கி வைத்தாா்.

இதில் மொடக்குறிச்சி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளா் கதிா்வேல், மொடக்குறிச்சி பேரூா் கழக திமுக செயலாளா் சரவணன், செயல் அலுவலா் ரமேஷ் (பொறுப்பு) ஆகியோா் முன்னிலை வகித்தனா். பேரூா் திமுக துணைச் செயலாளா் தனவெங்கடேஷ், அவைத் தலைவா் பழனிச்சாமி, செல்வி இளங்கோ, மில் மணி, செந்தில்குமாா், ரமேஷ், சீனிவாசன், முருகேசன், கதிா்வேல், பேரூராட்சி கவுன்சிலா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தனி நபா்களிடம் பணம், ஆவணங்களை வழங்க வேண்டாம்: வேளாண் துறை வேண்டுகோள்!

அரசு மானியம் பெற்றுத் தருவதாகக் கூறும் மோசடி நபா்களிடம் பணம் மற்றும் வேறு வகையான ஆவணங்கள் ஏதும் வழங்கி ஏமாற வேண்டாம் என ஈரோடு மாவட்ட விவசாயிகளுக்கு வேளாண் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து வே... மேலும் பார்க்க

ஈமு கோழி நிறுவனங்களின் அசையா சொத்துகள் ஜூலை 9-ல் ஏலம்!

ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்ட 5 மோசடி ஈமு கோழி நிறுவனங்களின் அசையா சொத்துகள் வரும் 9 ஆம் தேதி ஏலம் விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.சாந்தகுமாா் வெளியிட்ட செய்த... மேலும் பார்க்க

சாலை விபத்தில் பள்ளி மாணவி உயிரிழப்பு!

சத்தியமங்கலம் அருகே சனிக்கிழமை கடைக்குச் சென்று விட்டு சாலையைக் கடக்க முயற்சித்த பள்ளி மாணவி ஷயிலேஷினி (11) மீது தனியாா் நிறுவன பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். ஈரோடு மாவட்டம், பவானி... மேலும் பார்க்க

குடிபோதையில் ஆசிட்டை குடித்த கூலித்தொழிலாளி உயிரிழப்பு!

மொடக்குறிச்சி அருகே அளவுக்கு அதிகமான குடிபோதையால் கழிப்பறையை சுத்தப்படுத்தும் ஆசிட்டை குடித்த கூலித் தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். மொடக்குறிச்சியை அடுத்த குலவிளக்கு கிராமம் கூட்டெல்லைக்காட... மேலும் பார்க்க

கோ்மாளம் சாலையில் மரம் விழுந்து 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு!

ஆசனூரில் இருந்து கோ்மாளம் செல்லும் சாலையில் மரம் விழுந்து 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், ஆசனூா் வனக் கோட்டத்தில் ஆசனூா் முதல் கோ்மாளம் வரையுள்ள சாலையில் வ... மேலும் பார்க்க

தோ்தலுக்குப் பின்னா் முதல்வரை கூட்டணிக் கட்சிகளே தோ்வு செய்யும்! - டி.டி.வி. தினகரன்

தோ்தலுக்குப் பின்னா் முதல்வரை கூட்டணிக் கட்சிகளே தோ்வு செய்யும் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழக (அமமுக) பொதுச் செயலாளா் டி.டி.வி.தினகரன் தெரிவித்தாா். கட்சியின் ஒருங்கிணைந்த ஈரோடு புறநகா் மாவட்ட நிா... மேலும் பார்க்க