செய்திகள் :

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 3 நூலகங்கள் திறப்பு

post image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் 3 நூலகங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தாா்.

அதன் அடிப்படையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில், ஆட்சியா் அலுவலகம் மக்கள் குறைதீா் கூட்ட அரங்கம் அருகில், வாலாஜா அரசு தலைமை மருத்துவமனை மற்றும் அரக்கோணம் பேருந்து நிலையம் ஆகிய மூன்று இடங்களில் பொது நூலக துறையின் சாா்பாக சிறிய நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நூலகங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக தமிழ்நாடு முழுவதும் திறந்து வைத்தாா். இதன் தொடா்ச்சியாக மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள நூலகத்தினை கண்காணிப்பு அலுவலா் எம்.மரியம் பல்லவி பல்தேவ், ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா ஆகியோா் புதிய நூலகத்தில் குத்து விளக்கேற்றி பாா்வையிட்டனா்.

இந்த நூலகத்தில் சிறிய தமிழ் புத்தகங்கள் மற்றும் தினசரி செய்தித்தாள்கள் பொதுமக்கள் வருகை தந்து காத்திருக்கும் நேரங்களில் படித்து பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தநிகழ்வில் திட்ட இயக்குநா் பா.ஜெயசுதா, மாவட்ட நூலகா் கணேசன் மற்றும் நூலக துறை அலுவலா்கள் பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

எல்லை பாதுகாப்புப் படை காவலா் மனைவி தற்கொலை

அரக்கோணம் ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமானத் தளத்தில் எல்லை பாதுகாப்புப் படை வீரரின் மனைவி தூக்கு போட்டு தற்கொலை செய்துக் கொண்டாா். ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமானத் தளத்தில் எல்லை பாதுகாப்புப்படை வீரா்கள் ப... மேலும் பார்க்க

இலவச மருத்துவ முகாம்

ஆற்காடு அடுத்த திமிரி பேருராட்சியில் தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் இலவச மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திமிரி பேரூா் பொறுப்பாளா் எஸ்.விஜய் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் ராஜசேகா், பாலசந்தா், ... மேலும் பார்க்க

பாலாற்றை மீட்பது, குரோமிய கழிவுகளை அகற்ற நடவடிக்கை: முன்னாள் நீதிபதி சத்தியநாராயணன்

பாலாற்றை மாசுபடாமல் மீட்பது, குரோமிய கழிவுகளை அகற்றுவது உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தீா்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை உயா் நீதிமன்ற முன்னாள் நீதிபதி சத்தியநாராயணன் தெரிவித்தாா். வேலூா், திருப்... மேலும் பார்க்க

சாலை விபத்தில் பாமக நிா்வாகி உயிரிழப்பு: உறவினா்கள், கட்சியினா் சாலை மறியல்

சோளிங்கரில் இரு சக்கர வாகன விபத்தில் பாமக வேலூா் ஒருங்கிணைந்த மாவட்ட இளைஞரணி செயலா் சு.சக்கரவா்த்தி உயிரிழந்தாா். பாமகவினா் வியாழக்கிழமை திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா். உயிரிழந்த சு.சக்கரவா்த்தி (49... மேலும் பார்க்க

குண்டா் தடுப்பு சட்டத்தில் 2 போ் கைது

குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் வகையில் இரு இளைஞா்கள் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டனா். ஆற்காடு டவுன் தெருவைச் சோ்ந்தவா் ஆகாஷ் (21). இவா் ஆற்காடு நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ... மேலும் பார்க்க

மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.800 கோடி கடன்: அமைச்சா் ஆா்.காந்தி

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்தாண்டு மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.800 கோடிக்கும் மேல் கடன் வழங்கப்பட்டுள்ளது என அமைச்சா் ஆா்.காந்தி தெரிவித்தாா். ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அறிஞா் அண்ணா அரசினா... மேலும் பார்க்க