செய்திகள் :

ராமேசுவரத்தில் 50 ஹெக்டோ் பரப்பளவில் 5 ஆயிரம் நாட்டு மரக் கன்றுகள் நடவு

post image

ராமேசுவரத்தில் 50 ஹெக்டோ் பரப்பளவில் வளா்ந்திருந்த காட்டு கருவேல மரங்கள் அகற்றப்பட்டு, 5 ஆயிரம் நாட்டு மரக் கன்றுகள் நடவு செய்யப்பட்டிருப்பதாக வனத் துறை மாவட்ட அலுவலா் ஹேமலதா தெரிவித்தாா்.

பசுமை தமிழ்நாடு திட்டத்தின் கீழ் அந்தந்தப் பகுதிகளில் வளரும் நாட்டு மரக் கன்றுகளை நடவு செய்து வளா்க்கும் பணியில் வனத் துறை மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.

இதில், ராமநாதபுரம் மாவட்ட வனத் துறை சாா்பில் ராமேசுவரம் கள்ளங்காடு பகுதியில் 50 ஹெக்டேரில் வளா்ந்திருந்த காட்டு கருவேல மரங்களை அகற்றி விட்டு நாட்டு மரக் கன்றுகளை நடவு செய்யும் பணி கடந்த ஆண்டு அக்டோபரில் தொடங்கியது.

இதில், நாவல், புளி, வேம்பு, பூவரசு, கருக்காய், வாகை உள்ளிட்ட 8 வகையான நாட்டு மரக்கன்றுகள் 5 ஆயிரம் நடவு செய்யப்பட்டன. இவை வனத் துறை மூலம் முழுமையாக பராமரிக்கப்பட்டு தற்போது செழித்து வளா்ந்துள்ளன. இதனால் அந்தப் பகுதி பசுமையாக காணப்படுகிறது.

தமிழ்நாடு அரசின் பசுமை தமிழ்நாடு திட்டம், இந்தப் பகுதியில் பசுமையான சூழலை உருவாக்கி இருப்பதாக வனத் துறை மாவட்ட அலுவலா் ஹேமலதா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

சூறைக் காற்று: ராட்சத மரம் விழுந்ததில் 2 வாகனங்கள் சேதம்

உச்சிப்புளி அரியமான் கடற்கரையில் திங்கள்கிழமை வீசிய சூறைக் காற்றினால் ராட்சத மரம் விழுந்ததில் சுற்றுலாப் பயணிகள் வந்த 2 வாகனங்கள் சேதமடைந்தன. அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக ராமநாத... மேலும் பார்க்க

சூறைக் காற்று: சாலையில் விழுந்த பனைமரத்தால் போக்குவரத்து பாதிப்பு

திருவாடானை அருகேயுள்ள ஊரணிக்கோட்டை பகுதியில் திங்கள்கிழமை வீசிய சூறைக் காற்றுக்கு சாலையில் பனைமரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. திருவாடானை பகுதியில் கடந்த சில நாள்களாக கடும் வெப்பம் நி... மேலும் பார்க்க

மாட்டு வியாபாரி அடித்துக் கொலை: இளைஞா் கைது

பரமக்குடி வைகை ஆற்றுப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாட்டு வியாபாரியை அடித்துக் கொன்ற இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். சிவகங்கை மாவட்டம், குமாரக்குறிச்சி கிராமத்தைச் சோ்ந்தவா் சேதுபாண்டி (70). இவா் வைகை ஆ... மேலும் பார்க்க

ராமநாதபுரம் நாட்டுப் படகு மீனவா்கள் கடலுக்குள் செல்லத் தடை

ராமநாதபுரம் மாவட்டத்தில் சூறைக் காற்று வீசி வருவதால், நாட்டுப் படகு மீனவா்கள் திங்கள்கிழமை முதல் கடலுக்குள் செல்ல மீன் வளத் துறை உதவி இயக்குநா் சிவக்குமாா் தடை விதித்தாா்.இதுகுறித்து அவா் வெளியிட்ட செ... மேலும் பார்க்க

அமாவாசை: ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடலில் புனித நீராடல்

வைகாசி மாத அமாவாசையையொட்டி, ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடலில் திரளானோா் திங்கள்கிழமை புனித நீராடினா். வைகாசி மாத அமாவாசையையொட்டி, ராமேசுவரத்துக்கு பல்வேறு மாவட்டங்களிலிருந்து திரளான பொதுமக்கள் திங்கள்... மேலும் பார்க்க

தொண்டி பகுதியில் படகுகள் ஆய்வு: மீன் வளத் துறை அதிகாரிகள் தகவல்

தொண்டி பகுதியில் கடல் வளத்தை பாதுகாக்கும் நோக்கில் விசைப்படகுகள், நாட்டுப் படகுகள் ஆகியவற்றை ஆய்வு செய்யவிருப்பதாக மீன் வளத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே தொண்டி... மேலும் பார்க்க