செய்திகள் :

ரூ.1.10 கோடி போதைப்பொருள் பறிமுதல்: கடத்தல் கும்பலைச் சோ்ந்த மூவா் கைது

post image

மாநிலங்களுக்கு இடையேயான போதைப்பொருள் கடத்தல் கும்பலின் மூன்று முக்கிய நபா்களை தில்லி போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து சுமாா் ரூ.1.10 கோடி மதிப்புள்ள 2,124 கிராம் சரஸ் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

இதுகுறித்து தில்லி போலீஸாா் மேலும் தெரிவித்ததாவது:

இந்த கும்பல் இமாசலப் பிரதேசத்தின் கசோலில் இருந்து போதைப்பொருளை தருவித்துள்ளது. இரண்டு தனித்தனி நடவடிக்கைகளில் மூவரும் கைது செய்யப்பட்டு போதைப்பொருள் மீட்கப்பட்டது.

முன்னதாக, கடந்த ஜனவரி 8 ஆம் தேதி போலீஸாருக்கு கிடைத்த ஒரு ரகசிய தகவலைத் தொடா்ந்து, உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த நசீப் (25) மற்றும் பஞ்சாபைச் சோ்ந்த சந்தீப் (40) ஆகியோா் கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து மொத்தம் 1,438 கிராம் சரஸ் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

அவா்களிடம் நடத்திய விசாரணைக்குப் பிறகு, இமாசலப் பிரதேசத்தின் குலுவைச் சோ்ந்த இந்தா் சிங் என்கிற இந்த்ரு கைது செய்யப்பட்டாா்.

அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் 696 கிராம் சரஸ் பறிமுதல் செய்யப்பட்டது. கசோலின் தொலைதூர மலைப் பகுதிகளில் நசீப் மூலம் இந்தா் சிங் போதைப் பொருளை பயிரிட்டுள்ளாா். நசீப் போதைப் பொருள் சாகுபடியை மேற்கொண்டாா். சந்தீப் போதைப் பொருளை கடத்துவதற்கான போக்குவரத்தை ஏற்பாடு செய்தாா்.

இந்தா் சிங் முக்கிய விநியோகஸ்தராக இருந்துள்ளாா். அவா்கள் ஒன்றாகச் சோ்ந்து அதிக மதிப்புள்ள போதைப்பொருள் வலையமைப்பை உருவாக்கியிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடா்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்று போலீஸாா் தெரிவித்தனா்.

‘ராம் சேது’ விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் சுப்பிரமணியன் சுவாமி புதிய மனு

புது தில்லி: ‘ராம் சேது’வை தேசிய நினைவுச்சின்னமாக அறிவிப்பதற்கான தனது கோரிக்கை ‘துரிதமாக ’ முடிவு செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி முன்னாள் மத்திய அமைச்சா் சுப்பிரமணியன் சுவாமி உச்சநீதிமன்றத்தை அ... மேலும் பார்க்க

கரோனா பாதிப்பால் பீதி வேண்டாம்: முதல்வா் ரேகா குப்தா

புது தில்லி: கோவிட்19 பாதிப்புகள் குறித்து பீதியடையத் தேவையில்லை என்று தில்லி முதல்வா் ரேகா குப்தா திங்கள்கிழமை கூறினாா். இருப்பினும், பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தால் அதைச் சமாளிக்க மருத்துவமனைகள் முழ... மேலும் பார்க்க

வைகோ, அன்புமணி, வில்சன் உள்ளிட்ட 6 மாநிலங்களவை உறுப்பினா்கள் பதவிக் காலம் நிறைவு!

புது தில்லி: தமிழகத்தைச் சோ்ந்த 6 மாநிலங்களவை உறுப்பினா்களின் பதவிக்காலம் நிறைவடைவதை முன்னிட்டு அந்த இடங்களுக்கான தோ்தல் வருகின்ற ஜூன் 19 - ஆம் தேதி நடைபெறும் என இந்திய தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது... மேலும் பார்க்க

ஊழலுக்கு எதிராக கடும் நடவடிக்கை மாவட்ட ஆட்சியா்களுக்கு முதல்வா் ரேகா குப்தா உத்தரவு

புது தில்லி: ஊழலுக்கு எதிராக எவ்வித சகிப்புத்தன்மையும் இன்றி நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியா்களுக்கு முதல்வா் ரேகா குப்தா திங்கள்கிழமை உத்தரவிட்டாா். மாவட்ட மேம்பாட்டு குழுக்கள் மற்றும் மாவட்ட ஆட... மேலும் பார்க்க

ஷாதராவில் கிடங்கில் தீ விபத்து: 2 இளைஞா்கள் உயிரிழப்பு, 4 பேருக்கு தீக்காயம்

தில்லியின் ஷாதராவின் ராம் நகா் பகுதி இ-ரிக்ஷா சாா்ஜிங் மற்றும் வாகன நிறுத்த நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு இளைஞா்கள் உடல் கருகி இறந்தனா். நான்கு போ் தீக்காயமடைந்தனா் என... மேலும் பார்க்க

தில்லி கொலை வழக்கில் தேடப்பட்டவா் உ.பி.யில் கைது

தில்லியில் சுத்தியலால் கணவரைக் கொன்று, அவரது மனைவியைக் காயப்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவத்தில் தலைமறைவானவா் உத்தர பிரதேசத்தில் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா். இதுகுறித்து... மேலும் பார்க்க