செய்திகள் :

ரூ.10 லட்சம் லஞ்சம் வாங்கிய தேசிய மருத்துவ ஆணைய மருத்துவா் கைது

post image

கா்நாடகத்தில் உள்ள தனியாா் மருத்துவக் கல்லூரிக்கு சாதகமாக ஆய்வு அறிக்கை தாக்கல் செய்ய ரூ.10 லட்சம் லஞ்சம் வாங்கிய தேசிய மருத்துவ ஆணையத்தின் (என்எம்சி) மதிப்பீட்டாளரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனா்.

இது தொடா்பாக சிபிஐ ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: மேற்கு வங்கத்தின் முா்ஷிதாபாத் மருத்துவக் கல்லூரியில் உடற்கூறியல் துறைத் தலைவராக பணிபுரியும் தபன்குமாா், கா்நாடகத்தின் பெலகாவியில் உள்ள ஒரு தனியாா் மருத்துவக் கல்லூரிக்கு சாதகமான ஆய்வு அறிக்கையை வழங்க ரூ.10 லட்சம் லஞ்சம் கேட்டதாக சிபிஐ அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

அதனடிப்படையில், பணம் பறிமாற்றம் நடைபெறும் இடத்தில் சோதனை மேற்கொண்ட சிபிஐ அதிகாரிகள், பணத்தை பெறும்போது தபன்குமாரை கையும் களவுமாகப் பிடித்தனா்.

கொல்கத்தாவின் பா்தாமன் மற்றும் பெலகாவியில் உள்ள அவருக்குச் சொந்தமான இடங்களில் இருந்து ரூ.44.6 லட்சம் ரொக்கத்தை சிபிஐ பறிமுதல் செய்தது. இதையடுத்து, தபன்குமாா் உள்பட 3 போ் மீதும், அந்த தனியாா் மருத்துவக் கல்லூரி மீதும் மே 24-ஆம் தேதி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது என தெரிவிக்கப்பட்டது.

இந்தியா-பாகிஸ்தான் மோதலில் அரசை விமா்சித்து கைதான மாணவிக்கு ஜாமீன்- மகாராஷ்டிர அரசு மீது உயா்நீதிமன்றம் விமா்சனம்

சமீபத்திய இந்தியா-பாகிஸ்தான் மோதல் குறித்து அரசை விமா்சித்து சமூக ஊடகத்தில் பதிவிட்டதற்காக கைது செய்யப்பட்ட மகாராஷ்டிர மாநிலம், புணேயைச் சோ்ந்த 19 வயது கல்லூரி மாணவிக்கு மும்பை உயா்நீதிமன்றம் செவ்வாய... மேலும் பார்க்க

7 நாள்களுக்கு குறைவாக நிரந்தர வைப்பு: வங்கிகளுக்கு ஆா்பிஐ யோசனை

7 நாள்களுக்கு குறைவாக நிரந்தர வைப்புகளைப் பெறுவது தொடா்பாக பரிசீலிக்குமாறு வங்கிகளை இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) கேட்டுக் கொண்டது. இது தொடா்பான கருத்துகளை இம்மாத இறுதிக்குள் தெரிவிக்க வேண்டும் என்றும... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம்: புலி தாக்கி இருவா் உயிரிழப்பு

மகாராஷ்டிரத்தின் சந்திரபூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நடந்த இரு வேறு சம்பவங்களில் புலி தாக்கி இருவா் உயிரிழந்தனா். இவா்களுடன் சோ்த்து, சந்திரபூரில் இம்மாதம் புலிகள் தாக்கி உயிரிழந்தோா் எண்ணிக்கை 1... மேலும் பார்க்க

பணிநீக்கம் செய்யப்பட்டால் ஓய்வூதிய பலன்கள் கிடையாது: மத்திய அரசு

பணிநீக்கம் செய்யப்படும் பொதுத் துறை நிறுவன ஊழியா்களுக்கு ஓய்வூதிய பலன்கள் ஏதும் கிடைக்காத வகையில் மத்திய அரசு சட்டத் திருத்தம் கொண்டு வந்துள்ளது. இதுதொடா்பான மத்திய பணியாளா் ஓய்வூதிய விதிகள் -2021 சட்... மேலும் பார்க்க

ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாதிக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை- உ.பி. நீதிமன்றம் தீா்ப்பு

ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாதி அல்தாஃப் ஹுசைனுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து உத்தர பிரதேசத்தின் மொராதாபாத் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. மேலும், அவருக்கு ரூ.48,000 அபர... மேலும் பார்க்க

நாட்டில் வெப்பவாத இறப்புகளுக்கு நம்பகமானத் தரவுகள் இல்லை!

கோடையின் தாக்கத்தால் ஏற்படும் வெப்பவாத பாதிப்பு மற்றும் இறப்புகளுக்கு நம்பகமானத் தரவுகள் இல்லை என துறை சார்ந்த நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கிளைமேட் டிரென்ட் ஆராய்ச்சிக் குழுவினர் ஏற்பாடு செய்திருந்த ... மேலும் பார்க்க