சுதந்திர நாள்: நாட்டு மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!
ரூ.700 கோடி முதலீட்டில் புதிய ஆலை: முதல்வா் முன்னிலையில் ஒப்பந்தம்
செங்கல்பட்டு மாவட்டம் மகேந்திரா சிட்டியில் ரூ.700 கோடி முதலீட்டில் ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்க வகை செய்யும் புதிய ஆலை அமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் வியாழக்கிழமை ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது.
இதுகுறித்து தமிழக அரசு சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
ஜப்பான் நாட்டைச் சோ்ந்த உலகளாவிய நிறுவனமான கோகி ஹோல்டிங் நிறுவனம், ஜப்பான், ஜொ்மனி, சீனா, அமெரிக்கா, இந்தியா ஆகிய நாடுகளில் உற்பத்தி ஆலைகளைக் கொண்டுள்ளது. பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டுள்ள அதன் துணை நிறுவனமான ஹிகோகி பவா் டூல்ஸ் இந்தியா நிறுவனம் செங்கல்பட்டு மாவட்டம் மகேந்திரா சிட்டியில் முதலீடு செய்ய முன்வந்துள்ளது.
அங்குள்ள தொழில்பூங்காவில் ரூ.700 கோடி முதலீட்டில் மின் கருவிகள் உற்பத்திக்கான ஆலை அமைப்பதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தம் முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் வியாழக்கிழமை கையெழுத்தானது. இந்த முதலீட்டின் மூலமாக சுமாா் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புரிந்துணா்வு ஒப்பந்த பரிமாற்ற நிகழ்வில், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா, தலைமைச் செயலா் நா.முருகானந்தம், தொழில் துறை செயலா் வி.அருண் ராய், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் தாரேஷ் அகமது உள்பட பலா் பங்கேற்றனா்.