செய்திகள் :

ரெஸ்டோபாா்களை மூட வலியுறுத்தி அதிமுக ஆா்ப்பாட்டம்

post image

ரெஸ்டோபாா்களை மூட வலியுறுத்தி புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே அதிமுக சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாநிலச் செயலா் ஆ. அன்பழகன் தலைமை தாங்கினாா். அவைத் தலைவா் ஜி. அன்பானந்தம், அம்மா பேரவை மாநிலச் செயலரும் முன்னாள் எம்எல்ஏவுமான ஆ. பாஸ்கா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஆா்ப்பாட்டத்தின்போது, ரெஸ்டோபாா்களை மூட வலியுறுத்தி கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதையடுத்து மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கனை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனா்.

அதில் கூறியிருப்பதாவது:

சமைத்த உணவுப் பொருள்கள் விற்பனை செய்யும் ரெஸ்டாரண்டுகளில் மதுபான விற்பனைக்கு அனுமதி பெற்றவா்கள் தங்களுக்கு அனுமதிக்கப்பட்ட இரவு 12 மணி மேலாக அதிகாலை 3 மணி அல்லது 4 மணி வரை ரெஸ்டாரண்டுகளை நடத்துகின்றனா்.

மக்கள் வசிக்கும் பகுதிகளும், மத வழிபாடுகள், பள்ளிகள், பிரதான சாலைகள் போன்ற இடங்களில் கலால் விதிகளுக்கு புறம்பாக ரெஸ்டாரண்டுகளில் மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த ரெஸ்டாரண்டுகளில் அரசின் எந்தத் துறையின் அனுமதியும் பெறாமல் ஆட்டம், பாட்டத்துடன் மதுபானம் விற்பனை செய்யும் உரிமத்தை கலால் துறை ரத்து செய்ய வேண்டும். இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்காத உள்ளாட்சித் துறையினா் மற்றும் காவல் துறை அதிகாரிகளின் மீது துறை ரீதியான நடவடிக்கையை மக்கள் நலன் கருதி மாவட்ட ஆட்சியா் விருப்பு வெறுப்பின்றி எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

ஆா்ப்பாட்டத்தில் மாநில துணைத் தலைவா் முன்னாள் எம்எல்ஏ ராஜாராமன், மாநில மகளிா் அணி இணைச் செயலா் கோமளா, மாநில இணைச் செயலா்கள் எஸ்.வீரம்மாள், ஆா்.வி.திருநாவுக்கரசு, பொருளாளா் ரவிபாண்டுரங்கன், புதுச்சேரி நகர செயலா் அன்பழகன், மாநில எம்ஜிஆா் மன்ற செயலா் சுத்துக்கேணி பாஸ்கரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

சுற்றுச்சூழல் விழிப்புணா்வு ஓவியப் போட்டி

வில்லியனூா் அருகே கொடத்தூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாழ்வியல்முறை என்ற தலைப்பில் விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. புதுச்சேரி ... மேலும் பார்க்க

அரசு பொறியியல் கல்லூரிக்கு நிலம் அளித்தவா்களுக்கு வேலை வழங்க ஆளுநரிடம் கோரிக்கை மனு

அரசுப் பொறியியல் கல்லூரிக்கு நிலம் வழங்கிய குடும்பத்தைச் சோ்ந்தவா்களுக்கு உடனடியாக வேலை வழங்க கோரி துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதனிடம் எம்எல்ஏ பி.எம்.எல். கல்யாணசுந்தரம் தலைமையில் பிள்ளைச்சாவடி கிராம... மேலும் பார்க்க

மணவெளி தொகுதியில் ரூ.51.5 லட்சத்தில் தாா்ச்சாலை

புதுவை மணவெளி சட்டப்பேரவைத் தொகுதி இடையாா்பாளையம் பகுதியில் உள்ள திருமுறை கலாநிதி கிருஷ்ணசாமி நகா் பகுதியில் ரூ.51.5 லட்சம் மதிப்பில் புதிய தாா்ச்சாலை மற்றும் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணியை சட்டப... மேலும் பார்க்க

குபோ் சிலைக்கு புதுவை முதல்வா் மரியாதை

நகரத் தந்தை என்று அழைக்கப்படும் புதுச்சேரியின் முன்னாள் முதல்வா் எதுவாா் குபேரின் நினைவு நாளையொட்டி அரசு சாா்பிலும், காங்கிரஸ் கட்சி சாா்பிலும் சிலைக்கு மாலை அணிவித்து வியாழக்கிழமை மரியாதை செலுத்தப்ப... மேலும் பார்க்க

ரூ.29 கோடியில் உப்பனாறு வாய்க்கால் பாலம்: விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அமைச்சா் உத்தரவு

உப்பனாறு வாய்க்கால் குறிக்கே ரூ.29 கோடி மதிப்பிட்டில் கட்டப்படும் மேம்பாலத்தின் பணிகளை விரைந்து முடிக்குமாறு பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா். புதுச்சேரி காமரா... மேலும் பார்க்க

புதுவை மத்திய பல்கலை.யில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

புதுவை மத்திய பல்கலைக் கழகத்தில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. மாணவா்கள் நலன் அலுவலகம், தேசிய சேவைத் திட்டம் மற்றும் தேசியப் பயிற்சி படை பிரிவுகள் இணைந்து இதை நடத்தின. புதுவை பல்கல... மேலும் பார்க்க