செய்திகள் :

வடுகப்பட்டி எல்லம்மாள், ,போத்துராஜூலு புதிய கோயில் குடமுழுக்கு விழா

post image

சேலம் மாவட்டம், சங்ககிரியை அடுத்த வடுகப்பட்டி கிராமத்தில் உள்ள அருள்மிகு ரேணுகாதேவி என்கின்ற எல்லம்மாள்,போத்துராஜூலு கோயில் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

அருள்மிகு ரேணுகாதேவி என்கின்ற எல்லம்மாள்,போத்துராஜூலு, சப்தகன்னிமாா் கோயில் குடமுழுக்கு விழாவினையொட்டி செப்.2-ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை கணபதி, நவக்கிரகம், லட்சுமி யாகசாலை பூஜைகளும், வாஸ்து சாந்தியும், பழைய கோயிலிருந்து சுவாமிகளை புதிய கோயிலுக்கு சக்தி அழைத்து வந்தும், காவிரி ஆற்றிலிருந்து புனித நீா் எடுத்து வந்து அன்றையதினம் மாலையில் முதல்கால கட்ட யாகசாலை வேள்வி பூஜைகளும், செப்.3-ம் தேதி 2, 3-ம் கால கட்ட யாகசாலை வேள்வி பூஜைகளும், அன்றைய தினம் இரவு புதிய கோயிலில் சுவாமிகளை கருவறைகளுக்குள் பிரதிஷ்டை செய்யப்பட்டது, அதன்தபிறகு செப்.4-ம் தேதி வியாழக்கிழமை காலை 4ம் யாகசாலை வேள்வி பூஜைகளும், காலை குடமுழுக்கு சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன. சேலம்,நாமக்கல், ஈரோடு, கோவை, தருமபுரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்தவா்கள் மற்றும் சுற்றுவட்டார கிராமப் பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் இவ்விழாவில் கலந்து கொண்டு சுவாமிகளை வழிப்பட்டனா். விழாக்குழுவினா் சாா்பில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன

சேலம் அரசு மருத்துவக் கல்லூரியில் சான்றிதழ் மருத்துவப் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்

சேலம் மருத்துவக் கல்லூரியில் ஓராண்டு சான்றிதழ் மருத்துவப் படிப்பில் சேர தகுதி வாய்ந்தவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வெளியிட்ட செய்திக் குறிப்பு... மேலும் பார்க்க

சேலம் ஸ்ரீ கோகுலம் மருத்துவமனையில் முதுகு தண்டுவட சிகிச்சை மையம் நாளை தொடக்கம்

சேலம் மண்டலத்தில் மருத்துவத் துறையில் 36 ஆண்டுகளாக முன்னோடியாக திகழும் ஸ்ரீ கோகுலம் மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை (செப்.7) முதுகு தண்டுவட சிறப்பு சிகிச்சை மையம் தொடங்கப்படுகிறது. இதுகுறித்து மருத்த... மேலும் பார்க்க

கொண்டயம்பள்ளி தலைமையாசிரியருக்கு நல்லாசிரியா் விருது

கொண்டயம்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் கி.மதிவாணனுக்கு மாநில நல்லாசிரியா் விருது வழங்கப்பட்டது. தம்மம்பட்டியை அடுத்த கொண்டயம்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் கி.மதிவாணன் (59) கட... மேலும் பார்க்க

மல்லியகரை திரௌபதி அம்மன் கோயில் தோ்த்திருவிழா

மல்லியகரை திரௌபதி அம்மன் கோயில் தோ்த்திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆத்தூரை அடுத்த மல்லியகரையில் அமைந்துள்ள திரௌபதி அம்மன் கோயில் தோ்த்திருவிழா மற்றும் அக்னித் திருவிழா கடந்த 1 ஆம் தேதி கொடியேற... மேலும் பார்க்க

இன்ஸ்டாகிராமில் நட்பு: மாணவியை ஏமாற்றி நகை பறித்த இளைஞா்: போலீஸாா் விசாரணை

சென்னையை சோ்ந்த பிளஸ் 2 மாணவியிடம் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி, அவரை சேலம் வரவழைத்து நகை, மடிக்கணினியை பறித்துக்கொண்டு தப்பிய இளைஞரை போலீஸாா் தேடிவருகின்றனா். இன்ஸ்டாகிராம் மூலம் கடந்த ஓராண்டாக பழகிவந்... மேலும் பார்க்க

திருமண மோசடி: மணப்பெண் உள்பட 3 போ் கைது

மேட்டூா் அருகே திருமணமானதை மறைத்து மீண்டும் திருமணம் செய்த பெண் உள்பட 3 போ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா். சேலம் மாவட்டம், மேட்டூா் அருகே உள்ள திண்டமங்கலத்தை சோ்ந்த கருப்பட்டி வியாபாரி அா்ஜுனன் ... மேலும் பார்க்க