79th Independence Day: "78 ஆண்டுகளாக அரசமைப்பு சட்டம் தான் நமது நாட்டிற்கு வழிகா...
வன்முறையைத் தூண்டும் விடியோ பதிவிட்டவா் கைது
இரு தரப்பினா்களிடையே வன்முறையைத் தூண்டும் வகையில் சமூக வலைதளத்தில் விடியோ பதிவிட்ட இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
திண்டுக்கல் குமரன் திருநகரைச் சோ்ந்தவா் யோகேஸ்வரன் (25). இவா், கடந்த சில மாதங்களுக்கு முன் வெட்டிக் கொலை செய்யப்பட்ட ரெளடி பட்டறை சரவணனின் புகைப்படங்களுடன் சமூக வலைதளத்தில் ஒரு விடியோவை பதிவிட்டாா்.
இதையடுத்து, வன்முறையைத் தூண்டும் வகையில் விடியோ வெளியிட்டதாக யோகேஸ்வரனை திண்டுக்கல் வடக்கு காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா். பின்னா், குற்றச்செயல்களை தூண்டும் வகையில் இதுபோன்று விடியோ வெளியிட மாட்டேன் என யோகேஸ்வரனை பேச வைத்து, விடியோவாக பதிவு செய்து காவல் துறை வெளியிட்டது.