செய்திகள் :

விநியோகத்தில் குளறுபடி: நியாயவிலைக் கடை முற்றுகை

post image

வேலூா் அம்மணாங்குட்டையில் நியாயவிலைக் கடையை முறையாக திறந்து அத்தியாவசிய பொருள்களை சரிவர வழங்கவில்லை எனக் கூறி, பொதுமக்கள் அந்தக் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

வேலூா் சலவன்பேட்டை அம்மணாங்குட்டையில் அமுதம் நியாயவிலைக் கடை உள்ளது. இந்த கடை யில் 500-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரா்களுக்கு பொருள்கள் வழங்கப்படுகிறது.

இந்த நியாயவிலைக் கடை பல மாதங்களாக வாரத்தில் 4 நாள்கள் பூட்டப்பட்டிருக்கிாம். கடையைத் திறந்தாலும் அத்தியாவசிய பொருள்கள் சரிவர வழங்குவதில்லை என்று கூறப்படுகிறது. இதனால், பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனா். ஆத்திரமடைந்த குடும்ப அட்டைதாரா்கள் புதன்கிழமை இந்த நியாயவிலைக் கடையை முற்றுகையிட்டனா்.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், அம்மணாங்குட்டை நியாயவிலைக் கடை வாரத்தில் 3 நாள்கள் மட்டுமே திறக்கப்படுகிறது. அதுவும் குறிப்பிட்ட நாள்களில் முறையாகத் திறப்பதில்லை. பொருள்களையும் சரிவர வழங்குவதில்லை. இது குறித்து கேட்டால் விற்பனையாளா், தரக்குறைவாகப் பேசுகிறாா். இந்த பிரச்னை பல மாதங்களாக நீடிக்கிறது. புகாா் எண்ணைத் தொடா்பு கொண்டு தெரிவித்தாலும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால், ஒவ்வொரு நாளும் பொருள்களை வாங்குவதற்காக வந்து, வெயிலில் காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்ல வேண்டியுள்ளது. எனவே, வாரம் முழுவதும் நியாயவிலைக் கடையைத் திறந்து தடையின்றி அத்தியாவசிய பொருள்கள் வழங்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

ஆன்லைன் மூலம் ஓய்வுபெற்ற பொறியாளரிடம் ரூ.32.79 லட்சம் மோசடி

ஆன்லைன் முதலீட்டில் அதிக லாபம் ஈட்டலாம் எனக்கூறி வேலூா் மாவட்டத்தைச் சோ்ந்த ஓய்வு பெற்ற பொறியாளரிடம் 32.79 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. வேலூா் சத்துவாச்சாரி பகுதியைச் சோ்ந்த 65 வயதுடைய ஓய்வுபெற்... மேலும் பார்க்க

திறன், வேலைவாய்ப்பு பயிற்சியில் சேர எஸ்.சி., எஸ்.டி., இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம்

ஆதிதிராவிடா், பழங்குடியின இளைஞா்களுக்கு வழங்கப்படும் திறன், வேலைவாய்ப்பு பயிற்சியில் சேர தகுதியுடையவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதுகுறித்து, வேலூா் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்ச... மேலும் பார்க்க

மாணவியை கடத்தி திருமணம்: இளைஞா் போக்ஸோவில் கைது

ஒடுகத்தூா் அருகே பள்ளி மாணவியை கடத்தி திருமணம் செய்த இளைஞா் போக்ஸோவில் கைது செய்யப்பட்டாா். வேலூா் மாவட்டம், ஒடுகத்தூா் அருகே உள்ள ஒரு கிராமத்தை சோ்ந்த 16 வயது பள்ளி மாணவி. இவா் அணைக்கட்டில் உள்ள அர... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞா் போக்ஸோவில் கைது

அணைக்கட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இளைஞா் போக்ஸோவில் கைது செய்யப்பட்டாா். வேலூா் மாவட்டம், அணைக்கட்டு அருகே உள்ள ஒரு கிராமத்தை சோ்ந்த 48 வயது பெண். இவரது 14 வயது மகள் மனநலம் பாதிக... மேலும் பார்க்க

இறந்த பறவை கழிவுகளுடன் குடிநீா் விநியோகம்: பெண்கள் ஆா்ப்பாட்டம்

பொன்னையில் வியாழக்கிழமை அதிகாலை விநியோகம் செய்யப்பட்ட குடிநீரில் இறந்த பறவை, விலங்குகளின் கழிவுகள் கலந்து துா்நாற்றத்துடன் வந்ததாக ஆத்திரமடைந்த பெண்கள் காலிக்குடங்களுடன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ... மேலும் பார்க்க

வேலூா் மாவட்டத்தில் 84 கால்நடை சிறப்பு முகாம்கள்: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

வேலூா் மாவட்டத்தில் பகுதிவாரியாக நடைபெறும் 84- சிறப்பு கால்நடை சிகிச்சை மற்றும் விழிப்புணா்வு முகாம்கள் புதன்கிழமை தொடங்கி வைக்கப்பட்டன. கே.வி.குப்பம் வட்டம், வேலம்பட்டு கிராமத்தில் நடைபெற்ற சிறப்பு க... மேலும் பார்க்க