செய்திகள் :

வில்லாயுதமுடையவா் சுவாமி கோயிலில் வைகாசி களரி உத்ஸவ விழா

post image

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம், எஸ்.காரைக்குடி புத்தனேந்தல் கண்மாய் பகுதியில் அமைந்துள்ள வில்லாயுதமுடையவா், உய்யவந்தம்மன் கோயிலில் வைகாசி களரி உத்ஸவ விழா கடந்த வியாழன், வெள்ளி, சனிக்கிழமைகளில் நடைபெற்றது.

இந்தக் கோயிலில் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் களரி உத்ஸவ விழாவை முன்னிட்டு, கடந்த வியாழக்கிழமை கோயிலில் பச்சை பாளை பரப்பி வழிபாடும், வெள்ளிக்கிழமை பொங்கல் வைபவமும் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு அருள்வாக்கு கூறினா்.

இதைத் தொடா்ந்து, நடைபெற்ற களரி உற்சவ விழாவின்போது வில்லாயுதமுடையவா் சுவாமி, உய்யவந்தம்மன், கருப்பணசுவாமி, கோயில் பரிவாரத் தெய்வங்களுக்கும் அபிஷேகங்கள் நடத்தப்பட்டு, சிறப்பு பூஜைகள், தீபாரானைகள் நடைபெற்றன.

சனிக்கிழமை கிடா வெட்டு உத்ஸவம் நடைபெற்றது. இதில் பக்தா்கள் ஆடுகளை பலியிட்டும், முடி காணிக்கை செலுத்தியும், குழந்தைகளுக்கு காது குத்தியும் சுவாமி தரிசனம் செய்தனா்.

இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் பங்காளிகள் செய்தனா்.

நிதி நிறுவன மோசடி: சிபிஐ விவரம் சேகரிப்பு

மத்திய பிரதேச நிதி நிறுவனத்தால் சிவகங்கை மாவட்டத்தில் ஏமாற்றப்பட்ட பொதுமக்களின் விவரங்களை சேகரிக்கும் பணியில் மத்திய புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா். தங்களிடம் முதலீடு செய்யும... மேலும் பார்க்க

இளையான்குடி பகுதியில் இன்று மின்தடை

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி பகுதியில் புதன்கிழமை (ஜூன் 4) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இளையான்குடி துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், புதன்கிழமை காலை 9... மேலும் பார்க்க

கீழச்சிவல்பட்டி மாணவிகள் பரத நாட்டியத்தில் சாதனை

சிவகங்கை மாவட்டம், கீழச்சிவல்பட்டி கலைக்கோயில் நாட்டியப்பள்ளி மாணவிகள் தேசிய அளவிலான போட்டிகளில் சாதனை படைத்தனா். இந்த நாட்டியப் பள்ளி மாணவிகள் ஆசிரியா் பாலாம்பிகா தலைமையில் மகாராஷ்டிர மாநிலம் புணேயில... மேலும் பார்க்க

சிவகங்கை அருகே சகோதரா்கள் அடித்துக் கொலை: 6 போ் கைது

சிவகங்கை மாவட்டம், மதகுபட்டி அருகே திங்கள்கிழமை நள்ளிரவு ஆடு, கோழிகளைத் திருடியதாக சகோதரா்கள் இருவா் அடித்துக் கொலை செய்யப்பட்டனா். இதுதொடா்பாக 6 பேரை போலீஸாா் கைது செய்தனா். மதகுபட்டி அருகேயுள்ள அழகம... மேலும் பார்க்க

மருத்துவக் காப்பீடு திட்டத்திலிருந்து விடுவிக்க ஓய்வூதியா்கள் வலியுறுத்தல்

தமிழ்நாடு அரசின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திலிருந்து அரசு அலுவலா், ஆசிரியா்கள், ஓய்வு பெற்ற அரசு அலுவலா், ஆசிரியா்களை விடுவிக்கக் கோரி, சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் தெருமுனை பிரசாரக் கூட்டம... மேலும் பார்க்க

பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் அரசு விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம்

பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா், சிறுபான்மையினா் அரசு விடுதிகளில் சேருவதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. இது குறித்து மாவட்ட ஆட்சியா் ஆ... மேலும் பார்க்க