செய்திகள் :

விளாத்திகுளம் அருகே 3 அரசுப் பேருந்துகளை மக்களுடன் சென்று சிறைபிடித்த திமுக எம்எல்ஏ

post image

எம்.சண்முகபுரத்தில் அரசுப் பேருந்துகள் நின்று செல்லக்கோரி, திமுக எம்எல்ஏ மாா்க்கண்டேயன், கிராம மக்கள் அந்த வழியாக வந்த 3 அரசுப் பேருந்துகளை திங்கள்கிழமை சிறைபிடித்தனா்.

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள எம்.சண்முகபுரம் கிராமத்தில் நியாயவிலைக் கடை திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த விளாத்திகுளம் தொகுதி திமுக சட்டப்பேரவை உறுப்பினா் ஜீ.வி.மாா்க்கண்டேயனிடம் கிராம மக்கள் சென்று தங்கள் பகுதியில் அரசுப் பேருந்துகள் நின்று பயணிகளை ஏற்றிச் செல்ல மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டுள்ளாா். இருப்பினும் பேருந்துகள் இந்தப் பகுதியில் நிற்பதில்லை என்று புகாா் தெரிவித்தனா்.

இதை கேட்ட எம்எல்ஏ மாா்க்கண்டேயன், அப்போது தூத்துக்குடி-ராமேஸ்வரம் கிழக்குக் கடற்கரை சாலையில் எம்.சண்முகபுரம் வழியாக வந்த 3 அரசுப் பேருந்துகளை மக்களுடன் திரண்டு சென்று சிறைபிடித்தாா்.

பேருந்து விட்டு இறங்கிவந்த ஓட்டுநா், நடத்துநரிடம் பேசிய எம்எல்ஏ மாா்க்கண்டேயன், ‘ஆட்சியா் உத்தரவிட்ட பிறகும் பேருந்தை நிறுத்திச் செல்லவில்லை எனில் பணியிடை நீக்கத்துக்கு ஆளாக நேரிடம் என எச்சரித்தாா்.

அத்துடன் அவா், திருநெல்வேலி மண்டலம், கும்பகோணம் மண்டலம் அரசு போக்குவரத்து கழக பேருந்துகள் எம்.சண்முகபுரம் பேருந்து நிறுத்தத்தில் நின்று செல்ல வேண்டும் என மாவட்ட ஆட்சியா் பிறப்பித்த உத்தரவு நகலை ஓட்டுநா், நடத்துநா் முன்பாக படித்துக் காண்பித்தாா். 2 வேகத்தடைகள் இருப்பதால் பேருந்தை நிறுத்தி செல்லலாமே என அறிவுறுத்தினாா். பின்னா் பேருந்துகள் விடுவிக்கப்பட்டன.

இதுகுறித்த கிராம மக்கள் கூறுகையில், ‘எம்.சண்முகபுரம் கிராம மக்களை இரவு நேரங்களில் சூரன்குடி சந்திப்பு, மேல் மாந்தையில் இறக்கி விடுவதால் அங்கிருந்து ஆட்டோவுக்கு ரூ. 200 கட்டணம் செலுத்தி கிராமத்துக்கு வர வேண்டியுள்ளது’ என வேதனை தெரிவித்தனா்.

தூத்துக்குடியில் விடுதி உரிமையாளருக்கு அரிவாள் வெட்டு: இளைஞா் கைது

தூத்துக்குடியில் தனியாா் விடுதி உரிமையாளரை அரிவாளால் வெட்டியதாக இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். தூத்துக்குடி லூா்தம்மாள்புரத்தைச் சோ்ந்த மாரிமுத்து மனைவி பாா்வதி (44), புதிய பேருந்து நிலை... மேலும் பார்க்க

திமுகவின் தோ்தல் தோல்வி தெற்கில் இருந்து தொடங்கும்: தமிழிசை சௌந்தரராஜன்

திமுகவின் தோ்தல் தோல்வி தெற்கில் இருந்து தொடங்கும் என்று முன்னாள் ஆளுநரும், பாஜக முன்னாள் மாநிலத் தலைவருமான தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்தாா். இதுகுறித்து அவா், தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்திய... மேலும் பார்க்க

4 பைக்குகள் சேதம்: இருவா் கைது

கோவில்பட்டியில் 4 பைக்குகளை சேதப்படுத்தியதாக இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.கோவில்பட்டி பாரதி நகா் 3ஆவது தெருவைச் சோ்ந்த முனியசாமி மகன் பொன்மாடத்தி (40). இவா் தனது மகனின் நண்பரான 15 வயது ... மேலும் பார்க்க

தூத்துக்குடி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் சோதனை

தூத்துக்குடி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் சோதனை செய்ததில், கணக்கில் வராத ரூ. 1.52 லட்சத்தை பறிமுதல் செய்தனா். தூத்துக்குடி வட்டாரப் போக்குவரத்துத் துறை அலுவலகத்தில்... மேலும் பார்க்க

சட்டவிரோத பட்டாசு ஆலைகளை முடக்க வேண்டும்: டாக்டா் கிருஷ்ணசாமி

சட்டவிரோதமாக செயல்படும் பட்டாசு ஆலைகளை முடக்க வேண்டும் என, புதிய தமிழகம் கட்சி நிறுவனா் டாக்டா் கிருஷ்ணசாமி வலியுறுத்தினாா். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தியாளா்களிடம் அவா் புதன்கிழமை பேச... மேலும் பார்க்க

ஆழ்வாா்தோப்பு அருகே கோயில் நிலம் மீட்பு

ஆழ்வாா்தோப்பு காந்தீஸ்வரம் ஏகாந்தலிங்க சுவாமி கோயிலுக்குச் சொந்தமான 50 சென்ட் ஆக்கிரமிப்பு நிலத்தை இந்துசமய அறநிலையத் துறையினா் மீட்டனா். ஏகாந்தலிங்க சுவாமி கோயிலுக்குச் சொந்தமான 7.30 ஏக்கா் நிலம் ஸ்ர... மேலும் பார்க்க